வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 29 பிப்ரவரி, 2016

உன்னைப் பற்றி நீ!



நம்மைப் பற்றி மற்றவா்கள் என்ன நினைக்கிறாா்கள் என்றுதான் நாம் பெரிதும் கவலைப்படுகிறோம். நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பது குறித்து சிந்திப்பவா்கள் சிலரே. வள்ளுவர் தம்  குறளில், நாம் எப்போதும் உயா்வு குறித்த எண்ணவேண்டும் என்கிறாா்.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து - 596

எண்ணுவதெல்லாம் உயா்வைப் பற்றியே எண்ணவேண்டும். அந்த உயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதைக் கைவிடக்கூடாது.

குறளுக்கான படம் தேடுவது ஒரு வகைத் தேடல்.
படத்துக்கான குறள் தேடுவது இன்னொரு வகை இந்தக் குறள் இந்தப் படங்களைப் பார்த்ததும் மனதில் தோன்றியது.




2 கருத்துகள்:

  1. அருமையான படங்கள். பொருத்தமான குறள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. உண்மை தான் ஐயா.திருவள்ளுவரில் தொடங்கி கலாம் ஐயா வரை கூறிய கருத்து எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும் என்பதை தான்.எண்ணங்கள் வானோக்கி உயர வேண்டும்.


    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு