வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

இப்படியொரு விழாவைப் பாா்த்திருக்கிறீா்களா?

விழா என்பது பண்பாட்டின் அடையாளமாக,

 செல்வச் செழிப்பின் வெளிப்பாடாக,

புதுமையின் வடிவமாக

வெள்ளிவிழா, தங்கவிழா, வைர விழா என பல்வேறு விழாக்கள் 

காலந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ் மொழிக்கென 
நடத்தப்படும் விழாக்கள் அவ்விழாக்களுள் 
என்றுமே தனிச்சிறப்புடையன. 

ஏனென்றால் மற்ற விழாக்கள் ஒரு தனிமனிதனின் 

செல்வச்செழிப்பையோ, பதவி மற்றும் நட்புவட்டத்தின் சிறப்பையோ 

காட்டுவதாக அமையும். 

ஆனால் தமிழ் மொழிக்கென நடத்தப்படும் 

விழாக்கள். 

தமிழன் என்றோர் இனமுண்டு தனியேஅவர்க்கோர் குணமுண்டு''

என்று தமிழ் இனத்தின் மாண்பை இயம்புவதாக அமைவதே தமிழ் 

விழாக்களின் தனிச்சிறப்புகளாகும். 

தமிழ் மொழிக்கென நடத்தப்படும் 

விழாக்களுள், காலத்துக்கு ஏற்ப தமிழின் எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் 

கொண்டு நடத்தப்படும் இந்த வலைப்பதிவா் திருவிழா வரலாற்றில் ஒரு 

குறிப்பிடத்தக்க விழாவாக அமைகிறது. 


முச்சங்கம் வைத்ததும் 

மூன்று தமிழ் வளர்த்ததும் நம் நேற்றாக இருந்தது.

மின் வெளியில்

வலைமொழியில் 

சங்கம் வைத்து தமிழ் வளர்ப்பது நம் இன்றாக உள்ளது.

யாதும் ஊராக யாவரும் கேளிராக 

உலகு பரவி வாழும் தமிழர்களை 

இணையவழி தமிழ் மொழியால் இணைப்பது நம் நாளையாக இருக்க 

வேண்டும்!

என்ற முழக்கத்துடன் 

கொண்டாடப்படும் இந்த வலைப்பதிவா் திருவிழாவுக்கு 

வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம்.


18 கருத்துகள்:

  1. அருமையான வரவேற்பு அழகியலோடு!!! மிக்க நன்றி! சந்திப்போம்...புதுகையில்!

    பதிலளிநீக்கு
  2. அழைப்பிதழுடன் தங்கள் பாணி அழைப்பு அருமை
    புதுகையில் சந்திப்போம்

    பதிலளிநீக்கு
  3. மாறுப்பட்ட முறையில் எளிமையான அதே நேரத்தில் அருமையான அழைப்பு பதிவு. இதுக்குதான் பேராசிரியராக இருக்கணும் என்பது

    பதிலளிநீக்கு
  4. அழைப்பில் என்ன சொல்கிறோம் என்பதும், எப்படிச் சொல்கிறோம் என்பதும்தானே முக்கியம்? நீங்கள் அருமையாகச் சொல்லிவிட்டீர்கள் நண்பரே! மிக்க மகிழ்ச்சி. சந்திக்கும் ஆவலுடன் இருக்கிறோம். நன்றி

    பதிலளிநீக்கு
  5. நன்றி நண்பரே
    புதுகையில் சந்திப்போம்

    பதிலளிநீக்கு
  6. நீண்ட காலமாக தரமான வலைபதிவுகள் எழுதி வருபவர் தாங்கள் . விழாவில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்தால் அறிமுகமான தங்களைப் போன்ற பல பதிவா்களையும் நேரில் பார்க்கும் ஆர்வத்தில் நானும் உள்ளேன் நண்பரே.

      நீக்கு
  7. அழைப்பினை அருமையாக பகிர்ந்தீர்கள் ஐயா.

    பதிலளிநீக்கு