
விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்
வானக் காதலன்
பூமிப்பெண்ணுக்குத் தரும்
முத்தங்களே – மழைத்துளிகள்!
-00o00- -00o00- -00o00- -00o00-

நட்சத்திரக் காதல்
நிலாப் பெண்ணுக்குக்
காதல் கடிதம்தரக் காத்திருக்கும்
காளையர்களே – நட்சத்திரங்கள்!
-00o00- -00o00- -00o00- -00o00-

அலைக் காதல்
அலை வந்து பலமுறை சொல்லியும்
காதலை ஏற்றுக்கொள்வதே இல்லை
கடலோரத்துக் கரை!
-00o00- -00o00- -00o00- -00o00-

காற்றுக் காதல்
அழுதுபுலம்பும் தென்றலைக் காண
பொருள் தேடி விரைந்தான்
புயல்க் காதலன்!
-00o00- -00o00- -00o00- -00o00-

கவிதைக் காதல்
உண்மை பொய் எனஇருவரும்தான்
கவிதைப் பெண்ணைக் காதலித்தனர்
கவிப்பெண் ஏனோ எப்போதும்
பொய்யை மட்டுமே காதலிக்கிறாள்!!
-00o00- -00o00- -00o00- -00o00-

மனிதக் காதல்
ஆண்களும் பெண்களும்
பணத்தையே காதலிக்கின்றனர்
பணம் ஏனோ உண்டியலைத்தான்
திருமணம் செய்துகொள்கிறது!
-00o00- -00o00- -00o00- -00o00-
ம் ...
ReplyDeleteஆண்களும் பெண்களும்
ReplyDeleteபணத்தையே காதலிக்கின்றனர்
பணம் ஏனோ உண்டியலைத்தான்
திருமணம் செய்துகொள்கிறது!
அனைத்தும் அருமை ,இருந்தாலும் இந்த வரிகள் நச்
தமிழ் மணம் voted
எனது பதிவில் தங்களது தளத்திற்கு லிங்க் கொடுத்துள்ளேன் நண்பரே
ReplyDeleteநான் தான் முதல் போல கவிதை சூப்பர்
ReplyDeleteநேரடி ரிப்போர்ட்
இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6
கவிதை சூப்பர் முனைவரே
ReplyDeleteநேரடி ரிப்போர்ட்
இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6
//அலை வந்து பலமுறை சொல்லியும்
ReplyDeleteகாதலை ஏற்றுக்கொள்வதே இல்லை
கடலோரத்துக் கரை!//அருமை வரிகள் ..
super... panak kaatthal arumaiyo arumai...vaalththukkal
ReplyDeleteகாதல்தான் எத்தனை வகை
ReplyDeleteமிக உச்சத்தில் வானத்தில் துவங்கி
உண்டியல் வரை..
அருமையான கற்பனை
அழகான படைப்பு
வாழ்த்துக்கள் த.ம 5
நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா.
காதலுக்கு பொய் அழகு என்பதுபோல இந்த கவிதைப்பெண்ணுக்கும் பொய் அழகாக தெரிகிறாரோ? அதனால் தான் கவிதைப்பெண் பொய்ய்யை காதலிக்கிறாள்ன்னு நினைக்கிறேன். அனைத்துக் கவிதைகளுமே அருமை.
ReplyDeleteநல்ல கவிதை .அப்பா இவ்வளவு காதல் இருக்கா.
ReplyDeleteஅப்புறம் இதுதான் உங்கள் தளத்துக்கு முதல் வருகை .அருமையாக எழுதுகிறீர்கள் .வாழ்த்துக்கள்
tamilmanam-8,inly,tamil10 +1
ReplyDelete//
ReplyDeleteஅலை வந்து பலமுறை சொல்லியும்
காதலை ஏற்றுக்கொள்வதே இல்லை
கடலோரத்துக் கரை!//
அருமையான கவிதை
இன்று என் வலையில் ...
ReplyDelete“நான் ரொம்ப ஏழைங்க. பக்கத்து ஆளுகிட்ட பைசா கேளுங்க” - கருணாநிதி துயரம்
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
ReplyDeleteஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
அருமை முனைவரே
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஓ... எத்தனை விதமான காதல்.....
ReplyDeleteஎன் வலையில்:
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜே அறிக்கை: ஒரு பார்வை
நிஜம்மாவே மனித காதல் இல்லைதான்
ReplyDeleteதனித்தனி முத்துகள்-கவிதை
ReplyDeleteஇனித்திடும் வித்துக்கள்
கனிதரும் நற்சுவை-தரும்
காதலின் சொற்சுவை
பனிதரும் குளுமை-வந்த
பதங்களும் எளிமை
நனிவர வேண்டும்-நீர்
நலமுற வாழயாண்டும்
புலவர் சா இராமாநுசம்
வருகைக்கு நன்றி நண்டு
ReplyDeleteகருத்துரைக்கு நன்றி எம்ஆர்
வருகைக்கு நன்றி சதீஷ்
நன்றி பிரேம்
ReplyDeleteமகிழ்ச்சி சரவணன்
நன்றி இரமணி ஐயா
நன்றி இரத்தினவேல் ஐயா
ReplyDeleteநன்றி கோபிராஜ்
நன்றி காந்தி
நன்றி சூர்யஜீவா
நன்றி சசி
நன்றி மாயஉலகம்
நன்றி பிரகாஷ்
ReplyDeleteநன்றி இரமேஷ்
மகிழ்ச்சி புலவரே..
இன்று கூடல் பாலாவின் வலையில்
ReplyDeleteவெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்
கவிதை மிக மிக அருமை நண்பரே...
ReplyDeleteவாழ்த்துகள்...
முனைவரே,
ReplyDelete“மனிதக்காதல்” அபாரம்!
ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு விதத்தில் அசத்தல்தான். அதிலும் கவிதைக் காதலில் உள்ள நயமும், மனிதக் காதலில் உள்ள நையாண்டியும் ரசிக்கவைக்கின்றன.
ReplyDeleteஅசத்தலான காதல் கவிதைகள் படித்தேன் ரசித்தேன்
ReplyDeleteவாழ்த்துக்கள்
அனைத்தும் அருமை ஆனாலும் மனிதக் காதல் அணிதையும் மிஞ்சிவிட்டது!!
ReplyDeleteஅலை வந்து பலமுறை சொல்லியும்
ReplyDeleteகாதலை ஏற்றுக்கொள்வதே இல்லை
கடலோரத்துக் கரை!
ஆஹா என்ன ஒரு கற்பனை
அனைத்து கவிதைகளும் அருமை. . .
ReplyDeleteமுனைவரின் கவிதை முத்தாய்ப்பு..! கற்பனைக்கோ இல்லை எல்லை..! வாழ்த்துக்கள் ஐயா..!
ReplyDeleteநன்றி இராஜா
ReplyDeleteநன்றி சத்ரியன்
மகிழ்ச்சி கீதா
நன்றி கவியழகன்
நன்றி குடிமகன்
மகிழ்ச்சி தங்கம் பழனி
பணம் ஏனோ உண்டியலைத்தான்
ReplyDeleteதிருமணம் செய்துகொள்கிறது! /// அவ்வ்வ்வ்!