வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 23 ஜூலை, 2009

செம்மொழி ஆய்வுக்கோவை.

கே.எஸ்.ஆர்.கலை அறிவியல கல்லூரியில் முதலாவது செவ்வியல் மொழி மாநாடு 14.06.09 அன்று நடைபெற்றது. பன்னாட்டு அளவில் நடைபெற்ற இம்மாநாட்டின் கட்டுரைகள் ஆய்வுக்கோவையாக விழாவிலேயே வழங்கப்பட்டன. செம்மொழி குறித்த 141 ஆய்வாளர்கள் கட்டுரை வழங்கினர். தமிழ் மொழியின் பல்வேறு செம்மைத் தன்மைகளையும் ஆய்ந்துரைப்பனவாகக் கட்டுரைகள் அமைந்தன. அக்கட்டுரைகள் யாவும் உலகு பரவி வாழும் தமிழர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு........ ஆய்வுக் கோவையை மின்னூலாக்கி ஸ்க்ரைப்ட் தளத்தில் பதிவு செய்துள்ளேன்... ஆய்வுக்கோவையில் இடம்பெற்ற கட்டுரைகளைப் படிக்க இங்கு சுட்டவும்.... மாநாடு பற்றி திண்ணை இணையதளத்தில் வெளியான செய்தியைப் படிக்க இங்கு சுட்டவும்.. கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை வலைப்பதிவைப் பார்க்க இங்கு சுட்டவும்.

10 கருத்துகள்:

  1. தகவலுக்கும். உங்கள் தமிழ் பணிக்கும் நன்றிகள், உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சந்ரு........

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள தகவல்கள். தமிழ் தொடர்பாக தேடுபொறிகளில் தேடுவோர்க்கு பயனுள்ளவையாக இருக்கும். :)

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஊர்சுற்றி.....

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள்!

    புத்தக கண்காட்சியில் இடம் பெறுமா!
    வாங்கத்தான்!

    பதிலளிநீக்கு
  6. இடம் பெறும் வால்பையன்......
    வருகைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் குணா.கட்டுரை எழுத முடியவில்லை நூவினைக் கண்டேன் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்தரங்கில் நானும் பங்கு பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என்னுடைய கட்டுரையும் அதில் இடம் பெற்று இருக்கிறது நினைவு படுத்தியதற்கு நன்றி நண்பா

    பதிலளிநீக்கு