வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 18 பிப்ரவரி, 2017

ஈகை என்பது..

எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப -    புறநானூறு 136
ஏழைகளான எமக்குக் கொடுப்பவர்கள் பயன்கருதாது மற்றவர்களுக்குக் கொடுப்போராகக் கருதப்படுவர்!
எங்களுக்கு அல்லாமல் பிறருக்குக் கொடுப்போர் பயன்கருதிக் கொடுப்பதால் தங்களுக்கே கொடுத்துக் கொள்பவர் ஆவா்!

-          
                                                   - துறையூர் ஓடைக்கிழார்.

4 கருத்துகள்: