வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 20 பிப்ரவரி, 2012

உன் மாட்டை கொஞ்சம் பார்த்துக்கடா..



வண்ணக்கிளி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைப் பலருக் கேட்டிருப்பீர்கள்.
 இயற்றியவர்: கவிஞர் மருதகாசி அவர்கள் ஆவார்.இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் நினைவுக்கு வரும் இன்னொரு பாடலை அடையாளம் காட்டவே இவ்விடுகை.













 


காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க 
ஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க 
காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க 
ஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா
கோட்டைச் சுவர் போல வேலியிருக்கு 

குத்துங்கருவேல முள்ளுமிருக்கு 
கோட்டைச் சுவர் போல வேலியிருக்கு 
குத்துங்கருவேல முள்ளுமிருக்கு 
தோட்டக்காரன் கையில் கம்புமிருக்கு 
தோட்டக்காரன் கையில் கம்புமிருக்கு 
சுத்தி சுழற்றவே தெம்புமிருக்கு
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா

மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க ஆட்டம் போட்டி மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா
போகாத பாதையிலே போகக்கூடாது - சும்மா

புத்திகெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது போகாத பாதையிலே போகக்கூடாது - சும்மா புத்திகெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது மாடாகவே.... மாடாகவே மனுஷன் மாறக்கூடாது மத்தவங்க பொருளு மேல ஆசை வைக்கக்கூடாது
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா
 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க 
ஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
 மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 

ஒப்பீட்டு நோக்கவேண்டிய பாடல்... 


பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே
சுமாடுகளை வளர்ப்போர் அந்த மாடுகளை முறைப்படி பாதுகாக்கவேண்டும்.
அவ்வாறு பாதுகாக்காவிட்டால் என்னவாகும்?
அந்த  மாடுகளின் பால் அதன் உரிமையாளருக்குப் பயன்படாமல் போய்விடும்அந்தப் பசுக்களை முறையானபடி கட்டி மேய்த்து அவற்றின் வெறியையும் அடக்கினால் அந்தப் பசுக்களினால் கிடைக்கும் பயன் முழுவதையும் உரிமையாளர் பெறலாம்..

இங்கு இந்த ஐந்து பசுக்களைப் போலத்தான் நம் ஐந்து புலன்களும்.
                                                இதனை நாம் உணர்வதில்லை!
அதனால் இப்புலன்களின் பயனையும் 
நாம் முழுமையாக உணரவில்லை..
எதை எதையோ..
யார் யாரையோ..
எதற்காகவோ..
பார்த்துக்கொண்டிருக்கிறோம்..

இனி நம் புலன்களையும் கொஞ்சம் பார்த்துக்கொள்வோமா...

18 கருத்துகள்:

  1. அருமையான பாடல் முனைவரே..
    கேட்கக்கேட்க சலிக்காத பாடல்..

    புலனடக்கம் மிக முக்கியம்.
    பாடலை அழகாக புலனடக்கத்துடன்
    ஒப்பிட்டமை மனத்தைக் கவர்ந்தது..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்! கவிஞர் மருதகாசியின் பாடலோடு திருமூலரின் திருமந்திரத்தை எளிதாக விளக்கம் செய்தமைக்கு பாராட்டு! சிவராத்திரி சிறப்புச் செய்தி.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பாடல் .. உங்கள் கருத்தும் அருமை

    பதிலளிநீக்கு
  4. oppeedu arumai!

    pazhaya paadalai vaasiththa pothu-
    karuthukkal aazhamaaka therinthathu!

    பதிலளிநீக்கு
  5. அருமையான பாடல் அதன் விளக்கமும் அற்புதம் .

    பதிலளிநீக்கு
  6. நல்ல பகிர்வு

    நன்றி ...

    பதிலளிநீக்கு
  7. இங்கு இந்த ஐந்து பசுக்களைப் போலத்தான் நம் ஐந்து புலன்களும்.

    இதனை நாம் உணர்வதில்லை!
    அதனால் இப்புலன்களின் பயனையும்
    நாம் முழுமையாக உணரவில்லை..


    அருமையான ஒப்பீடு.. பயனுள்ள பகிர்வு.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. தலைவரே ! பழைய பாடலை கொடுத்தமைக்கு நன்றி !

    பதிலளிநீக்கு