வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு

அன்பான தமிழ் உறவுகளே..

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்         
              பரவும் வகை செய்தல் வேண்டும்”                            
  
 “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்  
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்”

என்ற பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் எங்கள் கல்லூரியின் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை இணைந்து “தமிழ் மற்றும் ஆங்கில எழுத்தாளர்கள் பார்வையில் இயற்கை” என்ற தலைப்பில் பன்னாட்டு அளவிளான கருத்தரங்கம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். தமிழ், ஆங்கில இலக்கியங்களின் சிறப்பியல்புகளை ஒப்பீட்டு முறையில் அறிந்துகொள்ளும் முயற்சியாக இக்கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கம் சிறப்பாக நடைபெறத் தாங்கள் துணைநிற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்



3 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா

    நல்ல முயற்சி நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. மிகச் சீரிய முயற்சி
    நிகழ்வு சிறப்புற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு