வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 15 மார்ச், 2010

பாசி யற்றே பசலை.




தலைவனை நீங்கினால் ஏற்படும் பிரிவு காரணமாகத் தலைவியின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றம் பசலை எனப்படும். பசலையைக் கண்டு ஊரார் அலர் தூற்றுவர் என்பது சங்ககால மரபு. இந்த பசலை பற்றிப் பல பாடல்களைப் புலவர்கள் பாடியிருந்தாலும் அதன் தன்மையை எல்லோருக்கும் புரியமாறு சொல்லும் பாடல் ஒன்றைக் காண்போம்…


நீர்நிலைகளின் பச்சை நிறத்தில் பாசிபடர்ந்திருப்பதைப் பலரும் பார்த்திருப்பர். அந்தப் பாசி பயன்கொள்வோர் அருகே செல்லும் போது விலகிச் செல்லும், அந்நீர்நிலையைக் கடந்து வந்தபின்பு மீண்டும் வந்து சேர்ந்து கொள்ளும்.

அந்த பாசி போன்றது பசலை என்கிறாள் தலைவி. ஏனென்றால் தலைவன் அருகே இருக்கும் போது இந்த பசலை என்னைவிட்டு நீங்கிவிடுகிறது. அவன் என்னை நீங்கியவுடன் மீண்டும் வந்து சேர்ந்துகொள்கிறது என்று தோழியிடம் உரைக்கிறாள் தலைவி.

வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது என்னும் அகத்துறையில் அமைந்த இப்பாடலை,

(வரைவு - திருமணம்)

ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே.

குறுந்தொகை -399. மருதம் - தலைவி கூற்று


பரணர் பாடியிருக்கிறார்.

16 கருத்துகள்:

  1. நல்ல பதிவு நண்பரே. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. எளிமையான அழகான விளக்கம். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பசலை நோய்ங்கறது இதுதானா..நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  4. Blogger வானம்பாடிகள் said...

    எளிமையான அழகான விளக்கம். நன்றி.

    கருத்துரைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  5. Blogger சே.குமார் said...

    நல்ல பதிவு நண்பரே.

    நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  6. Blogger புலவன் புலிகேசி said...

    பசலை நோய்ங்கறது இதுதானா..நன்றி நண்பரே.

    ஆம் நண்பா.

    பதிலளிநீக்கு
  7. நல்ல பகிர்வு நண்பரே .

    மீண்டும் வருவான் பனித்துளி !

    பதிலளிநீக்கு
  8. இன்பத்துப் பாலின் குறட்பாவில் ஒன்றைப் படித்தது போல் இருக்கிறது இந்த புறப்பாடல்.

    பதிலளிநீக்கு