வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

மனிதக் கணினி !



உடலைப் பார்த்து வன்பொருள் செய்தாய்!
மனதைப் போல மென்பொருள் கண்டாய்!
நினைவின் கூறை ராம் எனச் சொன்னாய்!
கொள்திறன் அதனை மெமரி என்றாய்!
கண்கள் போல கேமரா செய்தாய்!
வாயைப் பார்த்து ஒலியைப் பெருக்கினாய்!
செவிகள் ஒப்பிட்டு ஒலிப்பதிவு செய்தாய்!
கணினியின் கைகள் மௌசே என்றாய்!
உடலைத் தாக்கும் கிருமிகள் கண்டாய்!
நச்சு நிரலும் நீயே உருவாக்கினாய்!
உடலைக் காக்கும் வகைதனை அறிந்தாய்!
எதிர்ப்பு நச்சு நிரலையும் நீயே கண்டாய்!
மனதில் ஆயிரம் கனவுகள் கண்டாய்!
கனவின் பாதியை இணையம் என்றாய்!
ஏ மனிதா..

ஒன்றை உற்று நோக்கினாயா...?
எல்லாமே போலச் செய்ததுதான்!
இணையானது அல்ல!
புதிதானதும் அல்ல!

எதிர்காலத்தில் நீ..
கணினிக்குள் சிந்தனை வைப்பாய்!
கணினியைத் தானே இயங்க வைப்பாய்!
ஏன் உன்னையே நீ கணினி கொண்டு இயக்கிக் கொள்வாய்!

ஒன்று சொல்..

மனிதன் பார்த்து கணினி செய்தாய்! நீ..
கணினி பார்த்து மனிதன் செய்வது எப்போது???

47 கருத்துகள்:

  1. கணினி பார்த்து மனிதன் வேண்டாம் மனிதமாவது வளர்த்தால் போதும்

    பதிலளிநீக்கு
  2. மிக மிக அருமை
    கணிணியின் கூறுகளை
    மனித உடற்கூறுகளுடன்
    ஒப்பிட்டவிதம் அருமை அருமை
    அதைவிட நீங்கள் எழுப்பிச் செல்லும் கேள்விக்கு
    விஞ்ஞானம் மௌனம்தவிர வேறு என்ன
    பதில் வைத்திருக்கும்?
    மனம் கொள்ளை கொண்ட பதிவு

    பதிலளிநீக்கு
  3. மனதில் ஆயிரம் கனவுகள் கண்டாய்!
    கனவின் பாதியை இணையம் என்றாய்!


    ..... சிந்திக்க அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  4. எந்திரனா, மனிதனா எனும் கேள்வி எழும் போது - மனிதனை விட சிறந்தது எந்திரனே. பொய்யில்லை... நேரந்தவறுவது இல்லை. எந்திரனிடம் கற்று கொள்ள கூட நிறைய உள்ளது மனிதனுக்கு.

    பதிலளிநீக்கு
  5. //மனிதன் பார்த்து கணினி செய்தாய்! நீ..
    கணினி பார்த்து மனிதன் செய்வது எப்போது??? //

    நிச்சயம் வரும்

    பதிலளிநீக்கு
  6. //மனிதன் பார்த்து கணினி செய்தாய்! நீ..
    கணினி பார்த்து மனிதன் செய்வது எப்போது???//

    அருமை அருமை. மனிதனுக்கும் கணிணிக்குமான ஒப்பீடு அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. கணினியை பார்த்து எப்போது மனிதன் கற்றுக் கொள்வான்? நல்ல கேள்வி

    பதிலளிநீக்கு
  8. //
    மனிதன் பார்த்து கணினி செய்தாய்! நீ..
    கணினி பார்த்து மனிதன் செய்வது எப்போது???
    //

    விரைவில்

    பதிலளிநீக்கு
  9. //ஒன்றை உற்று நோக்கினாயா...?
    எல்லாமே போலச் செய்ததுதான்!
    இணையானது அல்ல!
    புதிதானதும் அல்ல! //

    சரியாய்ச்சொன்னீர்கள்.

    கவிதையை இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. ஆழமான தத்துவம் நண்பரே இத்தனை நாள் எப்படி பார்க்காமல் போனேன் என்று தெரியாவில்லை ... தங்கள் என் வலைவரையில் இட்ட கருத்துரை தான் என்னை இங்கு அழைத்து வந்தது நன்றி..தொடர்ந்து எழுத வேண்டும் .
    <a href="http://maheskavithai.blogspot.com>Maheswaran</a>

    பதிலளிநீக்கு
  11. தமிழ்மணம் 7

    //மனிதன் பார்த்து கணினி செய்தாய்! நீ..
    கணினி பார்த்து மனிதன் செய்வது எப்போது??? ///

    சரியான கேள்வி கேட்டீர்கள் முனைவரே....
    கணினியை பார்த்து எப்போது மனிதம் செய்யப்போகிறீர்????
    சுழல்கலன் (Recycle bin)சுத்தம் செய்வது போல் உன் மனகுப்பைகளை
    சுத்தம் செய்யும் மென்பொருளை எப்போது கண்டறியப் போகிறாய்???

    சிறந்த சிந்தனை முனைவரே
    மனிதனை வைத்து கணினி செய்தது.

    பதிலளிநீக்கு
  12. மிக அருமையான ஆழமான சிந்தனை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. நல்ல சிந்தனையை தூண்டும் கேள்வி நண்பரே

    பதிலளிநீக்கு
  14. இன்று முதல் தொடரவும் செய்கிறேன்

    பதிலளிநீக்கு
  15. //ஒன்றை உற்று நோக்கினாயா...?
    எல்லாமே போலச் செய்ததுதான்!
    இணையானது அல்ல!
    புதிதானதும் அல்ல! //

    சரியாக எழுதி உரைத்தாய் நண்பா.

    எது ஒன்றை நாம் கண்டுபிடிக்கிறோமோ அல்லது உருவாக்குகிறோமோ அதுகள் எல்லாம் இங்கே ஏற்கனவே இருப்பதில் இருந்து தான் வருகிறதேயொழிய வேறெங்கோ இருந்து கொண்டு வந்ததில்லை. ... இவ்வரிகளை எங்கோ படித்த ஞாபகம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  16. மனதில் ஆயிரம் கனவுகள் கண்டாய்!
    கனவின் பாதியை இணையம் என்றாய்!
    ---ஆழமான சிந்தனை

    கணினி பார்த்து மனிதன் செய்வது எப்போது???
    ---நிறைய செய்கிறார்கள் முனைவரே...

    உங்கள் தெளிவான சிந்தனை தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  17. //மனிதன் பார்த்து கணினி செய்தாய்! நீ..
    கணினி பார்த்து மனிதன் செய்வது எப்போது??? //
    சிந்தனைக்குரியது!

    பதிலளிநீக்கு
  18. எல்லாமே போலச் செய்ததுதான்!
    இணையானது அல்ல!
    புதிதானதும் அல்ல! //

    அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  19. மனிதன் பார்த்து கணினி செய்தாய்! நீ..
    கணினி பார்த்து மனிதன் செய்வது எப்போது??? //

    எப்போது? எதிர்பார்போம்.

    பதிலளிநீக்கு
  20. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி நடனசபாபதி ஐயா.

    பதிலளிநீக்கு
  21. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  22. நானும் எங்கோ கேட்டது போலத்தான் இருக்கிறது சத்ரியன் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இராஜேஷ்வரி.

    பதிலளிநீக்கு
  24. //மனிதன் பார்த்து கணினி செய்தாய்! நீ..
    கணினி பார்த்து மனிதன் செய்வது எப்போது??? //
    வருமா அந்த காலம்??

    பதிலளிநீக்கு