வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 14 மார்ச், 2010

மருந்தாய்ந்து கொடுத்த அறவோன்.



“ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்“ என வழங்கப்பட்டுவரும் பழமொழியின் திருந்திய வடிவம்,

“ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்“ என்பதாகும். ஆயிரம் வேர்களின் பண்புகளை அறிந்தவனே நல்ல மருத்துவன் என்ற இப்பழமொழி, பழந்தமிழரின் மருத்துவச் சிந்தனைக்கு நல்ல சான்றாகத் திகழ்கிறது.

வள்ளுவர் மருந்து என்னும் அதிகாரத்தில் மருந்தின், மருத்துவத்தின் பல்வேறு படிநிலைகளையும் அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்.

குறள் 948:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
என்ற வள்ளுவரின் மருத்துவப் படிநிலையைத் தான் இன்றைய மருத்துவவியலாளர்களும் மருத்துவக்கல்வியாகப் படிக்கின்றனர்.

சங்க இலக்கியத்திலும் மருத்துவம் தொடர்பான பல்வேறு செய்திகளைக் காணமுடிகிறது.

மருந்தாய்ந்து கொடுத்த அறவோன்


நோய்வாய்ப்பட்டவர் விரும்பியதைக் கொடு்க்காமல், நோயின் தன்மையை நன்கு ஆராய்ந்து அறிந்து நோய்வாய்ப்பட்டவரின் உடலுக்குத்தக்க மருந்தைத் தருபவரே நல்ல மருத்துவராவார்.

தலைவி தன் தந்தையை, மருந்தாய்ந்து கொடுத்த நல்ல அறவோன் என்கிறாள் தோழியிடம்...

திருத்தமாகச் செய்யப்பட்டதும், கைவினைத்திறம் அமைந்ததும் ஒளிபொருந்தியதுமான தோள் வளையை நான் விரும்பினேன். அது கிடைக்கப் பெறாமையால் அழுதேன். என் தந்தை, “தீர்த்தற்கரிய நோயை அடைந்தவர் விரும்பியதைக் கொடாமல் ஆராய்ந்து நோய்க்குத் தக்கவாறு மருந்து தரும் அறமுடைய மருத்துவனோடு ஒப்பிடத்தக்கவராவர்.

பலரும் புகழும் மலை நாடனாகிய என் தலைவன் சிலகாலம் என்னை நீங்கியிருப்பதை என் தந்தை அறிந்தனர் போலும். தலைவன் என்னை விட்டு நீங்கினாலே உடல் தளர்ந்து தோள் வளை கீழே விழுந்து என் தோளுக்குப் பழிவரும். ஆனால் நானே நீக்கினாலும் நீங்காதவாறு வண்ணம் கெடாத, பொன்னாலான தோள்வளையைச் செய்துதந்தார். அவர் வாழ்க என வாழ்த்துகிறாள் தலைவி. இதனை,


திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்,
அரும் பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது,
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல,
என்னை-வாழிய, பலவே!-பன்னிய
5 மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல,
நீப்ப நீங்காது, வரின் வரை அமைந்து,
தோள் பழி மறைக்கும் உதவிப்
போக்கு இல் பொலந் தொடி செறீஇயோனே.
நற்றங் கொற்றனார்

சிறைப்புறமாகத் தலைவி தோழிக்கு உரைத்தது.
(சிறைப்புறம் என்றால் வீட்டுக்கு அருகாமையில்)
நற்றிணை - 136. குறிஞ்சி

என்னும் பாடல் உணர்த்தும். தான் வேண்டியதைத் தராமல், தனக்குப் பயன்படும் வகையில் அளித்தமையால் தலைவி தன் தந்தையின் செயலை மருந்தாய்ந்து கொடுக்கும் மருத்தவனின் செயலோடு ஒப்பிட்டு நோக்கியுள்ளாள்.

இவ்வாறு தலைவி தோழியிடம் கூறும்போது அருகாமையில் மறைவாக நிற்பான் தலைவன். தலைவியின் மனநிலையையும், உடல்நிலையையும் உணர்ந்து விரைந்து திருமணம் செய்துகெள்ள முற்படுவான்.

இப்பாடல் வழி அறியலாகும் செய்திகள்.


◊ மருந்தாய்ந்து கொடுக்கும் மருத்துவக்கலை பழந்தமிழரிடம் அக்காலத்திலேயே வழக்கத்திலிருந்திருக்கிறது.
◊ பொன்னாலான அணிகலன்களை அக்காலத்தமிழர்கள் விரும்பி அணிந்ததால், கலைநுட்பத்துடன் பொன்அணிகள் அன்றே செய்தனர் என்பதும் அறியமுடிகிறது.

6 கருத்துகள்:

  1. ஆயிரம் வேரத்தான் பேராக்கிட்டாங்களோ..?

    பதிலளிநீக்கு
  2. புதிய தகவல் நான் அறியாதது .நன்றி

    பதிலளிநீக்கு
  3. Blogger புலவன் புலிகேசி said...

    ஆயிரம் வேரத்தான் பேராக்கிட்டாங்களோ..?

    ஆமாம் நண்பரே..

    பதிலளிநீக்கு
  4. Blogger பூங்குழலி said...

    புதிய தகவல் நான் அறியாதது .நன்றி


    ஓ மகிழ்ச்சி குழலி..

    பதிலளிநீக்கு
  5. Hello Friend,  Hope everything is fine.
    I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

     
    Meharunnisha
    Doctoral Candidate
    Dept of Psychology
    Bharathiar University
    Coimbatore - 641046
    Tamil Nadu, India
    meharun@gmail.com
     
     

    (Pls ignore if you get this mail already)

    பதிலளிநீக்கு
  6. gunathamizh@gmail.com

    என்பது எனது மின்னஞ்சல் முகவரி தங்களின் வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு