வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 18 பிப்ரவரி, 2017

அன்றே சொன்னார் வள்ளுவர்!

இன்றைய சூழலில் தமிழக அரசியலில் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தமக்கு எது வசதியானது என்பதில் காட்டும் ஆர்வத்தில் எது சரியானது என்பதை மறந்துவிடுகிறார்கள். இந்த அரசியல்வாதிகளின் இயல்பை வள்ளுவர் ஏதாவது குறளில் குறிப்பிட்டிருக்கிறாரா? என்று தேடினேன்..
கயமை அதிகாரத்தில் அவர் கூறிய தகுதிகள் இன்றைய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருத்தமாகவே உள்ளன.
கயவர் என்பார், தமக்கு ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விரைவில் விற்றுவிடுவார்கள். தாம் அவர்களுக்கு அடிமையாவதற்காகத் தயங்காதவர்கள்!
இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்கு இவர் உரியவராவார் ஆவர்? என்று நம்மிடமே கேள்வி கேட்கிறார் வள்ளுவர்.
இதனை,
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் 
விற்றற்கு உரியர் விரைந்து - குறள் 1080:

என்ற குறள் வழி அறியலாம். 

8 கருத்துகள்:

  1. சமகால நிகழ்வுக்கு
    சங்ககாலப் படையல்
    சரி!
    சிந்தித்துச் செயற்படுவார்களா
    சமகாலக் கதாநாயகர்கள்!

    பதிலளிநீக்கு