வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 13 அக்டோபர், 2011

!! அடக்கமான பெண் !!




அடக்கமான பெண்களும் டைனசரும்  ஒன்று என்கிறார்கள்!

ஏனென்றால் இரண்டுமே இப்போது உயிரோடு இல்லையாம்!

அடக்கம் என்ற சொல்லின் பொருள்.

அடக்கமான விலை – வாங்கத்தக்க விலை

அடக்கமான மனிதர் – இறந்து புதைக்கப்பட்ட மனிதர்

அடக்கமான பெண் - மனம், மெய், மொழியால் அடக்கமான பெண்

என வழக்கில் பல பொருள் கொள்கிறோம்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியன பெண்களுக்கும்..

பெருமையும், வீரமும் ஆண்களுக்கும் இருக்கவேண்டிய அடிப்படைப் 

பண்புகள் என்று நம் முன்னோர் இலக்கணம் வகுத்துள்ளனர். இதன் 

பொருள் கூட இன்று பல ஆண்களுக்கும் தெரியாது பெண்களுக்கும் தெரியாது!


(பெண்களின் அடிப்படைப் பண்பு.
அச்சம்  -அச்சமில்லாமல் அச்சப்படுவது போல் நடிப்பது.  
மடம்  -தெரிந்திருந்தாலும் தெரியாததைப் போல பண்ணும் பாவனை.  
நாணம்  -சொல்ல வந்ததை (சிறிது வெட்கத்துடன்) சொல்லும் இடம்.  
பயிர்ப்பு  -தன் கணவன் அல்லாத ஓர் ஆடவன் உடல் அறியாமல் கூடத் தன்மேல் படும்போது உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி. மென்மைத் தன்மை என்றும் இதனைக் கூறலாம்
ஆண்களின் அடிப்படைப் பண்பு.
பெருமை – செல்வச்சிறப்பு, வலிமை, வீரம், கொடை, மனைவியையும் தன் சுற்றத்தையும் தாங்கும் பண்பு ஆகியன)





² நாட்டுப்புற வழக்கில்………..

என்று கேட்பார்கள்.

மதுரை என்றால் மீனாட்சி ஆட்சி போல மனைவியின் கட்டுப்பாட்டில் குடும்பம் நடக்கிறது என்றும்,

சிதம்பரம் என்றால் நடராசரின் ஆட்சிபோல கணவனின் கட்டுப்பாட்டில் குடும்பம் நடக்கிறது என்று புரிந்துகொள்வார்கள்.


இதோ ஒரு சங்ககாலக்காட்சி இங்கு குடும்பம் யார் கட்டுப்பாட்டில் 

இருக்கிறது என்று பார்ப்போம்..

தலைவன் ஒருவன் தலைவியை மறந்து பரத்தையரிடமே தங்கி நீண்ட

நாட்களுக்குப் பின் தலைவியை நாடி வருகிறான். கோபத்தோடு இருக்கும் 

தலைவியை ஆற்றுப்படுத்தத் தோழியைத் தூதாகவிடுகிறான். 

தலைமக்களின் நல்வாழ்வை விரும்பும் தோழியும் தலைவியிடம் சென்று 

தலைவனுக்காகப் பேசுகிறாள்..

இச்சூழலில் தலைவன் கேட்க தோழியிடம் கூறுவதாக தலைவி வாயில் 

மறுத்து உரைப்பதே இப்பாடல்..

தோழி.. தலைவர் நம்மோடு ஓர் ஊரிலே வாழ்ந்தாலும் நாம் இருக்கும்தெருவில் வாரார்..

 இத்தெருவில் வந்தாலும் நன்றாகத் தழுவிக் கொள்ளார்..

நாணத்தை அழித்து, சரி எது? தவறு எது? என்று எண்ணும் நல்ல அறிவை இழக்கச் செய்யும் காமமானது, வில்லால் எய்யப்பட்ட அம்பைப் போல, போய் நெடுந்தூரத்தில்அழியும்படி, அயலாருடைய சுடுகாட்டைப் போல,  நம்மைக் கண்டும் வேறொன்றும் புரியாமல், செல்லுவார்.


ஓரூர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார்
ஏதி லாளர் சுடலை போலக்
காணாக் கழிப மன்னே நாணட்டு
நல்லறி விழுந்த காமம்
5
வில்லுமிழ் கணையிற் சென்றுசேட்படவே.

வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ.

குறுந்தொகைப் பாடலின் ஆங்கில வடிவம்.

Though he lives in the same town
he won’t come into my street
and if  he comes into my street
he’ll not come near and hold me close

He walks by , unseeing ,
as if past the cremation grounds
of strangers, and so my love
once unashamed and senseless
has fallen far away
like an arrow shot from abow




குறுந்தொகை 231. மருதம் - 

தலைவிகூற்று



பாடல் வழியே.

1.   தலைவியை மறந்து பரத்தையரிடம் சென்ற தலைவனின் காமத்துக்கு வில்லில் இருந்து எய்யப்பட்ட அம்பு உவமையான பொருத்தமாக உள்ளது.


2.   அன்பு சிறிதும் இன்றித் தலைவியைக் கண்ட தலைவனின் பார்வையில் தலைவி சுடலை (சுடுகாடு) போலவே காட்சியளித்தாள் என்ற உவமை தன் ஆற்றாமையையும், தலைவனின் அன்பின்மையையும் அழகுபட உணர்த்துவதாக உள்ளது.

3.   தலைவி அன்று அடக்கமான பெண் ( அவள் நற்பண்புகள் எல்லாம் வாய்க்கப்பட்டவள் என்று விரும்பிய தலைவன் திருமணம் செய்துகொண்டான்.

4.தலைவி இன்று அடக்கமான பெண் (அடக்கம் செய்யப்பட்ட சுடுகாட்டிலிருக்கும் புதைக்கபட்ட பெண்) என்ற வெறுப்பாகவே பார்த்துச் செல்கிறான்.


(ஒரு நகைச்சுவை வழக்கில் சொல்வார்கள்..

உனக்குத் திருமணம் செய்துகொள்ள பெண் எப்படி இருக்கவேண்டும் என்று ஆணிடம் கேட்டால்..
அவர் சொல்லுவார்...

நல்லா அடக்கமான பெண்ணாப் பாருங்க என்று..

அடக்கமான பெண் என்பதற்கு இப்படிக் கூடப் பொருள் இருக்கிறது என்று இந்த அகப்பாடலைக் கண்ட பின்புதான் உணர்ந்தேன்.



தொடர்புடைய இடுகைகள்.






62 கருத்துகள்:

  1. முதலில் இருந்த நகைச்சுவை அருமை முனைவரே.

    அடக்கம் பற்றிய விளக்கமும் அதற்கேற்றார் போல் குறுந்தொகை பாடலும் அருமை..

    பதிலளிநீக்கு
  2. இனி அடக்கமான பெண் வேண்டும் என கேட்டுவிடக் கூடாது
    நம் சொல்படி கேட்கிற பெண் எனத் தான் கேட்க வேண்டும்
    அருமையான பாடலைத் தேர்ந்தெடுத்து மிக அழகாக எளிதாக
    விளக்கமளித்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 2

    பதிலளிநீக்கு
  3. இன்றைய பதிவும் சுவாரஸ்யம்...

    கலக்குங்க சார்...

    பதிலளிநீக்கு
  4. அடக்கமான பெண்ணும் டைனோசரும் ஒன்று. தற்காலத்தில் இல்லை... மிகச் சரியாகச் சொன்னீர்கள். ஆண்கள்தான் வெட்கப்பட வேண்டிய காலம் இது. கவிதை வழக்கம்போல் மிக நன்று!

    பதிலளிநீக்கு
  5. //
    அடக்கமான பெண்களும் டைனசரும் ஒன்று என்கிறார்கள்!

    ஏனென்றால் இரண்டுமே இப்போது உயிரோடு இல்லையாம்!


    //


    ரொம்ப சரி

    பதிலளிநீக்கு
  6. எங்கும் மதுரை தான்... சிதம்பர ரகசியம் தான் சிதம்பரம்...

    பதிலளிநீக்கு
  7. அடக்கமான பெண்... நல்ல பாடல் விளக்கம்.

    பொண்ணு நல்ல அடக்க ஒடுக்கமா இருக்கணும்ங்கிறது நம்ம பக்கத்து பேச்சு வழக்கு இல்லையா?

    பதிலளிநீக்கு
  8. ///ஆண்களாக இருந்தாலும் பெண்காளாக இருந்தாலும்காதலிக்கும் போது
    இருப்பது போல திருமணத்துக்குப் பின்னர் இருப்பதில்லை. நிறைய
    மாறிவிடுகிறார்கள்./// அட ஆமா !

    பதிலளிநீக்கு
  9. அருமை. தமிழ் இல்க்கியம் அறிய ஆவலாத்தான் இருக்கு.. இனிஉஅ பகிர்வு. தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  10. அடக்கமிருந்தால் நல்லதுதான்.. அடக்கமாயிருந்தால் யோசிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. அடக்கமான பெண் என்பதற்கு இப்படிக் கூடப் பொருள் இருக்கிறது என்று இந்த அகப்பாடலைக் கண்ட பின்புதான் உணர்ந்தேன்.// நல்ல விளக்கம்.

    பதிலளிநீக்கு
  12. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நல்ல பண்புகள் இப்போதுள்ள பெண்களுக்கு தெரிவதே இல்லை, இப்பதிவை படிக்கு சில பெண்களாவது உணர்ந்தால் நலம்...

    பதிலளிநீக்கு
  13. தமிழ்10-ல் இணைத்துவிட்டேன்... நண்பரே...

    பதிலளிநீக்கு
  14. ஓஹ்! அடக்கம் -னா அப்படியும் ஒரு பொருள் இருக்கோ!

    அருமையான பகிர்வுங்க குணா.

    பதிலளிநீக்கு
  15. முனைவரே!
    அடக்கம் தன்னில்
    பல் பொருள்
    அடக்கம் எண்ணில்
    தந்தது நன்றே
    ஆங்கிலம் நன்றே
    அறிவதும் நன்றே
    பாங்குற நன்றே
    பகர்ந்ததும் நன்றே

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  16. . அன்பு சிறிதும் இன்றித் தலைவியைக் கண்ட தலைவனின் பார்வையில் தலைவி சுடலை (சுடுகாடு) போலவே காட்சியளித்தாள் என்ற உவமை தன் ஆற்றாமையையும், தலைவனின் அன்பின்மையையும் அழகுபட உணர்த்துவதாக உள்ளது./

    பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  17. குறுந்தொகைப் பாடலுடன் நல்ல பகிர்வு!

    பதிலளிநீக்கு
  18. அடங்குதல் ஒரு பாலினத்திற்காக

    அல்ல பெண் மட்டுமே அடங்கி கிடக்கிறாளா

    ஏன் அடங்க வேண்டும்

    நால்வகை குணங்கள் மனித பிறவிக்கு மட்டுமா?

    பரத்தையிடம் சென்று வருபவனை வா என்று சொல்லவா

    கண்ணகிகள் சமூகத்தில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்கா இலக்கியம்

    பதிலளிநீக்கு
  19. Hi Penkalai patri irunthathal intha blog-il vanthen.Nalla Karuthukal Bro.Most r true.but Acham,madam,nanam,adakam Nalla Penkalai vazhvikumenil - (if women can survive in this wild world having it)- then its OK.Panbum Discipline-um definite-a thevai.Following U.

    பதிலளிநீக்கு
  20. பதிவு சிந்தனைகளை பலவாறாக தூண்டுகிறது முனைவரே..
    அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகியவைகளுக்கு நீங்கள் கூறிய
    விளக்கங்கள் படம் பிடித்து வைத்துக் கொண்டேன்.

    நகைச்சுவையுடன் ஆரம்பித்து, கருத்துக் குவியல்களை
    எழுதிப் போயிருக்கிறீர்கள்.

    நன்று.

    பதிலளிநீக்கு
  21. அடக்கமான பெண்களும் டைனசரும் ஒன்று என்கிறார்கள்!

    ஏனென்றால் இரண்டுமே இப்போது உயிரோடு இல்லையாம்!//

    நல்லா இருக்கு உங்க கட்டுரை முனைவரே ..

    பதிலளிநீக்கு
  22. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு - விளங்கங்கள் நல்லா இருந்தது முனைவரே...

    அடக்கம்... எத்தனை அர்த்தங்கள் இந்த வார்த்தைக்கு

    பதிலளிநீக்கு
  23. அடக்கமான பெண் முதல் காமெடி செம சிரிப்பு குணா..அச்சம் மடம் நாணம் பயிர்பு...உண்மைப் பொருளை இன்று தான் படித்தேன் கொஞ்சம் புரிந்தும் உணர்ந்தும் நடந்திருந்தாலும் நான்குக்கும் பொருள் இப்ப தான் படிச்சேன்,,, நல்ல இடுகை குணா,,,,

    பதிலளிநீக்கு
  24. neengal solvathu sari , but my blogger pathi neenga sollavailla ...........,

    பதிலளிநீக்கு
  25. ''....அடக்கமான பெண்களும் இப்போது உயிரோடு இல்லையாம்!...''
    என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க!...கொஞ்சம் மனத்தாங்கலாகத்தான் இருக்கு..மற்றும் படி பதிவு சுப்பர் அழகாக ஆதித் தமிழுடன் இணைத்துள்ளீர்கள். அடக்கம் கூட...தொடரட்டும் பணி. வரலாமே எனது வலைக்கும்.....நல்வரவு!..
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  26. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு... அப்படின்னா??? டாக்டர் இது எல்லாம் எங்கே இருக்கு???

    அருமையான படைப்பு. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  27. @suryajeeva நயமாக அரசியலையும் அழகாகச் சாடிவிட்டீர்களே நண்பா..

    பதிலளிநீக்கு
  28. @Starjan ( ஸ்டார்ஜன் ) நீண்ட நாட்களுக்குப் பின் தங்கள் வருகை மகிழ்வளிப்பதாக உள்ளது நண்பா.

    பதிலளிநீக்கு
  29. @விச்சு நகைச்சுவை நயம் தோய்ந்த பார்வைக்கு நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  30. @MyKitchen Flavors-BonAppetit!. தங்கள் வருகை இந்தக் கட்டுரைக்கு மேலும் மதிப்பளிப்பதாக உள்ளது..

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  31. @naga physics தாங்கள் வலைப்பதிவு ஆரம்பித்தமைக்கு வாழ்த்துக்கள் நாகலிங்கம்..

    இயற்பியல் இளங்கலை மாணவர்கள் மத்தியில் தாங்கள் ஒரு முன்னோடி...

    பதிலளிநீக்கு
  32. @kovaikkavi
    அடக்கமான பெண்களும் உண்டு
    அடங்காப் பெண்களும் உண்டு..

    நகைச்சுவைக்காகத்தான் அவ்வாறு குறிப்பிட்டுச் சொன்னேன் கவிஞரே..

    பதிலளிநீக்கு
  33. @ஆதிரா அதெல்லாம் அந்தக் காலத்துப் பெண்களிடமிருந்த பண்புகளாம் ஆதிரா..

    இப்படி இன்றைய பெண்களும் இல்லை
    அவ்விலக்கணப்படி இன்றைய ஆண்களும் இல்லை!!!!!!!!!!

    காரணம் .....

    அவர்கள் இயற்கையின் குழந்தைகள்
    நாம் அறிவியலின் குழந்தைகள்!!!!!!!

    பதிலளிநீக்கு