வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 29 பிப்ரவரி, 2012

ரூபாய் - 86400 (ஒருநாள் செலவு)

நான் பிறந்தநாள் முதல் இன்றுவரை ஒவ்வொரு நாளும் ரூபாய் 86400 ஐ செலவு செய்துவருகிறேன்.
என்னங்க நம்பமுடியலயா?
இருந்தாலும் இதுதாங்க உண்மை.
நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவ்வளவு பணம் தினமும் எனக்குக் கிடைத்துவிடுகிறது.
சிறுவயதிலெல்லாம் இவ்வளவு பணத்தை என்ன செய்வது எப்படிச் செலவு செய்வது என்றே தெரியாமல் பயனற்ற செலவுகளைச் செய்துவந்தேன்.
அப்போது இந்தத் தொகை பெரிதாகத்தான் தெரிந்தது.
இவ்வளவு பணத்தையும் எப்படிச் செலவு செய்வது என்றெல்லாம் திகைத்திருந்த காலங்கள் உண்டு.

இப்போதெல்லாம் இவ்வளவு பணமும் போதவில்லை என்றே தோன்றுகிறது.
பணத்தின் மதிப்பு குறைந்துவிட்டதா? 
இல்லை
என் தேவை அதிகரித்துவிட்டதா?

என்றே தெரியவில்லை..
உணவு, உடை, உறைவிடம் என அடிப்படைத்தேவைகளுக்காக முதலில் செலவு செய்தேன்.
உறவுகளுக்காக, நட்புக்காக, பொழுதுபோக்கிற்காக என என் பட்டியில் காலந்தோறும் என்னோடு சேர்ந்து வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது.
இப்போதெல்லாம் இந்தப் பணத்தை நான் செலவு செய்கிறேனா?
இல்லை
இந்தப் பணம் தான் என் வாழ்க்கையைச் செலவு செய்கிறதா? 

என்றெல்லாம் எண்ணத்தோன்றுகிறது.

இவ்வளவு நேரம் நான் சொன்ன பணம் என்பது...
                                                                   24 மணிநேரம் 
ஒருமணிநேரத்துக்கு 60 நிமிடங்கள் 
ஒரு நிமிடத்துக்கு 60 மணித்துளிகள் 
24 X 60 X 60 = 86400










என்னங்க..
இப்ப சொல்லுங்க ஒவ்வொரு நாளும் நீங்க எவ்வளவு செலவு செய்கிறீர்கள்..?

                                                                                                          தொடர்புடைய இடுகை

ஏழாம் அறிவு உள்ளவரா நீங்கள்?

16 கருத்துகள்:

  1. panathula aarampichu!

    nerathula mudinthathu!
    vithiyaasam!

    neram pothavillai!

    பதிலளிநீக்கு
  2. காலம் எவ்வளவு முக்கியமானது, அதை வீணக்கக்கூடாது என்பதை விளக்கும் அருமையான பதிவு. நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  3. காலம் போன் போன்றது என்பதை அழகாக சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு