வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 23 நவம்பர், 2009

சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பக்கூடாது ஏன்?

smail


சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக் கூடாது என்று பன்னெடுங்காலமாகவே கூறிவருகிறோம். அதற்கு காரணங்களும் பலவாகவே கூறப்பட்டு வருகின்றன..

பாம்பை விட கொடிய விசத்தன்மை கொண்டவளா பெண்?
உயிரைக் கொல்லும் தன்மையுடையவளா பெண்?

பெண் இல்லாத உலகை நினைத்துக் கூடப் பார்க முடியாது.
தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக என ஒவ்வொருவர் வாழ்விலும் பெண் தவிர்கமுடியாதவளாகவே இருக்கிறாள் ஆயினும்…

ஏன் சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற கூறினர்..?

சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலிருந்து ஓர் சான்று,


இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கர்க்கு உரைத்தது.

(தலைவியை இயல்பாக ஓரிடத்தல் தலைவன் பார்தலுக்கு இயற்கைப் புணர்ச்சி என்று பெயர்.)

“சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள், முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள் - எம் அணங்கியோளே“

(குறுந்தொகை- 119- சத்திநாதனார்.)

சிறிய வெண்மையான பாம்பின் குட்டியானது, காட்டு யானையை வருத்தியது போல இளமையுடையவளும், மூங்கில் முளை போன்ற ஒளியுடைய பற்களைக் கொண்டவளும், வளையைக் கையில் அணிந்த ஒருத்தி என்னை வருந்தச் செய்தாள் என்று தலைவன் பாங்கனிடம் கூறுகிறான்.

· பாம்பு தோற்றத்தால் அழகிய கோடுகளை உடையதாயினும் செயலால் மிகவும் கொடியது.
· பெண் அழகிய தோற்றம் உடையவளாயினும் உயிரைக் கொல்லும் உணர்வுகளைத் தூண்டக்கூடியவள்.
· பாம்பு தன் பற்களில் கொண்ட விசத்தன்மையால் அடுத்தவரைத் துன்புறுத்தும்.
· பெண் சிரிப்பு என்னும் முறுவல் குறிப்பால் காண்போர் நெஞ்சை வருத்தும் இயல்பினள்.
· பாம்பின் குட்டி தீண்டினால் உடலெங்கும் விசம் பரவும்.
· பெண்னைப் பார்த்தல், அவள் உடல் தீண்டுதல் ஆகியவற்றால் ஆணின் உடலில் பல மாற்றங்கள் நிகழும். அதனால் பெண்வழிச் சேரலில் ஆண் தன் வாழ்க்கையைத் தொலைக் நேரிடும்.

இவ்வாறு பாம்புக்கும், பெண்ணுக்கும் பல ஒற்றுமைகளைக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.


ஆண் மீது பெண்ணுக்கும், பெண் மீது ஆணுக்கும் இருக்கும் ஈர்ப்பே மனித இனம் வளர்ச்சி பெறக் காரணமாகிறது.

இந்த ஈர்ப்பு மனித இனம் மட்டுமன்றி உயிர்கள் யாவற்றுக்கும் பொதுவானது.

காதல் - அன்பு - ஈர்ப்பு ஆகியவை உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களாகும்.

இந்த வேதியியல் மாற்றங்களால் ஆணும் பெண்ணும் தன் வாழ்வியல் நெறிகளில் பிறழ்ந்துவிடக்கூடாது என்று பல வழிகளில் நம்முன்னோர் அறிவுறுத்தினர்.

அவ்வடிப்படையில் பெண் மீது கொண்ட ஈடுபாட்டால் ஆண் தன் வாழ்கையைத் தொலைத்துவிடக்கூடாது என்று அறிவுறுத்தவே..

சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே

என்று அறிறுத்தினர்.



சீறும் பாம்பு யாரைப் பார்த்துச் சீறினாலும்
தன்னைப் பார்த்துச் சீறுவதாகவே நம்ப வேண்டும்!

சிரிக்கும் பெண் தன்னைப் பார்த்துச் சிரித்தாலும்
ஒரு நொடிப் பொழுது யோசிக்க வேண்டும்……

ஏனென்றால் பாம்பு கடித்தால் உயிர் உடனே போய்விடும்!

பெண் மீது கொண்ட காதலால் உயிர் அடிக்கடி போய்வரும்!

21 கருத்துகள்:

  1. அந்தக் காலத்திலேயே பல பேர் தாடி வளர்த்துக் கொண்டு, பாடல் பாடிக்கொண்டு இருந்திருப்பார்கள் போல?

    பதிலளிநீக்கு
  2. நல்ல விளக்கம் அய்யா. நன்றி

    பதிலளிநீக்கு
  3. //ஏனென்றால் பாம்பு கடித்தால் உயிர் உடனே போய்விடும்!

    பெண் மீது கொண்ட காதலால் உயிர் அடிக்கடி போய்வரும்!//

    பாம்பு - சீறிய பின்னர்க் கொத்தும்.
    பெண் - கொத்திய பின்னர்ச் சீறுவாள்.

    (நகைச்சுவைக்காகச் சொன்னேன்; அப்படியே எடுத்துக்கொள்ளாதீர்கள்!)

    பதிலளிநீக்கு
  4. //அவ்வடிப்படையில் பெண் மீது கொண்ட ஈடுபாட்டால் ஆண் தன் வாழ்கையைத் தொலைத்துவிடக்கூடாது என்று அறிவுறுத்தவே//

    விளக்கம் நல்லா இருக்கு குணா ஸார்.கல்யாணம் ஆன ஒருவன் தன் மனைவியிடமும்,காதலன் தன் காதலியிடமும் மட்டும் காதல் ஈடுபாடு கொண்டு இருந்தால் தவறில்லை.இந்த ஈடுபாடே மற்ற பெண்கள் மீது திரும்புபோதுதான் சிக்கல்கள்,தடுமாற்றம் ஏற்பட்டு வாழ்க்கை திசை மாறுகிறது.

    பதிலளிநீக்கு
  5. கனககோபி, 22 November 2009 23:26

    அந்தக் காலத்திலேயே பல பேர் தாடி வளர்த்துக் கொண்டு, பாடல் பாடிக்கொண்டு இருந்திருப்பார்கள் போல?


    கருத்துரைக்கு நன்றி கனககோபி..

    பதிலளிநீக்கு
  6. வானம்பாடிகள், 23 November 2009 00:01

    நல்ல விளக்கம் அய்யா. நன்றி


    கருத்துரைக்கு நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  7. அ. நம்பி said...

    //ஏனென்றால் பாம்பு கடித்தால் உயிர் உடனே போய்விடும்!

    பெண் மீது கொண்ட காதலால் உயிர் அடிக்கடி போய்வரும்!//

    பாம்பு - சீறிய பின்னர்க் கொத்தும்.
    பெண் - கொத்திய பின்னர்ச் சீறுவாள்.

    (நகைச்சுவைக்காகச் சொன்னேன்; அப்படியே எடுத்துக்கொள்ளாதீர்கள்!)


    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பரே..

    பதிலளிநீக்கு
  8. //ஏனென்றால் பாம்பு கடித்தால் உயிர் உடனே போய்விடும்!

    பெண் மீது கொண்ட காதலால் உயிர் அடிக்கடி போய்வரும்!//

    பாம்பு - சீறிய பின்னர்க் கொத்தும்.
    பெண் - கொத்திய பின்னர்ச் சீறுவாள்.

    (நகைச்சுவைக்காகச் சொன்னேன்; அப்படியே எடுத்துக்கொள்ளாதீர்கள்!)

    23 November 2009 00:24
    Delete
    Blogger பூங்குன்றன்.வே said...

    //அவ்வடிப்படையில் பெண் மீது கொண்ட ஈடுபாட்டால் ஆண் தன் வாழ்கையைத் தொலைத்துவிடக்கூடாது என்று அறிவுறுத்தவே//

    விளக்கம் நல்லா இருக்கு குணா ஸார்.கல்யாணம் ஆன ஒருவன் தன் மனைவியிடமும்,காதலன் தன் காதலியிடமும் மட்டும் காதல் ஈடுபாடு கொண்டு இருந்தால் தவறில்லை.இந்த ஈடுபாடே மற்ற பெண்கள் மீது திரும்புபோதுதான் சிக்கல்கள்,தடுமாற்றம் ஏற்பட்டு வாழ்க்கை திசை மாறுகிறது..//

    நல்ல புரிதல் நண்பரே...

    பதிலளிநீக்கு
  9. அருமை அருமை..! இவ்ளோ நாள் இதப் பத்தி சிந்திச்சே பார்க்கலீங்க... இப்போ படிக்கிறப்போ ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு..!

    பதிலளிநீக்கு
  10. விளக்கம் முழுவதுமாக கிடைத்தது...பெண்மை பாம்பின் விடத்தை விட கொடுமை..நன்றி..

    பதிலளிநீக்கு
  11. //ஏனென்றால் பாம்பு கடித்தால் உயிர் உடனே போய்விடும்!

    பெண் மீது கொண்ட காதலால் உயிர் அடிக்கடி போய்வரும்!//

    தேவையான பதிவு தான்........

    விளக்கத்திற்கு நன்றி........

    பதிலளிநீக்கு
  12. புலவன் புலிகேசி said...

    விளக்கம் முழுவதுமாக கிடைத்தது...பெண்மை பாம்பின் விடத்தை விட கொடுமை..நன்றி.//

    கருத்துரைக்கு நன்றி புலவரே..

    பதிலளிநீக்கு
  13. Delete
    Blogger வாசிக்க மட்டும் said...

    நல்ல விளக்கம்.அருமை அருமை..//

    நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  14. ஊடகன் said...

    //ஏனென்றால் பாம்பு கடித்தால் உயிர் உடனே போய்விடும்!

    பெண் மீது கொண்ட காதலால் உயிர் அடிக்கடி போய்வரும்!//

    தேவையான பதிவு தான்........

    விளக்கத்திற்கு நன்றி.....//

    கருத்துரைக்கு நன்றி ஊடகன்..

    பதிலளிநீக்கு
  15. விளக்கம் கேட்க நன்றாகவே உள்ளது.

    செயல்படுத்துவதில் தான் சிரமம் ஏற்படுகிறது என்பது நாளுக்குநாள் ஏறிவரும் மக்கள்தொகையிலேயே தெரியவருகிறது.

    இருப்பினும் பதிவுக்கு என் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  16. குணா,

    சங்கத்தமிழ் சங்கதிகளை எளிய தமிழில் அறியக் கொடுத்து, சங்க நூல்களின் மேல் காதலைத் தூண்டுகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  17. @சத்ரியன் மிக்க மகிழ்ச்சி நண்பா எனது நோக்கமே அதுதான்.

    பதிலளிநீக்கு