வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரின் சிந்தனைகளை எண்ணிப்பார்ப்பதே அவருக்கு நாம் சொல்லும் வாழ்த்தாகக் கருதுகிறேன்.

தமிழ் பயின்ற காலத்தில் பாரதிதாசனை மதிப்பெண் நோக்கில் மட்டுமே படிக்கமுடிந்தது. அப்போது கவிஞரின், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரச்சிக்கவி ஆகிய ஆக்கங்களை மட்டுமே படித்து அவர்மீது பெருமதிப்புக் கொண்டேன்.அப்போதெல்லாம் பாரதிதாசன் பாடமாக மட்டுமே தெரிந்தார். படித்து முடித்தபின்னர் தான் பாரதிதாசன் ஒரு வாழ்க்கைப் பாடமாகக் காட்சியளித்தார்.

“நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து,
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
கோல முழுதும் காட்டிவிட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? - வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!“


என்ற கவிதையை எத்தனை முறை மனதிற்குள் சொல்லிப்பார்த்திரு்ப்பேன். வகுப்பில் சான்றாக இப்பாடலை எத்தைனை முறை சொல்லியிருப்பேன் என்று எனக்கே தெரியாது.

காதல், வீரம், தமிழ்மொழிப்பற்று, பெண்ணுரிமை, என எத்தனை களங்களைக் கொண்ட கவிஞன்...
கூடத்திலே மனப் பாடத்திலே – விழி
கூடிக் கிடந்திடும் ஆணழகை
ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் – அவள்
உண்ணத் தலைப்படு நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்த விழி – தனிற்
பட்டுத் தெறித்தது மானின் விழி.
ஆடைதிருத்தி நின்றாள் அவள்தான் – இவன்
ஆயிரம் ஏடு திருப்புகின்றான்..

கவிஞரின் இந்தக் கவிதையைப் படித்த ஒவ்வொருவருக்கும் கவிதை எழுதவேண்டும் என்ற ஆசைவரும்.

நகைச்சுவை உணர்வுடன் பெண்களின் எழுச்சியைச் சொல்லும் அழகான பாடல்..
“மேற்றிசையில் வானத்தில் பொன்னுருக்கு
வெள்ளத்தில் செம்பருதி மிதக்குநேரம்!
வேற்கண்ணி யாளொருத்தி சோலைதன்னில்
விளையாட நின்றிருந்தாள் மயிலைப்போலே!
காற்றடித்த சோலையிலே நேரம் பார்த்துக்
கனிய டித்துக் கொண்டு செலும் செல்வப்பிள்ளை
ஆற்றுவெள்ளம் போலாசை வெள்ளம் தூண்ட
அவளிடத்தே சில சொன்னான் பின்னுஞ் சொல்வான்;
விரிந்தஒரு வானத்தில் ஒளிவெள்ளத்தை
விரைந்துவந்து கருமேகம் விழுங்கக்கூடும்!
இருந்தவெயில் இருளாகும் ஒரு கணத்தில்
இது அதுவாய் மாறிவிடும் ஒரு கணத்தில்
தெரிந்ததுதான்; ஆனாலும் ஒன்றேயொன்று!
தெளிந்தஓர் உள்ளத்தில் எழுந்தகாதல்
பருந்துவந்து கொத்துமென்றும் தணிவதில்லை!
படைதிரண்டு வந்தாலும் சலிப்பதில்லை!
கன்னத்தில் ஒரு முத்தம் வைப்பாய் பெண்ணே,
கருதுவதிற் பயனில்லை தனியாய் நின்று.
மின்னிவிட்டாய் என்மனதில்! பொன்னாய்ப் பூவாய்.
விளைந்துவிட்டாய் கண்ணெதிரில்! என்று சொன்னாள்.
கன்னியொரு வார்த்தையென்றாள் என்னவென்றான்.
கல்வியற்ற மனிதனை நான் மதியேன் என்றாள்
பன்னூற் பண்டிதனென்று தன்னைச் சொன்னான்.
பழச்சுளையின் வாய்திறந்து சிரித்துச் சொல்வாள்.
பெருங்கல்விப் பண்டிதனே! உனக்கோர்கேள்வி;
பெண்களுக்குச் சுதந்தரந்தான் உண்டோ? என்றாள்.
தரும்போது கொள்வதுதான் தருமம் என்றான்.
தராவிடில்நான் மேற்கொண்டால் என்னவென்றாள்.
திருமணமா காதவள்தன் பெற்றோரின்றிச்
செயல்ஒன்று தான்செய்தல் அதர்மம் என்றான்.
மருவ அழைக் கின்றாயே, நானும் என்றன்
மாதா பிதாவின்றி விடைசொல்வேனோ?
என்றுரைத்தாள், இதுகேட்டுச் செல்வப்பிள்ளை
என்னேடி, இதுஉனக்குத் தெரியவில்லை.
மன்றல்செயும் விஷயத்தில் ஒன்றில்மட்டும்
மனம்போல நடக்கலாம் பெண்கள் என்றான்.
என்மனது வேறொருவன் இடத்திலென்றே
இவனிட்ட பீடிகையைப் பறக்கச் செய்தாள்.
உன்நலத்தை இழக்கின்றாய் வலியநானே
உனக்களிப்பேன் இன்பமென நெருங்கலானான்!
அருகவளும் நெருங்கி வந்தாள்; தன் மேல்வைத்த
ஆர்வந்தான் எனநினைத்தான்! இமைக்குமுன்னே
ஒருகையில் உடைவாளும் இடதுகையில்
ஓடிப்போ! என்னுமோரு குறிப்புமாகப்
புருவத்தை மேலேற்றி விழித்துச் சொல்வாள்;
புனிதத்தால் என்காதல் பிறன்மேலென்று
பரிந்துரைத்தேன்! மேற்சென்றாய்! தெளிந்த காதல்
படைதிரண்டு வந்தாலும் சலியாதென்றாள்.
ஓடினான் ஓடினான் செல்வப்பிள்ளை
ஓடிவந்து மூச்சுவிட்டான் என்னிடத்தில்
கூடிஇரு நூறுபுலி எதிர்த்ததுண்டோ?
கொலையாளி யிடமிருந்து மீண்டதுண்டோ?
ஓடிவந்த காரணத்தைக்கேட்டேன், அன்னோன்
உரைத்துவிட்டான்! நானவற்றைக் கேட்டுவிட்டேன்.
கோடிஉள்ளம் வேண்டுமிந்த மகிழ்ச்சிதாங்கக்
குலுங்கநகைத் தேயுரைத்தேன் அவனிடத்தில்;
செல்வப்பிள்ளாய் இன்றுபுவியின் பெண்கள்
சிறுநிலையில் இருக்கவில்லை; விழித்துக் கொண்டார்!
கொல்லவந்த வாளைநீ குறைசொல்லாதே!
கொடுவாள் போல் மற்றொருவாள் உன்மனைவி
மெல்லிடையில் நீகாணாக் காரணத்தால்,
விளையாட நினைத்துவிட்டாய் ஊர்ப் பெண்கள்மேல்!
பொல்லாத மானிடனே, மனச்சான்றுக்குள்
புகுந்துகொள்வாய்! நிற்காதே! என்றேன்; சென்றான்“

தமிழ்க்கவிதைப் பரப்பில் பாரதி பரம்பரை என்பதுபோல பாரதிதாசன் பரம்பரை என தனியொரு தலைமுறையையே உருவாக்கியவர் பாவேந்தர் அவர்களை எண்ணி அவர்களைப் போற்றுவோம்..

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ் நடத்தி வந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு
புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.
இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார், அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமனற்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடையப படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.

மறைவு

கவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். மன்னர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.
பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

பாரதிதாசனின் ஆக்கங்கள்

பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
• பாண்டியன் பரிசு (காப்பியம்)
• எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
• குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
• குடும்ப விளக்கு (கவிதை நூல்)
• இருண்ட வீடு (கவிதை நூல்)
• அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
• தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
• இசையமுது (கவிதை நூல்)
• அகத்தியன் விட்ட புதுக்கரடி
• பாரதிதாசன் பதிப்பகம் அமைதி
• செந்தமிழ் நிலையம்,இசையமுதம் (முதல் பாகம்)
• பாரதசக்தி நிலையம் (1944)
• இசையமுதம் (இரண்டாம் பாகம்)
• பாரதசக்தி நிலையம் (1952) இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்)
• குடியரசுப் பதிப்பகம் (1939)
• இருண்ட வீடு,முத்தமிழ் நிலையம் இளைஞர் இலக்கியம்
• பாரி நிலையம் (1967) உரிமைக் கொண்டாட்டமா?
• குயில் (1948) எதிர்பாராத முத்தம்
• வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் (1941)
• எது பழிப்பு
• குயில் (1948) கடவுளைக் கண்டீர்!
• குயில் (1948)
• கண்ணகி புரட்சிக் காப்பியம்
• அன்பு நூலகம் (1962) கதர் ராட்டினப் பாட்டு
• காசி ஈ.லட்சுமண பிரசாத் (1930)
• கற்புக் காப்பியம்
• குயில் (1960)
• காதல் நினைவுகள்,செந்தமிழ் நிலையம் (1969)
• காதல் பாடல்கள்,பூம்புகார் பிரசுரம் (1977)
• காதலா - கடமையா?,பாரதிதாசன் பதிப்பகம் (1948)
• குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி)பாரதிதாசன் பதிப்பகம் (1942)
• குடும்ப விளக்கு (திருமணம்)பாரதிதாசன் பதிப்பகம் (1950)
• குடும்ப விளக்கு (மக்கட் பேறு)பாரதிதாசன் பதிப்பகம் (1950)
• குடும்ப விளக்கு (விருந்தோம்பல்)
• முல்லைப் பதிப்பகம் (1944)
• குடும்ப விளக்கு (முதியோர் காதல்)
• பாரதிதாசன் பதிப்பகம் (1950)
• குயில் பாடல்கள்பூம்புகார் பிரசுரம் (1977)
• குறிஞ்சித் திட்டு,பாரி நிலையம்
• சஞ்சீவி பர்வதத்தின் சாரல்,பாரதிதாசன் பதிப்பகம் (1949)
• சேர தாண்டவம் (நாடகம்),பாரதிதாசன் பதிப்பகம் (1954)
• தமிழச்சியின் கத்தி,பாரதிதாசன் பதிப்பகம் (1949)
• தமிழியக்கம்,செந்தமிழ் நிலையம் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
• திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
• தேனருவி இசைப் பாடல்கள்
• பாரதிதாசன் பதிப்பகம் (1955)
• நல்ல தீர்ப்பு (நாடகம்),முல்லைப் பதிப்பகம் (1944)
• நீலவண்ணன் புறப்பாடு
• பாண்டியன் பரிசு
• முல்லைப் பதிப்பகம் (1943) பாரதிதாசன் ஆத்திசூடி
• பாரதிதாசன் கதைகள்முரசொலிப் பதிப்பகம் (1957)
• பாரதிதாசன் கவிதைகள்,கடலூர் டி.எஸ்.குஞ்சிதம் (1938)
• பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)
• குடியரசுப் பதிப்பகம் (1944) பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)
• பாரதிதாசன் பதிப்பகம் (1952)
• பாரதிதாசன் நாடகங்கள்
• பாரி நிலையம் (1959) பாரதிதாசன் பன்மணித் திரள்
• முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)
• பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)
• புரட்சிக் கவி,துரைராசு வெளியீடு (1937)
• பெண்கள் விடுதலை
• பொங்கல் வாழ்த்துக் குவியல்,பாரதிதாசன் பதிப்பகம் (1954)
• மணிமேகலை வெண்பா
• அன்பு நூலகம் (1962) மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
• முல்லைக் காடு,காசி ஈ.லட்சுமண பிரசாத் (1926)
• கலை மன்றம் (1955) விடுதலை வேட்கை,
• உயிரின் இயற்கை,மன்றம் வெளியீடு (1948)
• வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும்,குயில் புதுவை (1959)
• தமிழுக்கு அமுதென்று பேர்
• வேங்கையே எழுக ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
• புகழ் மலர்கள் நாள் மலர்கள்
• தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்)பூம்புகார் பிரசுரம் (1978)

(செய்திக் குறிப்புகள் – விக்கிப்பீடியா(நன்றி))

8 கருத்துகள்:

  1. பாவேந்தரைப்பற்றி அருமையாக தொகுப்பு..
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. அருமையான பகிர்வு தோழரே...தெரிந்த, தெரியாத விடயங்கள் இன்று தெளிந்துகொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பாவேந்தரைப் பற்றி முழுமையான அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. @சசிகுமார் இந்த நூல்களைப் படித்தால் இவ்வளவு கருத்துக்களா?

    என்று கேட்பீர்கள் நண்பா..

    பதிலளிநீக்கு
  5. @குடந்தை அன்புமணிநீண்ட நாட்களுக்குப் பின் வந்திருக்கீர்கள் நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  6. பாவேந்தரின் பிறந்த தினமான இன்று(29/04/2012) பாரதிதாசன் அவர்களை வணங்குகின்றேன்...!

    பாவேந்தர் பற்றிய வாழ்க்கை குறிப்புகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்கய்யா...

    பதிலளிநீக்கு