வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 29 டிசம்பர், 2009

மூங்கில் இலைமேலே........



கம்பர் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் செவி மரபுக்கதை,

ஒரு முறை கம்பர் வயல்வெளிப்பக்கம் சென்றாறாம். அப்போது உழவர்கள் உழவுத்தொழில் செய்துவந்தார்களாம். அப்போது ஒரு உழவர் மாலைவேளையில் ஏற்றப்பாட்டு பாடினாராம்..

மூங்கில் இலைமேலே........
தூங்கும் பனிநீரே....

என்று இவ்வாறு பாடிய உழவர் அன்றைய பணியை நிறைவு செய்து பாடலை முழுதும் பாடமலேயே வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

பாடலைக் கேட்டு வியந்த கம்பர் பாடலை முழுவதும் கேட்க இயலவில்லையே என்று வருந்தினாராம்...

அந்தப்பாடலின் அடுத்த அடிகளைக் கேட்டு மகிழவேண்டும் என்று எண்ணிய கம்பர் அடுத்த நாளும் அங்கு வந்து உழவனின் பாடலுக்காகக் காத்திருந்தாராம்..

மறுநாள் வந்த உழவன் பாடினானாம்..

தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே
!

என்று வியந்து போனாராம் கம்பர்..

இந்தக் கதையில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று சிந்திப்பதை விட “கவிச்சக்கரவர்த்தி கம்பரே வியக்கும் வகையில் இந்த வாய்மொழிப்பாடல்களின் சுவை இருக்கிறது என்ற கருத்தை உணர்ந்து கொள்ளுதல் நயம் பயப்பதாக அமையும்..

ஏட்டில் எழுதப்பட்ட இலக்கியங்கள் யாவும் இதுபோன்ற ஏட்டிலில்லா இலக்கியங்களின் வழிவந்தவையே..

10 கருத்துகள்:

  1. ரசித்தேன்....

    பி.சுசீலா குரலில் அந்த ஆரம்ப வரிகளைக் கொண்டு ஒரு பாடல் ஞாபகம் வந்தது...!

    பதிலளிநீக்கு
  2. அழகுங்க. நன்றி பகிர்ந்தமைக்கு

    பதிலளிநீக்கு
  3. அய்யா,

    சிறு வயதில் என் தாத்தா கூற கேட்டிருக்கிறேன், அருமையான வரிகளோடு. இன்னும் சில வரிகளும் உடன் இருந்ததாய் நினைவு.

    நன்றி.

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  4. பாடல் வரி கண்டு நானும் வியந்து விட்டேன். இப்படித்தான் பலரது திறமை வெளிவராமலிருக்கிறது. அவர்களுக்கே தெரியாமல்...

    பதிலளிநீக்கு
  5. கம்பனே வியந்த வரிகள் அழகோ அழகு..இங்கு எங்களை அறியவைத்தமைக்கு நன்றி குணா...

    பதிலளிநீக்கு
  6. Blogger ஸ்ரீராம். said...

    ரசித்தேன்....

    பி.சுசீலா குரலில் அந்த ஆரம்ப வரிகளைக் கொண்டு ஒரு பாடல் ஞாபகம் வந்தது...!

    கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
  7. வானம்பாடிகள் said...

    அழகுங்க. நன்றி பகிர்ந்தமைக்கு..


    கருத்துரைக்கு நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  8. பிரபாகர் said...

    அய்யா,

    சிறு வயதில் என் தாத்தா கூற கேட்டிருக்கிறேன், அருமையான வரிகளோடு. இன்னும் சில வரிகளும் உடன் இருந்ததாய் நினைவு.

    நன்றி.

    பிரபாகர்.//

    கருத்துரைக்கு நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  9. புலவன் புலிகேசி said...

    பாடல் வரி கண்டு நானும் வியந்து விட்டேன். இப்படித்தான் பலரது திறமை வெளிவராமலிருக்கிறது. அவர்களுக்கே தெரியாமல்...

    ஆம் நண்பரே..

    பதிலளிநீக்கு
  10. தமிழரசி said...

    கம்பனே வியந்த வரிகள் அழகோ அழகு..இங்கு எங்களை அறியவைத்தமைக்கு நன்றி குணா...


    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்..

    பதிலளிநீக்கு