வேர்களைத்தேடி........

பக்கங்கள்

▼

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

▼

திங்கள், 14 ஜூலை, 2014

அந்த நால்வர்?

கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். படம்:ஜெ.மனோகரன்.
பலரது பெயர்கள் அழைப்பதற்காகவே வைக்கப்படுகின்றன. சிலரது பெயர்களோ முன்மாதிரியான மனிதர்கள் என எடுத்துக்காட்டிப் பேசுவதற்காகவே வைக்கப்படுகின்றன. அந்த அடிப்படையில் பல மாணவர்களின் கனவு நாயகரான கலாம் அவர்கள் ஆற்றிய உரையில் அவரது மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களாக நால்வரைக் குறிப்பிட்டுள்ளார். அந்த நால்வர் யார் எனத் தெரிந்துகொள்வோமா..?

“தமிழ் மொழிக்கு சீரும், சிறப்பும் ஏற்படுத்தியவர்களில் திருவள்ளுவர், 
உ.வே.சாமிநாத அய்யர், ஜி.யு.போப், பாரதியார் ஆகியோர் எனது மனதில் நீங்காத இடம் பிடித்தவர்கள்” என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தெரிவித்தார்.

கோவை கொடிசியா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைரமுத்து மணி விழா, கவிஞர்கள் திருநாள் கலை இலக்கியத் திருவிழாவில் அப்துல்கலாம் பேசியதாவது:
“தமிழ் மொழியில் எத்தனையோ படைப்புகள் உருவாகியுள்ளன. இருந்தபோதும், தமிழ் படைத்து காத்து உயர்த்தி வளர்த்ததில் திருவள்ளுவர், உ.வே.சாமிநாத அய்யர், ஜி.யு.போப், பாரதியார் ஆகிய நால்வர் எனது மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள்.
திருவள்ளுவர், உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நூல் களைப் படைத்து வழிகாட்டியாக உள்ளார். வாழ்வியல் இலக் கணத்தை எந்த நாட்டிற்கும் பொருந்துமாறு வடிவமைத்ததால் அவரை மிகவும் பிடிக்கும்.
தமிழ் தாத்தா என்று அழைக்கப் படும் உ.வே.சாமிநாத அய்யரின் தமிழ்த் தொண்டு உலகம் உள்ள வரை மறக்க முடியாது. இவரது தமிழ் பணி கடலைவிடப் பெரியது. இவரது சீரிய முயற்சியால் செல்லரித்துப்போய் இருந்த இலக்கிய நூல்கள் காப்பாற்றப்பட்டு நம்மிடையே உலா வருகின்றன.
அடுத்தபடியாக, தமிழுக்கு ஜி.யு.போப் ஆற்றிய பங்களிப்பு அளப்பறியது.
அடுத்தபடியாக, எனது மனங்கவர்ந்தவர் மகாகவி பாரதியார் இரவா கவிதைகளை இயல்பாக பாடியவர். கவி உலகின் புதிய ஒளி ஏற்றியவர். விடுதலை கவிஞரின் வேகமும், வீரமும் மக்களை வெகுவாக ஈர்த்தது. என்னாலும் அழியாத மகாகவி.
1910-ம் ஆண்டிலேயே சுதந்திரம் கிடைத்துவிட்டதை நினைத்து பாடியவர். அவ்வளவு தீர்க்கதரசி. நதிகளின் இணைப்பு குறித்து அன்றே பாடியுள்ளார்.
தொழிலோடு கலை இருந்தாலும் நாட்டில் அறம் நிலவ வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். இவர்கள்தான் தமிழ் வளர்க்க அயராது பாடுபட்டவர்கள்” என்றார்.


நன்றி - தமிழ் இந்து
முனைவர் இரா.குணசீலன் at ஜூலை 14, 2014
பகிர்

7 கருத்துகள்:

  1. ராஜி14 ஜூலை, 2014 அன்று 12:58 PM

    திருவள்ளுவர்,
    உ.வே.சாமிநாத அய்யர், ஜி.யு.போப், பாரதியார்
    >>
    எல்லோர் மனதிலயும் இடம் பிடிக்க வேண்டியவர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
      பதிலளி
  2. kingraj14 ஜூலை, 2014 அன்று 2:04 PM

    நால்வரும் விரும்பத்தக்கவர்கள். பகிர்விற்கு நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
      பதிலளி
  3. Thulasidharan V Thillaiakathu14 ஜூலை, 2014 அன்று 4:16 PM

    அந்த நால்வரும் போற்றப்பட வேண்டியவர்களே! சரியாகத்தான் சொல்லி இருக்கின்றார் நமது மாண்பு மிகு முன்னாள் குடியரசுத் தலைவர்! நல்ல பகிர்வு! ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
      பதிலளி
  4. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்14 ஜூலை, 2014 அன்று 6:54 PM

    நால்வரும் உயர்ந்தவர்...சொல்லியிருப்பவரும் அப்படியே! பகிர்விற்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
      பதிலளி
  5. கரந்தை ஜெயக்குமார்14 ஜூலை, 2014 அன்று 8:51 PM

    நால்வர் பணிமகத்தானது
    போற்றுவோம்
    தம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
      பதிலளி
  6. திண்டுக்கல் தனபாலன்14 ஜூலை, 2014 அன்று 10:01 PM

    அனைவரும் போற்றத்தக்கவர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
      பதிலளி
  7. 'பரிவை' சே.குமார்14 ஜூலை, 2014 அன்று 11:52 PM

    திரு. அப்துல்கலாம் அவர்கள் சொன்ன நால்வரும் மொழிக்காக வாழ்ந்தவர்கள்... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
      பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...

‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
முனைவர் இரா.குணசீலன்
முனைவா் இரா.குணசீலன் தமிழ் இணைப்பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.