வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 12 செப்டம்பர், 2013

வரலாற்றில் இன்று

தகவல்தொடர்பில் நாம் இன்று இவ்வளவு வளர்ந்துவிட்டசூழலில், வரலாற்றில் இன்றையநாள் குறிப்பிடத்தக்கதாகும். போரில்பெற்ற வெற்றிச் செய்தியை மக்களுக்குச் சொல்வதற்காக இருபத்தாறு மைல்களை மூன்று மணிநேரத்தில் ஓடிய வீரன்  பீடிப்பிடஸ் வெற்றிச்செய்தியைச் சொன்னவுடன் வீரமரணம் அடைந்தான் என்கிறது வரலாறு.

மாரத்தான் போர் (Battle of Marathon) கிமு 490 ஆம் ஆண்டில் கிரேக்கம் மீதான பாரசீகர்களின் முற்றுகையின் முதல் கட்டத்தில் இடம்பெற்றது. இப்போர் ஏத்தன்சு நகர மக்களுக்கும் பாரசீகர்களுக்கும் இடையே இடம்பெற்றது.

அரசே! அயோனாவிலுள்ள கிரேக்கர்கள் மக்களாட்சி வேண்டி கலகம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களது தாய்வழி தேசமான ஏதென்ஸ், எரித்திரியா போன்ற கிரேக்க நகரங்கள் அவர்களுக்கு உதவி செய்கின்றனசெய்தி வந்தது பெர்சிய பேரரசர் முதலாம் டேரியசுக்கு. கிரேக்கர்களை இப்படியே விடக்கூடாது. உடனே எதென்ஸ் மீது படையெடுத்து அவர்களுக்கு பாடம் புகட்டுவோம்’- டேரியஸ் ஆணையிட்டார். தரைவழியே சென்று தாக்கவேண்டுமானால் தாமதமாகிவிடும், தவிரவும் மலைப்பகுதிகளில் கிரேக்கர்களை வெல்வதும் அவ்வளவு எளிதல்ல. எனவே கடல் வழியாக சென்று திடீர் தக்குதல் நடத்த முடிவு செய்த பெர்சியா, அறுநூறு கப்பல்களில் இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களோடு கிளம்பியது.
முதலில் எரித்திரியா தீவை முற்றுகையிட்டது. ஆறு நாள்கள் முற்றுகையை தாக்குப்பிடித்த எரித்திரியா, துரோகிகளின் சதியால் பெர்சியாவிடம் வீழ்ந்தது. கோட்டையும், வீடுகளும், ஆலயங்களும் அழித்து தீக்கரையாக்கப்பட்டன, மக்கள் அடிமைகளாக சிறைபிடிக்கப்பட்டனர். இனி ஏதென்ஸை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் எதென்ஸ் நகரத்திலிருந்து சுமார் இருபத்தாறு மைல் தொலைவிலிருந்த மாரத்தானில் தரை இறங்கியது பெர்சியப்படை. பெர்சியர்களின் வலிமையான குதிரைப்படையுடன் தரைப்படையும் சிறந்த தளபதியான டேடிஸ் தலைமையில் அணிவகுத்து போருக்குத் தயாராக நின்றது.
மற்றொரு கிரேக்க நகர அரசான ஸ்பார்ட்டாவிற்கு உதவி கோரி மிக வேகமாக ஓடக்கூடிய வீரரான பீடிப்பிடஸ்(Pheidippides) என்பவனை ஏதென்ஸ் அனுப்பியிருந்தது. மலைகள் சூழப்பட்ட மாரத்தான் போர்களத்திலிருந்து ஏதென்ஸுக்கு செல்லும் வழிகளை அடைத்துக்கொண்டு பெர்சியர்களை எதிர்கொள்ள தயாராக இருந்தது ஏதென்ஸ் படை. வெறும் 10,000 காலாட்படைவீரர்களைக் கொண்டிருந்த ஏதென்ஸ் படைகளுக்கு ஒவ்வொரு பழங்குடி இனத்திற்கும் ஒரு தளபதி என்ற வகையில் பத்து தளபதிகள் இருந்தனர்.அனைத்துப்படைகளுக்கும் கால்லிமாக்கஸ் தலைமை வகித்தார். அவர்களுக்குத் துணையாக 1000 பிளேத்தீனிய வீரர்களும் களத்தில் இருந்தனர்.
ஐந்து நாட்கள் இரண்டுப்படைகளும் சண்டையிடாமலே இருந்தன. ஸ்பார்ட்டாவிடமிருந்து உதவி வருவதற்கு தாமதமாகும் என்ற செய்தி வந்து சேர்ந்தது. அன்றைக்கு, கி.மு.490 செப்டம்பர் மாதம் பன்னிரெண்டாம் நாள் மில்ட்டியாடிஸ் தான் கிரேக்கப்படைகளுக்குத் தலைமைத்தாங்கினார். அற்புதமான தாக்குதல் வியூகத்தை வகுத்த பின் வெற்றி அல்லது வீரமரணம்என்ற முடிவுடன் தாக்குதலை ஆரம்பித்த கிரேக்கப்படை யாரும் கற்பனை செய்திராத வகையில் மாபெரும் பெர்சியப்படையை சிதறடித்தது. 6000க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்த பெர்சியப்படை பின்வாங்கி கடல் வழியாக ஏதென்ஸ் நகரை தாக்க முடிவு செய்தது. மாரத்தான் போர்களத்தில் தாங்கள் பெற்ற மாபெரும் வெற்றிச்செய்தியை சொல்லவும், ஏதென்ஸ் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யவும் ஓட்டவீரரான பீடிபிடஸை தவிர யாரால் முடியும். தனது தாய்நாட்டின் வெற்றிசெய்தியை மக்களுக்கு சொல்ல மூன்று மணி நேரத்தில் இருபத்தாறு மைல்களை ஓடிக்கடந்த பீடிப்பிடஸ் செய்தியை சொன்ன மறுகணம் வீரமரணமடைந்து வரலாற்றில் நிலைபெற்றார். இந்த நிகழ்ச்சியின் நினைவாகவே மாரத்தான் ஒட்டம்என்னும் நெடுந்தூர ஓட்டம் பெயரிடப்பட்டிருக்கிறது. பின் ஏதென்ஸ் படை நகரை அடைந்தது. பயந்து போன பெர்சியர்கள் தரையிறங்காமலே பின் வாங்கி சென்றனர். இந்த போர்கள வெற்றியானது அதற்கு பின் வந்த கிரேக்க நகர அரசுகள் மக்களாட்சி வழியில் நடைபெற அடித்தளம் அமைத்துக்கொடுத்தது. வரலாற்றில் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் போரான முதல் மாரத்தான் போர்ஐரோப்பிய நாகரீக வளர்ர்சிக்கு வித்திட்டது என்றால் மிகையில்லை.

காலந்தோறும் ஏற்பட்ட தகவல்தொடர்பு மாற்றத்தை,
தகவல்தொடர்பு அடர்த்தி என்ற இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.




5 கருத்துகள்:

  1. அறியவேண்டிய நல்லதொரு வரலாற்றுச் செய்தி

    பதிலளிநீக்கு
  2. மாரத்தான் ஓட்டம் பற்றிய வரலாறு வாசிக்க சுவையாக இருந்தது.பயன்மிகு பதிவு

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு வரலாற்றுப் பதிவு முனைவரே...

    பதிலளிநீக்கு
  4. தகவலுக்கு மிக்க நன்றி. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இந்த ஆண்டு நடந்த மராத்தானின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் நான் எழுதிய சிறுகதை ”ஊன்றுகோல் நானுனக்கு”. படித்தீர்களா? –இமயத்தலைவன். (http://imayathalaivan.blogspot.in)

    பதிலளிநீக்கு
  5. மாராத்தான் ஓட்டம் பெயர் காரணம் அறிந்தேன். மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு