வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 9 மே, 2009

ஐந்திணைப் பெயர் மூலம்.

மொழி ஞாயிறு .தேவநேயப்பாவாணர் உலகறிந்த வேர்ச்சொல் ஆய்வாளராவார்.இவர் தம் வாழ்நாளில் தமிழ் மொழியின் தொன்மை,தனிச்சிறப்பு ஆகியவற்றை தம் படைப்புக்கள் வாயிலாக எடுத்தியம்பினார். இவரின் பல்வேறு நூல்களும் தமிழ் இணையப்பல்கலைக்கழக் நூலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவற்றை அவ்விணையதளம் தரும் டேப் என்னும் எழுத்துரு கொண்டே படிக்க இயலும் என்பது ஒரு குறைபாடாக உள்ளது.தமிழ் இணையப்பல்கலைக்கழகம் யுனிகோடு முறைக்கு மாறினால் தமிழுலகம் மேலும் பயன் பெறும்.

தமிழர் வரலாறு என்னும் நூல் பாவாணர் படைப்புகளில் ஒன்றாகவுள்ளது.இந்நூலில்

ஐந்திணைப்பெயர் மூலம் பற்றி வேர்ச்சொல் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள கருத்து தமிழுலகம் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகவுள்ளது. முதல், கரு, உரி என்ற அடிப்படையிலேயே சங்கப்பாடல்களைப் பார்த்த நமக்கு வேர்ச்சொல் அடிப்படையிலான கருத்து புதுமையாகவுள்ளது.அதனைக் கீழே காணலாம்.

ஐந்திணைப்பெயர் மூலம் குறிஞ்சி

குறி = அடையாளம், காலம், அளவு, தடவை.
குறி - குறிஞ்சி = ஒரு பல்லாண்டுக்காலஅளவைக் குறிக்கும் பூ, அப் பூப்பூக்கும் செடி, அச்செடி இயற்கையாக வளரும் மலை, மலையும் மலை சார்ந்தஇடமும், மலைநாடு.
ஒ.நோ: நெரி - நெரிஞ்சி - நெருஞ்சி.
கோடைக்கானல் மலையிலும்நீலமலையிலும் உள்ள குறிஞ்சிச் செடிகள்,பன்னீராண்டிற் கொருமுறை பூக்கின்றன. நீலமலையிலுள்ள தொதுவர் (தோடர்), குறிஞ்சி பூக்குந்தடவையைக் கொண்டே தம் அகவையைக் கணக்கிட்டுவந்தனர். குமரிநாட்டுக் குறிஞ்சிநில வாணரும்இங்ஙனமே செய்திருத்தல் வேண்டும்.
ஆங்கிலேயர், இந்தியா முழுதுமுள்ளகுறிஞ்சிச்செடிகளை யெல்லாம் ஆய்ந்து, குறிஞ்சிவகைகள் மொத்தம் 46 என்றும், அவை பூக்கும்காலவிடையீடு ஓராண்டு முதல் 16 ஆண்டுவரை பல்வேறுஅளவுபட்டதென்றும், கண்டறிந்திருக்கின்றனர்.குமரிநாட்டில் எத்தனைவகை யிருந்தனவோ அறியோம்.

முல்லை
முல் - முன் - முனை = கூர்மை, கடலிற்குள்நீண்டுசெல்லும் கூரிய நிலப் பகுதி.
முல் - முள் = 1. கூர்மை. "முள்வாய்ச்சங்கம்" (சிலப். 4:78). 2. கூரிய நிலைத்திணையுறுப்பு. "இளைதாக முண்மரங் கொல்க" (குறள். 879).3. ஊசி. 4. பலாக்காய் முனை.
முள் - முளை = கூரிய முனை. "முள்ளுறழ்முளையெயிற்று" (கலித்.4)
தனிநிலைக் காண்டம் 101
________________________________________
முல்-முல்லை=கூரிய அரும்புவகை, அஃதுள்ளகொடி, அக் கொடி வளரும் காடு, காடும் காடு சார்ந்தஇடமும். "முல்லை வைந்நுனை தோன்றவில்லமொடு" (அகம். 4:1).
என்பதில், முல்லையரும்பை வைந்நுனைஎன்று அதன் கூர்மையைச் சிறப்பித்திருத்தல்காண்க. வை = கூர்மை.

பாலை
பால் - பாலை = இலையிற் பாலுள்ளசெடியுங்கொடியும் மரமுமான பல்வேறு நிலைத்திணையினங்கள், அவை (முது) வேனிலில் தழைக்கும்நிலப்பகுதி, குறிஞ்சி நிலத்திற்கும் முல்லைநிலத்திற்கும் இடைப்பட்ட வறண்ட காடு, மாரியில்தழைத்தும் கோடையில் வறண்டும் இருக்கும்வன்னிலம்.
பகல் (பகுப்பு) என்னும் சொல்லின்மரூஉத் திரிபான பால் என்னும் வகைப்பெயர்க்கும்,பாலை என்னும் நிலைத்திணைப் பெயர்க்கும்தொடர்பில்லை.

மருதம்
மல் = வளம். "மற்றுன்றுமாமலரிட்டு" (திருக்கோ.178)
மல் - மல்லல் = 1. வளம் ."மல்லல்வளனே." (தொல்.788). 2. அழகு. "மல்லற்றன்னிறமொன்றில்" (திருக்கோ.58, பேரா.) 3.பொலிவு(சூடா.).
மல் - மல்லை = வளம். "மல்லைப்பழனத்து" (பதினொ. ஆளுடை. திருவுலா.8).
மல் - (மர்)-மருது=ஆற்றங்கரையும்பொய்கைக்கரையும் போன்ற நீர்வளம் மிக்கநிலத்தில் வளரும் மரம்.
ஒ.நோ: வெல் - வில்-(விர்) - விருது =வெற்றிச் சின்னம்.
"பருதி.....விருது மேற்கொண்டுலாம்வேனில்" (கம்பரா. தாடகை.5)
மருது - மருதம் = பெரிய மருது, மருது, மருதமரம் வளரும் நீர்வள நிலம், வயலும் வயல் சார்ந்தஇடமும், நீர்வளமும் நிலவளமும் மிக்க அகநாடு.
"அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத்
துறையணி மருது தொகல்கொள வோங்கி" (அகம். 97)
"வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரின்" (புறம்.52)


"பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
தேங்கொண் மருதின் பூஞ்சினை முனையின்
காமரு காஞ்சி துஞ்சும்
ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே." (புறம்.351)
"மருதுயர்ந் தோங்கிய விரிபூம்பெருந்துறை" (ஐங்.33)
"கரைசேர் மருத மேவி" (ஐங்.74)
"திசைதிசை தேனார்க்குந் திருமருதமுன்றுறை" (கலித்.27)
"மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்
மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு" (பதிற்.23)
"வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை" (சிலப்.14:72)
"......................................................காவிரிப்
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த" (குறுந்.258)
இம் மேற்கோள்களிலெல்லாம்,மருதமரம் ஆற்றையும் பொய்கையையும் வயலையுமேஅடுத்திருந்ததாகக் கூறப்பட்டிருத்தல் காண்க.

நெய்தல்

நள்ளுதல் = 1. அடைதல்."உயர்ந்தோர் தமைநள்ளி" (திருவானைக்.கோச்செங்.25). 2. செறிதல். "நள்ளிருள்யாமத்து" (சிலப்.15:105).3. கலத்தல், பொருந்துதல்.4.நட்புச்செய்தல். "நாடாது நட்டலின்கேடில்லை" (குறள்.761) நள்ளார் = பகைவர்.
நள் - நண். நண்ணுதல் = 1.கிட்டுதல்."நம்பனையுந் தேவ னென்று நண்ணுமது"(திருவாச.12:17). 2.பொருந்துதல். 3.நட்புச் செய்தல்.நண்ணுநர் = நண்பர் (பிங்.). நண்ணார் = பகைவர்."நண்ணாரும் உட்குமென் பீடு" (குறள்.1088)
நள் - நளி. நளிதல் = 1. செறிதல்."நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்"(மலைபடு.197). 2. ஒத்தல். "நாட நளிய நடுங்கநந்த" (தொல்.1232)
நள் - நௌ¢ - நெய். நெய்தல் = 1.தொடுத்தல். "நெய்தவை தூக்க" (பரிபா.19:80). 2.ஆடை பின்னுதல். "நெய்யு நுண்ணூல்" (சீவக.3019).3.ஒட்டுதல்.
நெய் = ஒட்டும் பொருளாகிய உருக்கினவெண்ணெய். "நீர்நாண நெய்வழங்கியும்"(புறம்.166:21).2. வெண்ணெய். "நெய்குடை தயிரினுரையொடும்" (பரிபா.16:3).3. எண்ணெய்."நெய்யணி மயக்கம்"

(தொல்.பொருள்.146).4.புனுகுநெய். "மையிருங் கூந்தல்நெய்யணி மறப்ப" (சிலப்.4:56). 5. தேன்."நெய்க்கண் ணிறாஅல்" (கலித்.42). 6.அரத்தம்."நெய்யரி மற்றிய நீரெலாம்"(நீர்நிறக்.51).7.கொழுப்பு. "நெய்யுண்டு"(கல்லா.71).8. நேயம், நட்பு. "நெய்பொதிநெஞ்சின் மன்னர்" (சீவக.3049).
நெய் - நேய் - நேயம் = 1. நெய் (பிங்.).2. எண்ணெய் (பிங்.). 3.அன்பு. "நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்து" (திருக்கோ.39).4.தெய்வப் பற்று. "நேயத்தே நின்ற நிமலனடிபோற்றி" (திருவாச.1:13)
நேயம்-நேசம்= 1.அன்பு. "நேசமுடையவடியவர்கள்" (திருவாச.9:4) .2. ஆர்வம்."வரும்பொரு ளுணரு நேசம்" (இரகு. இரகுவு.38).
நேசம்-நேசி. நேசித்தல். 1. அன்புவைத்தல். "நேசிக்குஞ் சிந்தை" (தாயு.உடல்பொய்.32).2. மிக விரும்புதல்.
"நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்" (தாயு. பரிபூர.13).
நெய் - நெய்தல் = நீர் வற்றியகாலத்திலும் குளத்துடன் ஒட்டியிருக்கும் செடிவகை,அச் செடி வளரும் கடற்கரை நிலம், கடலும் கடல்சார்ந்த இடமும்.

"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு" (மூதுரை,17)
என்பதை நோக்குக.
பண்டைக்காலத்தில், இடப்பெயர்கள்பெரும்பாலும் நிலைத் திணைச் சிறப்புப்பற்றியேஏற்பட்டன.
எ-டு :
ஊர்ப்பெயர் - தில்லை, ஆலங்காடு,பனையூர், நெல்லூர், விராலிமலை, காஞ்சிபுரம்.
நாட்டுப்பெயர்- ஏழ்தெங்கநாடு,ஏழ்குறும்பனை நாடு.
பெருந்தீவுப் பெயர்- நாவலந்தீவு,இலவந்தீவு, தெங்கந்தீவு.
ஒவ்வொரு பெருந்தீவும் பொழில்(சோலை) என்றும் பொதுப் பெயர் பெற்றது. இதனால்,உலகமும் பொழிலெனப்பட்டது.
"ஏழுடையான் பொழில்" (திருக்கோ.7)

குறிஞ்சி முல்லை முதலிய ஐந்திணைநிலப்பெயர்களும், அவ்வந் நிலத்திற்குரியகருப்பொருளும் தட்பவெப்பமும்பற்றியநிலைமையையும், உரிப்பொருள் என்னும் புணர்தல்இருத்தல் முதலிய மக்கள் காதலொழுக்க வகையையும்,இருமடி ஆகுபெயராய்க் குறிக்கும். இவ்வகையிலேயே,
"பாலை நின்ற பாலை நெடுவழி" (சிறுபாண்.11)
"முல்லை சான்ற முல்லையம் புறவின்" (சிறுபாண்.169)
"மருதஞ் சான்ற மருதத் தண்பணை" (சிறுபாண்.186)
என்னும் அடிகளில், முன்னிற்கும்திணைப்பெயர்கள் அமைகின்றன. குறிஞ்சி முல்லைபாலை மருதம் நெய்தல் என்பன, பண்ணுப் பெயர்களாய்அமைவதும் இம் முறையிலேயே.
மேற்காட்டிய சிறுபாணாற்றுப்படையடிகட்கு, "பாலைத் தன்மை நிலைபெற்றமையாற்பிறந்த பாலைநிலமாகிய தொலையாத வழி";"பாலைத் தன்மையாவது, காலையும் மாலையும்நண்பகலன்ன கடுமை கூடிச் சோலை தேம்பிக் கூவல்மாறி, நீரும் நிழலுமின்றி நிலம்பயந் துறந்து,புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம்பெறுவதொரு காலம்" என்றும்;
"கணவன் கூறிய சொற்பிழையாதுஇல்லிருந்து நல்லறஞ் செய்து ஆற்றியிருந்ததன்மையமைந்த முல்லைக்கொடி படர்ந்தஅழகினையுடைய காட்டிடத்து" என்றும்;
"ஊடியுங் கூடியும் போகநுகருந்தன்மையமைந்த மருதநிலத்திற் குளிர்ந்தவயலிடத்து" என்றும்;
நச்சினார்க்கினியர் உரைகூறியிருத்தலைக் காண்க.

இங்ஙனமே, மதுரைக்காஞ்சியிலும்,ஐந்திணை நிலப் பெயர் களும் அவற்றிற்குரியஉரிப்பொருளை ஆகுபெயராகவுணர்த்து கின்றன.
மருதஞ் சான்ற = ஊடலாகியஉரிப்பொருளமைந்த.
முல்லை சான்ற = இருத்தலாகியஉரிப்பொருளமைந்த.
குறிஞ்சி சான்ற = புணர்ச்சியாகியஉரிப்பொருளமைந்த.
பாலை சான்ற = பிரிவாகியஉரிப்பொருளமைந்த.
நெய்தல் சான்ற = இரங்கலாகியஉரிப்பொருளமைந்த.
குறிஞ்சி முதலிய ஐந்திணைப்பெயர்களும் நிலைத்திணையைக் குறிக்கும்போது,மருதம் பாலை என்பன இயற்பெயரும், குறிஞ்சி முல்லைஎன்பன சினையாகுபெயரும், நெய்தல் என்பதுதொழிலாகு
பெயரும் ஆகும்.

ஐந்தும் முன்பு நிலத்தைக்குறித்துப் பின்பு நிலவொழுக்கத்தைக்குறிக்கும்போது, மருதம் பாலை என்பன இருமடியாகுபெயரும் ஏனைய மும்மடி யாகுபெயரும் ஆகும்.
இடத்தின் பெயர் இடவொழுக்கத்தைக்குறிப்பது, கும்ப கோணம் பண்ணிவிட்டான் என்னுங்கொச்சை வழக்குப் போன்றது.
நிலவொழுக்கத்தின் பெயரேநிலத்தைக் குறித்தது என்று சொல்வது, தோகைஎன்னும் பெயர் முதலிற் பெண்ணையே குறித்துப்பின்னர் மயிலுக்காயிற்று என்று சொல்வதொத்ததே.
காதலர் இருவரின் மணவாழ்க்கை, தெய்வஏற்பாட்டால், ஒரோவழி பெற்றோர்க்கும்மற்றோர்க்கும் தெரியாத களவொழுக்க மாகத்தொடங்குவது முண்டு. அது இருமாதத்திற்குள்வெளிப்பட்டு விடும். அதன் பிற்பட்ட வெளிப்படையொழுக்கம் கற்பெனப்படும். மணவாழ்க்கை ஆயிரங்காலத்துப் பயிராதலால், தமிழர் களவொ ழுக்கம்ஆரியர் கூறும் அற்றைப் புணர்ச்சியான யாழோர்(கந்தருவர்) மணமன்று; நல்லாசிரியரிடம்கல்லாதவரும் அயல்நாட்டாரும் கருதுகின்றவாறு,இல்வாழ்க்கை யேற்படாத அநாகரிகக் காலத்துக்காமப் புணர்ச்சியு மன்று.
கற்பில் தொடங்கும் மணவாழ்க்கையேபெரும்பான்மை; களவில் தொடங்குவது மிகமிகச்சிறுபான்மை. கற்பாகத் தொடராத களவு இழிந்தோரொழுக்கமெனப் பழிக்கப்படுவது. இறைவன் ஏற்பாடும்இன்பமிகுதியும் களவின் சிறப்பியல்புகள்.
காதலர் வாழ்க்கை தொடக்கம்முதல்முடிவுவரை நானூறு துறைகளாக வகுக்கப்பட்டு, கோவைஎன்னும் நாடகமாகக் கூறப்பெறும். இது வடவர் கூறும்காமநூலன்று. இம்மை யின்ப விருப்பினர்க்குநுகர்ச்சியால் உவர்ப்பு விளைவித்தும், உலகப்பற்றற்றவர்க்கு உவமை காட்டியும், சிற்றின்பச்செய்தி வாயிலாக மக்களைப் பேரின்பத்திற்குவழிப்படுத்த வேண்டுமென்பதே முதனூலாசிரியர்நோக்கம். இதை மாணிக்கவாசகர் உணர்ந்தேஇறுதியில் திருச்சிற்றம்பலக் கோவை பாடினார்.
"ஆரணங்காண் என்பர் அந்தணர் யோகியர்ஆகமத்தின்
காரணங்காண் என்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்
சீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே"
என்னும் மதிப்புரைத் தனிப்பாடலைநோக்குக.

கோவைஎன்னும் நாடகமாகக் கூறப்பெறும். இது வடவர் கூறும்காமநூலன்று. இம்மை யின்ப விருப்பினர்க்குநுகர்ச்சியால் உவர்ப்பு விளைவித்தும், உலகப்பற்றற்றவர்க்கு உவமை காட்டியும், சிற்றின்பச்செய்தி வாயிலாக மக்களைப் பேரின்பத்திற்குவழிப்படுத்த வேண்டுமென்பதே முதனூலாசிரியர்நோக்கம். இதை மாணிக்கவாசகர் உணர்ந்தேஇறுதியில் திருச்சிற்றம்பலக் கோவை பாடினார்.
"ஆரணங்காண் என்பர் அந்தணர் யோகியர்ஆகமத்தின்
காரணங்காண் என்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்
சீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே"
என்னும் மதிப்புரைத் தனிப்பாடலைநோக்குக

-தமிழர் வரலாறு பக்கம் -100-105.

21 கருத்துகள்:

  1. பெயரில்லா9 மே, 2009 அன்று AM 10:40

    குணா அவர்களே...உங்கள் பதிவு படித்தேன்...மன்னிக்கவும் இதை புரிந்துக்கொள்ளும் தமிழ் அறிவோ திறனோ எனக்கு இல்லை.... நானிலம் பற்றி இருக்கு இதில் நாம் அறிந்து கொள்ளவேண்டியது என்ன என்று என் சிற்றிவுக்கு எட்டவில்ல.ஆகையால் விவரிக்கவும்.. நன்றி

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும்,வினாவுக்கும் நன்றி!

    இனக்குழுவாக வாழ்ந்த மனிதன் நிலவுடைமைச் சமூக வாழ்விற்கு மாறிய பின் தான் பண்பாடு, நாகரீகம் உள்ளிட்ட பண்புகள் மனிதனுக்கு ஏற்பட்டன.
    விலங்கோடு விலங்காக வேட்டையாடி நாடோடியாக வாழந்தவன், நிலைத்து ஓரிடத்தில் இருந்து வாழத் தலைப்பட்டான். தான் இருந்த நிலங்களை அடிப்படையாகக் கொண்டு, தம் வாழ்வியலை அமைத்துக் கொண்டான்.
    குறிஞ்சி(மலை மலை சார்ந்த பகுதி)
    முல்லை(காடும் காடு சார்ந்த பகுதிகளும்)
    மருதம்(வயலும் வயல் சார்நத பகுதிகளும்)
    நெய்தல்(கடலும் கடல் சார்ந்த பகுதிகளும்)
    பாலை(முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்)

    இவ்வாறு நிலப்பாகுபாடு தோன்றியது.இந்நிலங்களுக்கான பெயர்க் காரணங்களை ஆய்வாளர்கள் பல விதமாகக் கூறுவதுண்டு.

    பூக்களை அடிப்படையாகக் கொண்டு இப்பெயர் வந்தது என்பது பெருமக்கள் ஒப்பிய முடிவு.

    பல மொழிகள் எழுத்துக்களுக்கு இலக்கணம் கூறுவதுண்டு.
    ஆனால் நம் தமிழ்மொழி எழுத்து, சொல்லோடு, பொருளுக்கும் (வாழ்க்கைக்கும்)இலக்கணம் கூறியுள்ளது.

    தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் தமிழின் தொன்மைக்கும்,தனித்தன்மைக்கும் பெரும் சான்றுகளாக உள்ளன.

    தொல்காப்பியம் என்னும் இலக்கணம் , வாயிலாகவும் சங்க இலக்கியம் என்னம் இலக்கியம் வாயிலாகவும் பழந்தமிழரின் வாழ்வியல் முறைகளை அறியமுடிகிறது.

    சங்க கால வாழ்வியலில் நிலவுடைமை சமூக வாழ்வியல் முறை குறிப்பிடத்தக்கது.

    சங்க இலக்கியம் முதல்,கரு,உரி என்னும் பாகுபாடு பெறுவதுண்டு.

    நிலம் முதல் பொருளாக மதிக்கப்படும்.

    இந்த நிலங்களுக்கான பெயர்காரணத்தை பாவாணர் அளவுக்கு யாரும் விளக்கியதில்லை.

    தமிழ் ஞால முதன் மொழி என்ற பாவாணர் , அதற்கான கூறுகளை இவ்விளக்கத்தின் வாயிலகக் கூறியுள்ளார்.

    (வேர்ச் சொல்லாய்வு என்பது - மொழியின் வளர்ச்சியை ஆய்வு செய்யும் துறையாகும்)

    இவ்விடுகை தமிழாய்வாளர்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆக்கப்பட்டது.
    சங்க இலக்கியம்,தொல்காப்பியம், வேர்ச்சொல் ஆகியன மிகப்பெரிய தமிழ்த்துறைகள்.
    மூன்றும் உள்ளடக்கியதாக இக்கட்டுரை உள்ளதால் தங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை எனக் கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. முயன்ற வரை முக்கிப் பார்த்தேன், முடியவில்லை கட்டுரையின் பொருளை விளங்கிக் கொள்ள!

    //குணா அவர்களே...உங்கள் பதிவு படித்தேன்...மன்னிக்கவும் இதை புரிந்துக்கொள்ளும் தமிழ் அறிவோ திறனோ எனக்கு இல்லை.... நானிலம் பற்றி இருக்கு இதில் நாம் அறிந்து கொள்ளவேண்டியது என்ன என்று என் சிற்றிவுக்கு எட்டவில்ல.ஆகையால் விவரிக்கவும்.. நன்றி//

    வழிமொழிகிறேன்.இவ்விடுகை M.A. தமிழ் மாணவருக்கு எழுதிய பாடம் போலுள்ளது.
    ஐயா, இணையத்தில் உலாத்துவோர் பெரும்பாலும் தமிழ் அறிவில் ஒண்ணாம் வகுப்பு மாணவர்கள் என்பதை உணரவும்.

    பதிலளிநீக்கு
  4. இந்த இடுகை கல்விப்புலம் சார்ந்த ஆய்வாளர்களுக்காக இடப்பட்டது.
    எதிர்கால தமிழ் வளர்ச்சி குறித்து இவ்வாறு ஒரு நூல் உள்ளது என தெரியப்படுத்தினேன்..

    கருத்தரங்கு, மாநாடு, நூல்கள், ஆய்வேடுகள், இன்னும் எத்தனையோ பதிவுகளில் நிலம் குறித்த சிந்தனை தவறாக எடுத்துரைக்கப்படுகின்றன. இந்நிலை மாறவே இவ்விடுகை இடப்பட்டது.

    தங்கள் தமிழார்வத்துக்கு வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி

    இணையத்தில் உலவுபவர்கள் தமிழறிவு குறைவாக உள்ளார்கள் என்று நான் மதிப்பிடவில்லை.

    தமிழறிவும், ஆர்வமும் அவர்களிடம் தான் அதிகமாகவுள்ளது என எண்ணுகிறேன்.

    என்ன செய்ய என்பதிவு கல்விப்புலம் சார்ந்தோரையும் சென்றடைய வேண்டும் என் நினைக்கிறேன்.
    அந்த எண்ணத்தின் வெளிப்பாடே இவ்விடுகை..

    பதிலளிநீக்கு
  5. விளக்கத்திற்கு நன்றி ஐயா.

    நான்தான் தெரியாம இந்தப்பக்கம் வந்துவிட்டேன் போலிருக்கு. போகட்டும் விடுங்க.

    உங்களின் பின்தொடர்வோர் பட்டியலில் இப்பத்திவையும் இணைக்கலாம். இராம. கி ஐயாவின் அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா9 மே, 2009 அன்று PM 3:16

    சங்க இலக்கியம் முதல்,கரு,உரி என்னும் பாகுபாடு பெறுவதுண்டு.

    நிலம் முதல் பொருளாக மதிக்கப்படும்.

    நிலம் முதல் பொருளாக மதிக்கப்பட்டால், கரு, உரி என்றால்?

    குணா அவர்களே தங்கள் விளக்கத்துக்கு நன்றி பொருமையுடன் விளக்கினிர் புரிந்துக்கொள்ளும்படியும் இருந்தது... நானும் இதை பற்றி அறிந்து கொள்ள உங்கள் பதிவு ஒரு வாய்பை ஏற்படுத்தியது....மற்றும் என் எழுத்துக்களுக்கு கருவாகவும் உரமாகவும் இருக்கும்..

    பதிலளிநீக்கு
  7. முதற் பொருளாவது, நிலமும் காலமும் என இருவகைப்படும்

    ''முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின்
    இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே''

    (அகத். 4)


    கருப்பொருளாவது, இடத்தினும் காலத்தினும் தோற்றும் பொருள். அது, தேவர் மக்கள் விலங்கு முதலாயினவும், உணவு செயல் முதலாயினவும், பறை யாழ் முதலாயினவும், இன்னவான பிறவும் ஆகிப் பலவகைப்படும்.

    ''தெய்வம் உணாவே மா மரம் புட்பறை
    செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
    அவ்வகை பிறவும் கருஎன மொழிப''

    (அகத். 20)

    என்றா ராகலின்.

    உரிப்பொருளாவது, மக்கட்கு உரிய பொருள், அஃது அகம், புறம் என இருவகைப்படும்.

    அகமாவது, புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் எனவும், கைக்கிளை, பொருந்திணை எனவும் எழுவகைப்படும்.

    ''புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
    ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
    தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே''

    (அகத். 16)

    சங்க கால வாழ்வியல் இன்றைய வாழ்விலிருந்து மாறுபட்டது. வாழ்க்கையை அகம்,என்றும் புறம் என்றும் பிரித்தனர்
    அகத்தை களவு என்றும் கற்பு என்றும் பகுத்தனர்
    களவு என்பது காதல் வாழ்வியல்
    கற்பு என்பது திருமண வாழ்வியல்

    இந்த அகவாழ்க்கையை எடுத்தியம்ப வரும் மாந்தர்களை

    தலைவன்,தலைவி,தோழி,பாங்கன்,நற்றாய்,செவிலி,கண்டோர் என்றே அழைத்தனர்

    சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார்

    என்பது அகத்திணை மரபு

    அதாவது தலைவன்,தலைவி,தோழி என்று தான் குறிப்பிப்பட்டனர்.

    இந்த அகவாழ்வியலை எடுத்தியம்ப முதல்,கரு,உரி என்பன அடிப்படைகளாகும்.

    முதல் என நிலமும் பொழுதும் குறிப்பிடப்பட்டன

    நிலமாவது- குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை


    பொழுதுகளாக

    10 பொழுதின் வகை
    பெரும்பொழுது என்றா சிறுபொழுது என்றா
    இரண்டு கூற்றது இயம்பிய பொழுதே 10
    1.11 பெரும்பொழுதின் வகை
    காரே கூதிர் முன்பனி பின்பனி
    சீர் இளவேனில் வேனில் என்றாங்கு
    இருமூன்று திறத்தது தெரி பெரும்பொழுதே 11
    1.12 சிறுபொழுதின் வகை
    மாலை யாமம் வைகறை எற்படு
    காலை வெங்கதிர் காயு நண்பகல் எனக்
    கைவகைச் சிறுபொழுது ஐவகைத்து ஆகும் 12
    1.13 குறிஞ்சியில் பெரும்பொழுது சிறுபொழுது
    கூதிர் யாமம் முன்பனி என்றிவை
    ஓதிய குறிஞ்சிக்கு உரிய ஆகும் 13
    1.14 பாலையில் பெரும்பொழுது சிறுபொழுது
    வேனில் நண்பகல் பின்பனி என்று இவை
    பான்மையின் உரிய பாலைதனக்கே 14
    1.15 முல்லையில் பெரும்பொழுது சிறுபொழுது
    மல்கு கார் மாலை முல்லைக்கு உரிய 15
    1.16 மருதத்தில் சிறுபொழுது
    இருள் புலர் காலை மருதத்திற்கு உரித்தே 16
    1.17 நெய்தலில் சிறுபொழுது
    வெய்யோன் பாடு நெய்தற்கு உரித்தே 17
    1.18 மருதத்தில் நெய்தலில் பெரும்பொழுது
    மருதம் நெய்தல் என்றிவை இரண்டிற்கும்
    உரிய பெரும்பொழுது இருமூன்றும்மே 18
    என பொழுதுகள் வரையறை செய்யப்பட்டன.

    உரிப்பொருள் என்பது

    கூடல்,ஊடல்,இருத்தல்,இரங்கல்,பிரிவு

    என வகைப்படும்.

    இன்னும் அகப்பொருள் மரபுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்

    இந்த முதல் கரு உரி என்னும் இலக்கண வரையறை தான் பழந்தமிழர் காதலை எடுத்தியம்பி மரபுகள் ஆகும் சங்கப் பாடல்களை இந்த அடிப்படையில் தான் காணுகிறோம்.

    பதிலளிநீக்கு
  8. இவ்வாறான பதிவுகள் இணைய வழி கிடைப்பது எவ்வளவு ஆரோக்கியமான விடயம். முழுவதுமாக வாசிக்கவில்லை. ஆனால் தேவைப்படும்போது இவ்வாறான் ஆக்கங்கள் கிடைக்கும்போது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    பதிலளிநீக்கு
  9. நன்றிங்க

    அன்புடன்
    திகழ்

    பதிலளிநீக்கு
  10. கருத்துரை நல்கிய அன்பு நெஞ்சங்களுக்கு நனி நன்றி!

    பதிலளிநீக்கு
  11. தமிழர் வரலாறு -- ஐந்திணை பற்றிய தொகுப்பு அருமை!!

    பதிலளிநீக்கு
  12. கருத்துரை நல்கியமைக்கு மிக்க நன்றி மருத்துவர் ஐயா..

    பதிலளிநீக்கு
  13. அருமையான பதிவு முனைவரே

    ஆரோக்கியமான பதிவும் கூட‌

    வாழ்த்துக்கள் நாங்க எல்லாம்

    சும்மா என்னவோ எழுதறோம்

    உங்கள் பதிவு எல்லாம்

    புத்தகமா வெளியிடனும்

    பதிலளிநீக்கு
  14. கருத்துரையிட்ட... தமிழரசி,இந்தியன்,குறிஞ்சிக்கபிலர்,மதுவதனன்,திகழ்மிளிர்,தேவன் மாயம்,சக்தி உள்ளிட்ட நண்பர்களுக்கு நன்றி...
    தமிழால் இணைவோம்....

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா11 மே, 2009 அன்று AM 11:12

    நன்றி குணா....விளக்கத்துக்கு....மொத்தமும் தெளிவாக விளங்கவில்லை ஏனெனில் அதற்கு இன்னும் எனக்கு தமிழ் புலமை வேணும் அதனால் என்ன போக போக பயின்றால் போயிற்று....

    பதிலளிநீக்கு
  16. மகிழ்ச்சி
    தங்கள் முயற்சி தங்களை மேலும் புலமையுடையவராக்கும்.
    இணையத்திலேயே தமிழ் மொழியின் இலக்கணம் உள்ளிட்ட பல தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
    தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தில் www.tamilvu.com நூலகம் பகுதியில் சென்று பார்த்தால் பல தமிழ் இலக்கண, இலக்கிய,திறனாய்வு நூல்களை உரையுடன் காணலாம் .படித்துப் பயன் பெறுக..

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துகள் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளியாகி உள்ளது

    பதிலளிநீக்கு
  18. vikatan gud blogsil ungal pathivu vanthamaiku

    valthukkal

    பதிலளிநீக்கு
  19. பாவாணரின் நூலொன்று தற்செயலாக பழைய பொத்தகக் கடையில் கிடைத்தது. வடமொழி வரலாறு என்பது தலைப்பு. முழுவதும் படிக்கவில்லை. இணையப் பல்கலைகழக நூலகத்தில் அவருடைய நூல்கள் கிடைக்கின்றன என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி முனைவர் ஐயா. திருக்குறளுக்கு ஐயாவின் விளக்கவுரைகளை அங்கே கண்டிருக்கிறேன். மற்ற நூல்களை இனி மேல் தான் பார்க்க வேண்டும்.

    ஐந்திணைப் பெயர்களுக்கும் மிக அருமையான விளக்கம் அளித்திருக்கிறார். குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம் வரை வேகமாகப் படித்து வந்துவிட்டேன். ஒவ்வொன்றும் நன்றாகப் புரிந்தது. நெய்தல் வந்த போது தொடர்ந்து எடுத்துக்காட்டுகளும் வேர்ச்சொற்களும் அவற்றின் பொருட்களும் சொல்லப்பட்டனவென்பதால் வரிசையாகப் படித்து வர இயலவில்லை. அடுத்த முறை பொறுமையாகப் படித்துப் பார்க்கவேண்டும்.

    பின்னூட்டங்களில் நீங்கள் தந்த விளக்கங்களும் அருமை. முதல் பதில் கொஞ்சம் எளிமையாக இருந்தது போன்றும் அடுத்த பதில் மிக அவக்கரத்துடன் எல்லா விளக்கத்தையும் (கரு, உரி) சொல்லிச் சென்றது போலவும் தோன்றியது. பின்னூட்டங்களில் சொன்னவற்றை இன்னும் கொஞ்சமே கொஞ்சம் எளிமைப்படுத்தி இடுகைகளாகவும் இடவேண்டும் என்று வேண்டுகிறேன். நீங்கள் சொன்னது போல் தமிழார்வமும் தமிழறிவும் உடையவர்களும் இணையத்தமிழர்களில் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவராக உங்கள் பதிவிற்கு வருகிறார்கள்.

    நீங்கள் படித்த நூல்களை அறிமுகம் செய்யும் அதே நேரத்தில் 'கவை மகனார்' போன்ற நீங்கள் எழுதும் கட்டுரைகளும் நிறைய எழுதினால் தொடர்ந்து வந்து படித்துப் பயன்பெறும் அன்பர்கள் எண்ணிக்கை பெருகும் என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு