வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 30 மே, 2009

சங்க இலக்கியக் களஞ்சியம்

சங்க இலக்கியங்களில் இன்றுவரை பல்வேறு நோக்கங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகளின் விவரங்கள் அடங்கிய ஆய்வடங்கல்கள் இன்றைய ஆய்வாளர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளன. அவை இணையத்தில் கிடைக்காதது ஒரு குறையாகவே உள்ளது.

எம்பில்,பிஎச்டி போன்ற பட்டங்களுக்காக ஆய்வு செய்வோர் முன்பு ஆய்வு செய்யப்பட்ட களங்களையே மீண்டும் மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அவர்களுக்காகவே உருவான நூல்தான்,
சங்க இலக்கியக் களஞ்சியம் ஆகும்.
இந்நூலை ச.மெய்யப்பன் அவர்கள் பதிப்பித்துள்ளார்கள்.

இந்நூல் கிடைக்குமிடம்.

மெய்யப்பன் தமிழாய்வகம்
80 புதுத்தெரு
விலை-200
பதிப்பான ஆண்டு 2000

பொருளடக்கம்

சங்க இலக்கிய நூற்களஞ்சியம்
சங்க இலக்கிய கட்டுரைகள்
சங்க இலக்கிய ஆய்வேடுகள்
சங்க இலக்கிய பதிப்புகள் அட்டவணைகள்
சங்க இலக்கிய களஞ்சிய செய்திகள்

இந்த நூலின் சிறப்பு

சங்க இலக்கிய நூற்களஞ்சியம்(789 நூல்களைப்பற்றி)
சங்க இலக்கிய கட்டுரைகள்(4007 இலக்கியக்கட்டுரைகள்)
சங்க இலக்கிய ஆய்வேடுகள்(564 ஆய்வேடுகள்)
சங்க இலக்கிய பதிப்புகள் அட்டவணைகள்(239 அட்டவணைகள்)
சங்க இலக்கிய களஞ்சிய செய்திகள்(1103 செய்திகள்)
என்பதாகும்.
ஆய்வு நூல்களின் உள்ளடக்கத்தையும் குறிப்பிட்டுள்ளமை இந்த நூலுக்கு மேலும் சிறப்பளிப்பதாகவுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தும் 2000 மாவது ஆண்டு வரையே எடுக்கப்பட்டுள்ளது.
இன்றுவரை சங்க இலக்கிம் குறித்து கல்லூரிகள் ,பல்கலைக்கழகங்களில் நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளே மீண்டும் செய்யப்படாமலிருக்கவும்,புதிய களங்களில் சங்க இலக்கியங்களை பன்முகநோக்கில் ஆயவும் இணையத்திலேயே ஆய்வடங்கல்கள் கிடைக்கும் வகை செய்யவேண்டும்..

சங்க இலக்கியங்கள் சங்க கால வரலாறாகவும் திகழும் தகைமையுடையவை.ஆகையால் சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்யவிரும்பும் ஆய்வாளர்கள் இதுபோன்ற சங்க இலக்கிய ஆய்வடங்கல்களைப் பார்த்துவிட்டு பின் ஆய்வுக்குப் புகுவது நலம் பயப்பதாக அமையும்.

2 கருத்துகள்:

  1. பெயரில்லா31 மே, 2009 அன்று AM 9:43

    பயனுள்ள தகவல்கள்.....இத்துறையை தேர்வு செய்வோர்க்கும் மற்றும் தமிழ் ஆர்வலர்க்கும் பயன்பாடாய் இருக்கும் நன்றி குணா....

    பதிலளிநீக்கு