வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 28 மார்ச், 2017

ஓட்டுநருக்கும், ஆசிரியருக்கும் என்ன வேறுபாடு?


ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் எஸ்.இராதகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவரிம் ஒரு மாணவர் எழுந்து,
“Sir, what is the difference between a rail engine driver and teacher? என்று கேட்டார்.
தொடர்வண்டி ஓட்டுநருக்கும், ஆசிரியருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. இந்தக் கேள்விக்கு இவர் என்ன பதில் சொல்லப்போகிறார் என யாவரும் ஆவலுடன் காத்திருந்தனர். யாரும் எதிர்பாரத பதிலை டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னார்.
“The Driver minds the train and the teacher trains the mind இந்த பதில் யாவரையும் சிந்திக்கவைத்தது.
இன்றைய சூழலில், மாணவர்களை மதிப்பெண் எடுக்கவைப்பதும், அவர்கள் வேலைவாய்ப்புப் பெறும் வழிமுறைகளைக் கூறுவதும் தான் ஆசிரியர்களின் பெரிய பணியாக மாறிவிட்டது,

மாணவர்கள் நாள்தோறும் சிந்திக்க பயிற்சியளிப்பதுதான் ஆசிரியரின் முதன்மையான பணி! இதை உணராததால் தான் பட்டதாரிகள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

சில ஆயிரம் அரசுப் பணிகளை அறிவித்தால் பல லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கிறார்கள்.

முதுநிலைப் படிப்பை முடித்த மாணவர்கள் கூட தனக்குள் இருக்கும் திறமை என்ன? என்று தெரியாமலேயே வெளியில் வருகின்றனர். காரணம் அவர்கள் மனப்பாடம் செய்யக் கற்ற அளவுக்கு, சிந்திக்கக் கற்கவில்லை.

பெற்றோரும் இன்றைய ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்ப்பது, தன் குழந்தை நிறைய மதிப்பெண் வாங்கவேண்டும்! நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்றுதான் எந்தப் பெற்றோரும் தம் குழந்தை சிந்திக்கப் பழகவேண்டும். என்று நினைப்பதில்லை.

ஆசிரியப் பணி என்பது பிற பணிகளிலிருந்து வேறுபட்டது. கலை, அறிவியல், வரலாறு என எல்லாப் பணியாளர்களையும் உருவாக்கும் அரிய பணிதான் ஆசிரியப்பணி. மாணவர்களின் மனங்களை வாசித்து அவர்களை சிந்திக்கப் பயிற்சியளிக்கும் சுதந்திரத்தை ஆசிரியருக்குக் கொடுத்தால் உலகமே போற்றும் சாதனையார்களை அவர்கள் உருவாக்குவார்கள்!

கல்விச் சாலைகள் அப்போதுதான் மாணவர்களின் விருப்பத்துக்குரிய இடமாகத் திகழும்!

இன்றைய நிலை தொடர்ந்தால் கல்விச்சாலைகள் மாணவர்களின் விபத்துக்குரிய இடமாகத்தான் அது திகழும்!

3 கருத்துகள்:

  1. ஆஹா இதுவரை அறியாத
    அற்புதமான வாக்கியம்
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இன்றைய மாணவர்கள்
    தேர்வில் முதலிடம் பெற
    உளப் (மனப்) பாடம் செய்கிறார்களே தவிர
    விரிவான அறிவைப் பெற
    சிந்தித்துச் செயலாற்ற முயலவில்லைத் தான்
    மாற்றங்கள் வரணும்...

    பதிலளிநீக்கு