வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 27 மார்ச், 2017

ஆங்கில இலக்கிய முகவரியின் திருப்புமுனை!

 
வறுமையில் பிறந்து, 12 வயது வரை மட்டுமே பள்ளிக்குச் சென்று  இலத்தீன் மொழியில் இலக்கண, இலக்கியங்களைக் கற்றவர்!
துன்பியல், இன்பியல் என 38 நாடகங்களையும் 154 வசன கவிதைகளையும் இயற்றி ஆங்கில இலக்கியத்தின் முகவரியானவர்!
1587 ஆம் ஆண்டு 23 வயதில் பிழைப்புக்காக லன்டன் வந்து, நாடகக் கொட்டகைகளில் குதிரைவண்டிகளைக் காவல்காக்கும் வேலை பார்த்தவர்!
தம் ஆர்வத்தாலும், நினைவுத்திறனாலும், நாடக வசனங்களை மனப்பாடம் செய்தவர்!  விமர்சனம் செய்தவர்!
ஒருநாள் அரங்கம் நிறைந்த கூட்டம், நாடகத்தின் ஒரு பாத்திரம் இல்லாததால் அவசரமாக நடிகரானார்!
1592 லன்டன் மாநகரில், பிளேக் என்ற கொடிய நோய் மக்களை முடக்கியது! இரண்டு ஆண்டுகள் அனைத்து நாடகக் கொட்டகைகளும் முடங்கியது! அந்தக் காலத்தில் பல்வேறு நாடகங்களை எழுதிக் குவித்தார்.
ரோமியோ அன்ட் ஜூலியட், ஜூலியஸ் சீசர், மெகாபத், ஹேம்லெட், கிங் லியர், ஓதெல்லோ, அஸ் யூ லைக் இட் என புகழ்பெற்ற படைப்புகளை வழங்கிய ஆங்கில இலக்கியத்தின் கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், என பல்வேறு சிறப்புகளுக்கும் சொந்தக்காரர் அவர்தான் வில்லியம் சேக்சுபியர்!
குதிரைவண்டிகளைக் காவல்காத்துக்கொண்டிருந்தவர் நடிகரானது இவர் வாழ்வின் முதல் திருப்புமுனை என்றால், பிளேக் நோய் வந்து நாடும், நாட்டின் நாடகக் கொட்டகைகளும் முடங்கியது இவர் வாழ்வின் இரண்டாவது பெரிய திருப்புமுனை எனலாம்.
வறுமையில் பிறந்தாலும், ஆர்வமிருந்தால், அறிவுத் தேடலிருந்தால், திருப்புமுனைகளை நன்கு பயன்படுத்திக்கொண்டால் வரலாற்றில் இடம்பெறலாம் என்பதே சேக்சுபியரின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம்!


1 கருத்து: