வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 19 ஜூன், 2014

நீங்களும் பெருமிதம் கொள்வீர்கள்!


கல்வி வணிகமாகிவிட்ட இன்றைய சூழலில் ஒரு பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்றால் நுழைவாயிலில் கோயிலோ, மாணவர்கள் பெற்ற தேர்ச்சிவிழுக்காட்டு விவரங்களோ, பணியிடம் பெற்ற விவரங்களோ இருக்கும். சிங்கப்பூரில் உள்ள பிரபல MDIS கல்வி நிலைய வளாகத்தில், உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள்  சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் திருவள்ளுவர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது என்பது தமிழராக நாமெல்லாம் பெருமிதம் கொள்ளத்தக்கவொன்றாகும்.

சிங்கையில் உள்ள பிரபலமான மேலாண்மை பட்டப்படிப்பு வழங்கும் MDIS என்னும் (Management Development Institute of Singapore) கல்வி வளாகத்தின் நுழைவாயிலில் உலகின் தலைசிறந்த பத்து சிந்தனையாளர்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழர்களின் பெருமையான திருவள்ளுவருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பலருக்கும் இது குறித்த செய்தி தெரியாது. அதனால் இதை பற்றியான செய்தியை நாம் பதிவு செய்கிறோம்.

பல்லாயிரம் பன்னாட்டு மாணவர்கள் பயிலும் இந்த கல்வி நிலையித்தில் இத்தைகைய சிந்தனையாளர்களின் சிலைகளை வைத்திருப்பது , மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்றுக் கொடுப்பதொடு, நன்மை தீமைகளை மாணவர்கள் பகுத்துணர்ந்து அறிய இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளது MDIS நிர்வாகம்.

இதில் உள்ள உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியில் இதோ...

இடமிருந்து வலம்.. லூயிஸ் பாஸ்டர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இப் கால்டன், பென் ஜான்சன், அரிஸ்டாட்டில், திருவள்ளுவர், பிளாடோ, கன்புயுசியஸ், சாக்ரடிஸ் மற்றும் மரியா மாண்டேசரி

இந்த சிலைகளை இந்த கல்வி நிலையத்தில் நிறுவுவதற்கு காரணமாக இருந்தவர் MDIS நிறுவனத்தின் பொதுச் செயலாளர் முனைவர் தேவேந்திரன் ஆவார். தமிழரான இவரது தாய் தந்தையின் பூர்வீகம் இலங்கை ஆகும். இக்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தவும், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை பெறுவதற்கும் இந்த தலைசிறந்த மனிதர்களின் உருவச் சிலைகள் உதவும் என்பதற்காக தேவேந்திரன் இந்த சிலைகளை கல்வி நிலையத்தின் வாசலில் நிறுவி உள்ளார். பன்னாட்டு மாணவர்கள் இப்போது யார் திருவள்ளுவர் என்பது பற்றியும் உலகப் பொது முறையாம் திருக்குறள் பற்றியும் அறிந்து வருவது தமிழர்களுக்கு பெருமை தானே.

இது போல் உலகில் பல்வேறு நாடுகளிலும் திருக்குறளின் பெருமையை பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் அறியுமாறு தமிழர்கள் தங்களால் முடிந்த செயல்களை செய்ய வேண்டும். தமிழுக்கு பெருமை சேர்க்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் பாராட்டுவோம்

முகநூலில் கண்ட இந்தச் செய்தி குறித்து மேலும் தெரிந்துகொள்ளும் ஆவலில் தேடியபோது கிடைத்த இணையதள விவரங்களை இந்த இணப்பில் காணலாம்.

(முகநூலில் இந்த செய்தியைப் பகிர்ந்த நண்பருக்கு நன்றி)

10 கருத்துகள்:

  1. பகிர்விற்கு நன்றி முனைவரே. பெருமைப்பட வேண்டிய விசயம்.
    நானும் திருக்குறள் பற்றி இன்றைய நாளிதழில் படித்த ஒரு விசயத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான தகவல்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. தமிழர் எல்லோரும் பெருமை கொள்வோம்.
    சிறந்த பகிர்வு

    பதிலளிநீக்கு
  4. அருமை ஐயா.பெருமைப்பட வேண்டிய ஒன்றை தான் தாங்கள் பகிர்ந்துள்ளீர் ஐயா.நன்றி.

    பதிலளிநீக்கு