வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 21 ஏப்ரல், 2011

20/20 தேர்வு முறை


நாடே கிரிக்கெட் வெறிபிடித்து அலைகிறது. மக்கள் நாட்டுப் பற்றை கிரிக்கெட்டில் மட்டுமே ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்துகிறார்கள்.
மக்கள் வேறு எந்த வேலையும் பார்க்கக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் கிரிக்கெட் வாரியங்களும் 365 நாளும் கிரிக்கெட் போட்டிகளை நடத்துகின்றன.
தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு அதனை ஒளிபரப்புகின்றன. ஒரு மறக்குடிமகன் சொல்கிறான்....
எனக்கு நேரடியாகக் கிரிக்கெட் பார்க்க அரங்க அனுமதிச்சீட்டு தாருங்கள் என் கிட்னியைக் கூடத் தருகிறேன் என்று...

கிரிக்கெட்டால் இலாபம் ஈட்டுவது பலராக இருந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான் என்பது என் கருத்து.
நேரடியாகவே பல மாணவர்களின் அவலநிலையை என்னால் பார்க்க முடிகிறது..

• தான் என்ன சாதிக்கப் போகிறோம் என்ற எண்ணம் கூட இல்லாத மாணவன் கூட கிரிக்கெட் வீரரின் பெயரையும் அவரின் சாதனையையும் நினைவில் வைத்துக்கொள்ள எண்ணுகிறான்.
• தன் தேர்வு நாள் நினைவிருக்கிறதோ இல்லையே கிரிக்கெட் என்று எங்கு நடக்கிறது..? விளையாட்டுக்கு எந்த வீரர் தேர்ந்தெடு்க்கப்பட்டிருக்கிறார்? என்பதில் ஆர்வமாக இருக்கிறான்....

இறுதியில் இவன் தேர்வு எழுதத் தகுதியில்லாதவனாக ஆகிப்போகிறான்..

இம்மாணவனின் எதிர்பார்ப்பில் தாம் எழுதும் தேர்வுகூட இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறான்...

20/20 தேர்வு முறை.


 தேர்வு எழுதும் நேரத்தை 3 மணிநேரத்தில் இருந்து 1 மணிநேரமாகக் குறைத்துவிட வேண்டும்.
 மதிப்பெண்ணையும் 50 ஆகக் குறைத்துவிடவேண்டும்.
 தேர்வின் இடையில் 15 நிமிடத்துக்கு ஒருமுறை இடைவெளி விடவேண்டும்.
 எதிர்பாராத வினாக்களுக்குப் பதிலளித்தால் கூடுதல் மதிப்பெண் அளிக்கலாம்.
 கடைசி அரைமணி நேரம் அறையில் தேர்வுக் கண்காணிப்பாளர் இருக்கக் கூடாது.

8 கருத்துகள்:

  1. சரியா போச்சு..... அவங்க தேர்வுகள் எழுதும் போது, cheer leaders இருக்கணுமா? ஹா,ஹா,ஹா,ஹா.. ...

    பதிலளிநீக்கு
  2. //கடைசி அரைமணி நேரம் அறையில் தேர்வுக் கண்காணிப்பாளர் இருக்கக் கூடாது.//

    இதை நானும் ஆமோதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. 20/20 தேர்வு முறை.//
    மாணவர்களுக்கு இனிக்கும்.

    பதிலளிநீக்கு
  4. @Chitra அதைத்தானே மாணவர்களும் ஆசைப்படுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. nan onru solkiraen gunaseelan avarkale,

    oru murai thervuththaal thiruththum idaththirkku senru vaarungal. appuram thervu eluthum mananilaye namakku aerpadaathu. antha alavukku mosamana soolnilai. naam enna eluthi enna prayojanam. ellam avvapothu avarkal kaiyil varuvathuthaan mathippenkal.

    nan sambanthamey illamal solkiraen enru enna vendam.

    sariyaaga eluthinaale munnera mudiyaatha kaalaththil inraya maanavarkalin sinthanaiyai pattri koorukiraen

    பதிலளிநீக்கு