வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 28 அக்டோபர், 2009

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியர் உரை....

தொல்காப்பியம் தமிழ் இலக்கண நூல்களுள் மிகவும் பழமையானது.
எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டது.
யாப்பு,அணி என்னும் இலக்கண மரபுகளும் தொலகாப்பியத்திலிருந்தே வளர்ச்சி பெற்றன.
தமிழ் என்னும் மொழிக்கான இலக்கண மரபுகளுடன் வாழ்க்கைக்கான இலக்கணத்தையும் வகுத்த சிறப்பு தொல்காப்பியருக்கு உண்டு. இன்றைய அறிவியல் வளர்ச்சியில் தமிழ் மூல நூல்கள் யாவும் இணையத்தில் பல வடிவங்களில் கிடைக்கின்றன. ஆயினும் உரைநூல்கள் குறைவாகவே கிடைக்கின்றன. இந்நிலையில் நூலகம் என்னும் இணையதளத்தில் பல அரிய நூல்களும் மூலநூலாகவும், உரை நூல்களாகவும் பிடிஎப் முறையில் கிடைப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்..
நூலகம் இணையதளத்தில் கிடைத்த தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தின் நச்சினார்க்கினியர் உரை ஐபேப்பர் வடிவில்..

Thol-ezhuthu urai

இதனை பெரிதாக்கிப் படிக்கவும், பதிவிறக்கிக் கொள்ளவும் முடியும்..

2 கருத்துகள்: