பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

சனி, 8 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் -1. கடவுள் வாழ்த்து



அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு- 1

எழுத்துக்களின் தொடக்கம் அகரம். உலகின் தொடக்கம் ஆதிபகவன்

கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்

நல் தாள் தொழாஅர் எனின் - 2

கல்வியின் பயன் அறிவுடையவரை வணங்குவதே

மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்

நில மிசை நீடு வாழ்வார். - 3

மலர்தூவி வணக்கப்படுபவரைப் பணிந்தவர்  புகழுடன் வாழ்வர்

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல - 4

பற்றற்றவர்களைப் பின்தொடர்பவர்களுக்குத் துன்பங்கள் இல்லை

இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்

பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு- 5

பக்தர்களுக்கு அறியாமையின் இருவினைகளும் வராது.

பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க

நெறி நின்றார் நீடு வாழ்வார் - 6

புலனடக்கத்துடன் வாழ்பவரைப் பின்பற்றுவோர் நெடுநாள் வாழ்வர்

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

மன கவலை மாற்றல் அரிது -7

மனக்கவலை நீங்க ஒப்பாரும் மிக்காருமில்லாதவரின் அடியைப் பற்று

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

பிற ஆழி நீந்தல் அரிது - 8

சான்றோர் வழிவாழ்பவரின்றி பிறர் துன்பக் கடலை கடப்பது அரிது

கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்

தாளை வணங்கா தலை- 9

ஈடில்லாத ஆற்றலுடையவரை வணங்கவே ஐம்புலன்களும் தலையும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார். - 10

இறைவனை வணங்குவோரே மறுபிறவி அடையார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக