வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

கல்விச்சாலை = சிறைச்சாலை


  1. "கல்விச் சாலைகள் திறக்கப்படும்போது சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன' என்பது பொன்மொழி.

  2. இந்தியாவில் இப்போது இருக்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், நூலகங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால் நம் நாட்டில் சிறைச்சாலைகளே இருக்கக்கூடாது!

  3. நாளுக்கு நாள் சிறைச்சாலைகள் நிரம்பிவழிகின்றன. அரசியல்வாதிகளும் ஆன்மீகவாதிகளும், தொழிலதிபர்களும் போட்டிபோட்டுக்கொண்டு சிறைச்சாலைகளை நிரப்பிவருகின்றனர்.

பிரேசில் நாட்டில் அரசாங்கத்திற்கு சிறைக் கைதிகள் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளனர், இதை தடுக்க புதுவிதமான வழியை பின்பற்ற உள்ளனர்பிரேசிலில் உள்ள நான்கு சிறைகளிலும் மிக கடும் குற்றம் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர், எனவே புதிதாக வரும் கைதிகளை அடைக்க இடவசதி இல்லை.எனவே இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட அரசாங்கம் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.இதன் படி, கைதிகளுக்கு 12 விதமான புத்தகம் படிக்கும் பணிகள் கொடுக்கப்படும். அதனை திறமையாக செய்து முடித்தால் தண்டனை காலம் குறைக்கப்படும். இலக்கியம், தத்துவயியல், அறிவியல் தொடர்பான புத்தகங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு புத்தகத்தையும் 4 நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்.
    இதனை சரியாக செய்தால் 1 ஆண்டு தண்டனை காலத்தில் அதிகபட்சமாக 48 நாட்கள் குறைக்கப்படும். இதன் மூலம் கைதிகள் அறிவு, திறமையை வளர்த்துக் கொள்வதோடு விரைவில் விடுதலையும் செய்யப்படுவார்கள்.

  1.  இந்தியாவில் மொத்தம் 1,356 சிறைச்சாலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள 3 லட்சம் கைதிகளில் 70 விழுக்காட்டினர் விசாரணைக் கைதிகள். காவல்துறையின் அலட்சியப் போக்காலும், நீதிமன்றங்களின் தாமதங்களாலும் இது ஒரு முடிவுக்கு வராமல் வளர்ந்து கொண்டிருக்கிறது.


  2. சரி போனது போகட்டும் நாளைய தலைமுறையினராவது சிறைச்சாலைகளை ஒழிப்பார்கள் என்று நாம் கனவு கண்டு கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைய மாணவர்களைக் கேட்டால் அவர்கள்...


    நாங்க இப்பவே சிறையில் தானே வாழ்கிறோம் என்கிறார்கள்..

    மாணவர்களின் பார்வையில் கல்விச்சாலை= சிறைச்சாலை

    சிறைச்சாலை
    கல்விச்சாலை
    நான்கு சுவர்
    நான்கு சுவர்
    மணியடிச்சா சோறு
    இங்கும் மணியடிச்சாதான் சாப்பிடமுடியும்
    கைதிகளுக்கு எண்கள்
    மாணவர்களுக்கும் பதிவெண் உண்டு
    இங்கே கதவுகளின் கம்பிகளை கைதிகள் எண்ணுவார்கள்
    இங்கு வகுப்பறை காலதர்(சன்னல்) கம்பிகளை மாணவர்கள் எண்ணுவார்கள்
    இங்கு கதவுகள் பூட்டியிருக்கும். அதனால் யாரும் வெளியே செல்லமுடியாது
    கதவுகள் திறந்திருந்தாலும் வகுப்பு நேரத்தில் வெளியே செல்லமுடியாது
    இங்கே வருபவர்கள் பணத்தை எடுத்துவிட்டு சிறைக்கு வருகிறார்கள்
    இங்கு வருபவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே வருகிறார்கள்
    இங்கே பல தண்டனைகள் உண்டு
    இங்கும் தான் புதிய புதிய தண்டனைகள் நாள் தோறும் உண்டு.
    தனியறையில் அடைக்கப்பட்டதால் யாருடனும் பேசமுடியாது
    கூட்டமாக இருந்தாலும் பக்கத்திலிருக்கும் நண்பர்களிடம் கூட பேசமுடியாது.

  3. இப்படி மாணவர்களின் மனதில் கல்விச்சாலை என்றாலே சிறைச்சாலை என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்துள்ளது.

  4. இன்றைய மாணவர்களில் எத்தனைபேர் கல்விச்சாலைகளுக்கு விரும்பிச்செல்கிறார்கள்?

  5. செய்தித்தாள்களை எடுத்தால் கல்விச்சாலைகளில் நடைபெறும் குற்றச்செயல்கள் நாள்தோறும் தொடர்கின்றன.
  6. ஆசிரியர் மாணவர் உறவுமுறை கெட்டுவிட்டது.

  7. மாணவர்கள் பலர் ஆசிரியர்களை காவலரைப் பார்ப்பதுபோலவே பார்க்கிறார்கள்
  8. ஆசிரியர்கள் பலர் மாணவர்களைக் குற்றவாளிகளைப் போலவே பார்க்கிறார்கள்.

    இந்தநிலை மாற என்ன செய்யலாம்....?

  9. அரசு மதுபானங்களுக் கடைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கல்விநிலையங்களுக்கும் கொடுக்கலாம்.

  10. கல்விநிறுவனங்கள் பாடத்திட்டங்களை வடிவமைக்கும்போது கூடுதல் கவனம் செலுத்தி வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதாக, மாணவர்கள் விரும்பும் வகையில் வடிவமைக்கவேண்டும்

  11. ஆசிரியர்கள் அந்தக்காலத்தில் சொற்பொழிவாற்றியதுபோலப் பேசிக்கொண்டே இருக்காமல் காலத்திற்கு ஏற்றவாறு புதியபுதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாடம் நடத்தலாம்.

  12. மாணவர்களும் ஆசிரியர்களை எதிரிகளாக எண்ணாமல் தம் மன உணர்வுகளை அவர்களுக்குப் புரியுமாறு நாகரீகமாக எடுத்துரைக்கவேண்டும்.

  13. பெற்றோரும் தம் பள்ளியில் சேர்த்தால் தம் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணாமல் தம் பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்கி அவர்களிடம் பேசவேண்டும்.

  14. அன்றைய காலத்தில் உன் பொழுதுபோக்கு என்ன? என்று கேட்டால் பல மாணவர்கள் நாவல்(புதினம்) படிப்பது என்பார்கள். பெரிய பெரிய வரலாற்று நாவல்களைக் கூட மிகவிரைவில் படித்துமுடித்துவிடுவார்கள்.. ஆனால் இன்றைய மாணவர்களுக்கோ நிறைய பொழுதுபோக்கு ஊடகங்கள் வந்துவிட்டன..     அலைபேசி, தொலைக்காட்சி, திரைப்படம், கிரிக்கெட்,
  15. இணையதளத்தில் சமூகதளங்கள்ன நிறைய உள்ளன

  16. அதனால் இந்த ஆற்றல்வாய்ந்த ஊடகங்கள் மாணவர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களைச் சிந்திக்க, சீர்கேடு அடையத் துணைநிற்கின்றன என்பதை நாம் உணர்ந்து அவற்றை ஆக்கபூர்வமாக எவ்வாறு கையாளவேண்டும் என்பதை மாணவர்களுக்குப் புரியவைக்கவேண்டிய காலச்சூழலில் நாம் இருக்கிறோம்.

  17. கல்விச் சாலைகளால் சிறைச்சாலைகளின் எண்ணிக்கையைக் குறைக்கமுடியாமல் போனாலும் பரவாயில்லை கல்விச்சாலைகளைச் சிறைச்சாலைகளாக ஆக்கமால் இருக்க என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் சூழலில் இன்று நாம் உள்ளோம்.


    1. கூடு என்றால் விரும்பி குடியிருக்கும் இடம்!
      கூண்டு என்றால் வேறு வழியின்றி இருக்கும் இடம்!








        இன்றைய கல்விச்சாலைகள் மாணவர்களின் கூடாகூண்டா?



    தொடர்புடைய இடுகைகள்









    2. தாளில்லாக் கல்வி................................

11 கருத்துகள்:

  1. நல்ல நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய சிறந்த ஆக்கம் அருமை !...மேலும் தொடர வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  2. கூர்மையான கருத்துகள்...மாற்றம் வேண்டும்... எப்போது...?எப்படி..? யாரால் ..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் ஒவ்வொருவரும் தான் நண்பரே..

      அதிலும் ஆசிரியர்களுக்கு பெரும் கடமையுள்ளது.

      நீக்கு
  3. //கல்விச்சாலை = சிறைச்சாலை//
    நல்ல விமர்சனம் நண்பரே...

    எனது தளத்தில் என் காதல் க(வி)தை... 02

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    nagu
    www.tngovernmentjobs.in

    பதிலளிநீக்கு