வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 29 நவம்பர், 2012

எவ்வளவு பெரிய உண்மை!!



பிறப்பு - இறப்பு
வெற்றி-தோல்வி
இன்பம்- துன்பம்
வரவு - செலவு
சிரிப்பு - அழுகை

என வாழ்வின் இருபக்கங்களையும் கண்டு மனிதர்கள் புலம்பிக்கொண்டிருக்க. சங்கஇலக்கியத்தில் புறநானூற்றுப் பாடல் ஒன்று அழகான விளக்கத்தைச் சொல்லிச் செல்கிறது.

வானில் நிலவு இருக்கிறதே..
அது வளர்கிறது, தேய்கிறது
தேய்கிறது, வளர்கிறது!
சிலகாலம் முழுநிலவாக இருக்கிறது, சில காலம் குறைநிலவாக இருக்கிறது.

அறியாத மக்களுக்கும் இந்த நிலவு என்ன பாடம் சொல்கிறது தெரியுமா?


இதுதான் வாழ்க்கை..


என்பதுதான் அந்தத் வாழ்வியல் தத்துவமாகும்.

வளர்வது தேயும்! தேய்ந்தது வளரும்!
பிறந்தது இறக்கும்! இறந்தது பிறக்கும்!


எவ்வளவு பெரிய சிந்தனை!!

இந்த அடிகளுக்கான சூழலும், உரையாசிரியர்களும் வாழ்க்கை நிலையாமை என்றே பொருள் கொண்டு சொன்னாலும். கால மாற்றங்களுடன் இப்பாடலை ஒப்பிட்டு நோக்கும்போது மனம் பெருவியப்படைகிறது.

நிலையாமை என்னும் எல்லையைக் கடந்து இந்தக் கோட்பாட்டை,

பரிணாம வளர்ச்சி
அறிவியல் மாற்றங்கள்
சமயக் கோட்பாடுகள்
சித்தர் தத்துவங்கள்
பிறவி தொடர்பான நம்பிக்கைகள்

என பலநிலைகளில் ஒப்புநோக்கிப் பார்க்கமுடிகிறது.

ஒப்பு நோக்கத்தக்க  சித்தர் பாடல்

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;

தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;


பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;


உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;


புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்




                                                           -சித்தர் பட்டினத்தார்-


தொடர்புடைய இடுகை


16 கருத்துகள்:

  1. அருமையான விளக்கம்...

    உண்மையை சொல்லிட்டீங்க முனைவரே... நன்றி...
    (2)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. மிக அருமையான பதிவு.....பகிர்வுக்கு மிக்க நன்றி....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  3. padhivirkku nandri
    surendran
    surendranath1973@gmail.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சுரேந்திரன்.

      நீக்கு
  4. வாழ்வியல் தத்துவத்தை அழகாக எடுத்து காட்டியுள்ளீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி உஷா அன்பரசு

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கவிஞரே

      நீக்கு
  6. அன்றே சொன்னதை இன்னும் அழகாக விளக்கி வைக்கும் உங்களுக்கும் நன்றி குணா !

    பதிலளிநீக்கு
  7. உண்மை வாழ்வை தத்துவத்துடனும் விளக்கத்துடனும் கூறியுள்ளீர்கள் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தொழிற்களம் குழு

      நீக்கு
  8. சிறப்பான விளக்கம். பகிர்வுக்கு நன்றி முனைவரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்

      நீக்கு