வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

கற்றறிந்தார் ஏத்தும் கலி!

சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் அகம்சார்ந்த நூல்களில் குறிப்பிடத்தக்க நூல் கலித்தொகை ஆகும்.

கலித்தொகை 150 பாடல்களைக் கொண்டது.11 அடிமுதல் 80 அடிவரை அடியெல்லை கொண்ட பாடல்கள் இதில் இடம்பெறும். கலித்தொகைப் பாடல்களைப் படிக்கும்போது ஒரு நாடகம் பார்த்த மனநிறைவு ஏற்படும்.

ஏறுதழுவுதல் பற்றிய குறிப்பு, கொல்லிப்பாவை பற்றிய செய்தி,சங்கம் பற்றிய குறிப்பு, ஆறலைக் கள்வர் பற்றிய குறிப்பு, இதிகாசங்களுடன் தொடர்புடைய செய்திகள் ஆகியவற்றை கலி்ததொகை வழியாக அறிந்துகொள்ளமுடியும்.

கலித்தொகையின் பெருமையை எடுத்தியம்பும் பழைய வெண்பா,

திருத்தகு மாமுனி சிந்தாமணி கம்பன்
விருத்தக் கவி  வளமும் வேண்டோம் - திருக்குறளோ
கொங்குவேள் மாக்கதையோ கொள்ளோம், நனி ஆர்வேம்
பொங்கு கலி இன்பப் பொருள்

-பழைய வெண்பா.

என்னும்  பழையவெண்பாவில் சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், திருக்குறள், பெருங்கதை ஆகிய புகழ்பெற்ற இலக்கியங்களைவிட சிறந்தது கலித்தொகை என்று சொல்லப்படும் கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.


8 கருத்துகள்:

  1. ஏறுதழுவுதல் பற்றிய குறிப்பு, கொல்லிப்பாவை பற்றிய செய்தி,சங்கம் பற்றிய குறிப்பு, ஆறலைக் கள்வர் பற்றிய குறிப்பு, இதிகாசங்களுடன் தொடர்புடைய செய்திகள் ஆகியவற்றை கலி்ததொகை வழியாக அறிந்துகொள்ளமுடியும்.
    மகத்தான செய்திகளை கொணட கலித்தொகை தொடர்ந்து பகிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி சசிகலா. கலித்தொகைக்கான இணைப்பை கலித்தொகை என்ற தலைப்பில் கொடுத்திருக்கிறேன்.

      நீக்கு
  2. ம்ம்ம்ம் நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன் நண்பரே!, அறிமுகம் செய்து வைத்ததற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கலித்தொகையின் சிறப்பை தெரிந்து கொண்டோம் முனைவரே...
    பாடல்களை விளக்கத்துடன் முடிந்தவரை பகிர்ந்தால் இன்னும் தெரிந்து கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி நண்பா. கலித்தொகைக்கான இணைப்பை கலித்தொகை என்ற தலைப்பில் கொடுத்திருக்கிறேன்.

      நீக்கு
  4. பள்ளிப் பாடங்களில் வந்த ஒன்றிரண்டு கலித்தொகை பாடல்கள் கூட படித்த நினைவில்லை. நூலைத் தேடிப்பார்த்துப் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு