வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 1 மார்ச், 2017

கண் பார்வையற்ற முதல் பட்டதாரிப்பெண்!


கண்கள் இரண்டும் தெரியாது! காதுகள் இரண்டும் கேட்காது!
வாய்பேசமுடியாது! விடாமுயற்சியால் பிறகு பேசவும் கற்றவர்!
பிரெயில் முறையில் ஆங்கிலம்பிரெஞ்சுஜெர்மன்கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்று எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தவர்!
39 நாடுகளுக்குச் சென்றவர்! 12 நூல்களை எழுதியவர்! கண் பார்வையற்ற முதல் பட்டதாரிப்பெண்! என பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரி,
அவர்தான் ஹெலன் கெல்லர்!
ஒருமுறை அவரிடம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தீர்கள் என்று கேட்கப்பட்டது.. அதற்கு அவர்,
இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோவொரு திட்டத்தோடுதான் படைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன்! அதை என்றாவது ஒருநாள் நான் உணர்வேன்! அப்போது அதுகுறித்து மகிழ்வேன்! என்று கூறினார். ஹெலன் கெல்லர்,
இவர் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை…

சார்லஸ் டிக்கின்சன் எழுதிய அமெரிக்கன் நோட்ஸ் என்ற புத்தகத்தை ஹெலனின் தாயர் 1886 ஆம் ஆண்டு படித்தார். கண்தெரியாத, காதுகேட்காத, பெண் லாரா என்பவர் எப்படிக் கல்விகற்றார் என்பது அப்புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது ஹெலனின் தாயாருக்கு நம்பிக்கையளித்தது. இந்தக் கதையை அவர் படிக்காமல் இருந்திருந்தால் ஹெலனின் வாழ்க்கையில் இப்படி மாற்றம் நடக்காமலேயே இருந்திருக்கும். ஹெலனுக்கு நம்பிக்கை வந்தது ஒரு திருப்புமுனை என்றால் ஹெலனுக்கு ஆசிரியையாக ஆனி சல்லிவன் வந்தது இன்னொரு திருப்புமுனை எனலாம்.

எந்தக் குறையுமின்றித் தோன்றிய ஹெலனின் வாழ்வில் ஏற்பட்ட அடுத்தடுத்த உடல்சார்ந்த குறைபாடுகளால் அவா் மனம் வாடிப்போய்விடவில்லை! 
அவரின் தாய் அவர் மனதில் நம்பிக்கை விதை தூவினார் 
அந்த நம்பிக்கை விதையை  ஆனி சல்லிவன் என்னும் ஆசிரியர் வளர்த்தெடுத்தார்! 
தம் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்ட மணித்துளிகளில் ஹெலனுக்கு அகவிழிப்பு ஏற்பட்டது! 
அந்த அகவிழிப்பு அவரை இருபதாம் நூற்றாண்டின் உலகின் மிகச் சிறப்புமிக்கப் பெண்மணியாக  மாற்றியது!

8 கருத்துகள்:

  1. போற்றுதலுக்கு உரிய நம்பிக்கைப் பெண்மணி
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  2. நம்பிக்கை தரும் பகிர்வு.... பாராட்டுகள்....

    பதிலளிநீக்கு