வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிவா் சங்கமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவா் சங்கமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 அக்டோபர், 2015

இப்படியொரு விழாவைப் பாா்த்திருக்கிறீா்களா?

விழா என்பது பண்பாட்டின் அடையாளமாக,

 செல்வச் செழிப்பின் வெளிப்பாடாக,

புதுமையின் வடிவமாக

வெள்ளிவிழா, தங்கவிழா, வைர விழா என பல்வேறு விழாக்கள் 

காலந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ் மொழிக்கென 
நடத்தப்படும் விழாக்கள் அவ்விழாக்களுள் 
என்றுமே தனிச்சிறப்புடையன. 

ஏனென்றால் மற்ற விழாக்கள் ஒரு தனிமனிதனின் 

செல்வச்செழிப்பையோ, பதவி மற்றும் நட்புவட்டத்தின் சிறப்பையோ 

காட்டுவதாக அமையும். 

ஆனால் தமிழ் மொழிக்கென நடத்தப்படும் 

விழாக்கள். 

தமிழன் என்றோர் இனமுண்டு தனியேஅவர்க்கோர் குணமுண்டு''

என்று தமிழ் இனத்தின் மாண்பை இயம்புவதாக அமைவதே தமிழ் 

விழாக்களின் தனிச்சிறப்புகளாகும். 

தமிழ் மொழிக்கென நடத்தப்படும் 

விழாக்களுள், காலத்துக்கு ஏற்ப தமிழின் எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் 

கொண்டு நடத்தப்படும் இந்த வலைப்பதிவா் திருவிழா வரலாற்றில் ஒரு 

குறிப்பிடத்தக்க விழாவாக அமைகிறது. 


முச்சங்கம் வைத்ததும் 

மூன்று தமிழ் வளர்த்ததும் நம் நேற்றாக இருந்தது.

மின் வெளியில்

வலைமொழியில் 

சங்கம் வைத்து தமிழ் வளர்ப்பது நம் இன்றாக உள்ளது.

யாதும் ஊராக யாவரும் கேளிராக 

உலகு பரவி வாழும் தமிழர்களை 

இணையவழி தமிழ் மொழியால் இணைப்பது நம் நாளையாக இருக்க 

வேண்டும்!

என்ற முழக்கத்துடன் 

கொண்டாடப்படும் இந்த வலைப்பதிவா் திருவிழாவுக்கு 

வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம்.


செவ்வாய், 22 செப்டம்பர், 2015

புதுக்கோட்டை வலைப்பதிவா் திருவிழாவின் நோக்கங்கள்


தமிழ் மொழியின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டும் இல்லை அதன் தொடா்ச்சியிலும் உள்ளது. வாழத்தகுதியுள்ளன மட்டும் வாழும் அல்லன செத்து மடியும் என்ற கோட்பாடு உயிர்களுக்கு மட்டும் இல்லை மொழிகளுக்கும் தான். காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் மொழி மட்டுமே வாழும். அவ்வடிப்படையில் தமிழ்மொழியானது, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழாக இருந்து இன்று இணையத்தமிழ் என்ற நான்காவது தமிழாகத் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு காலத்தால் அழியாத மொழிகளின் பட்டியலில் செம்மாந்து நிற்கிறது.

       இணையத்தமிழ் வளா்ச்சியில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் இணையத்தமிழ் மாநாடுகளும், பதிவா் சந்திப்புகளும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திவருகின்றன. ஈரோடு, மதுரை, சென்னை என பல்வேறு ஊா்களில் ஏற்பட்ட பதிவா் சந்திப்புகள் இணையத்தில் பதிவா்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், தேவைகளையும் குறித்து விவாதித்தன. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பதிவா் சந்திப்புகளில் வலைப்பதிவுகளின் நோக்கும், போக்கும் குறித்து விவாதிக்கப்பட்டன. 2010 ஆண்டில் நடைபெற்ற பதிவா் சந்திப்புகளில் வலைப்பதிவுகளுடன், முகநூல் உள்ளிட்ட சமூகத்தளங்களில் தமிழ்மொழிப்பயன்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்ன.

கடந்த ஏழு ஆண்டுகளாக வலைப்பதிவில் தொடா்ந்து எழுதிவருவதால் பல்வேறு மாற்றங்களையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அம்மாற்றங்களுள் குறிப்பிடத்தக்க மாற்றம் என்றால்,
கூகுள்+, முகநூல்,டுவைட்டா், வாட்சாப் போன்ற சமூகத்தளங்களுடன் போராடி வலைப்பதிவுகள் பின்னடைவைச் சந்தித்ததைக் குறிப்பிட இயலும். இருந்தாலும் முகநூல் உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் முன்பே வலைப்பதிவுகளில் எழுதிய செய்திகளைத்தான் மீள்பதிவு செய்தனா் என்பதை தொடர்ந்து இணையத்தில் வாசிப்பவா்கள் நன்கு அறிவார்கள். 

 பிறமொழிகளுடன் ஒப்பிடும்போது இணையத்தில்  சொந்தமாக தமிழில் தட்டச்சு செய்து ஒரு செய்தியை வெளியிடுபவா்களைவிட காப்பி, பேஸ்ட் செய்து வெளியிடுபவா்களே அதிகமாக உள்ளனா். அதனால் பிற மொழிகளுக்கு இணையாக விக்கிப்பீடியா போன்ற தளங்களில் தமிழ்க்கட்டுரைகள் குறைவாகவே உள்ளன. அதனால் இணையத்தை, சமூகத் தளங்களைப் பயன்படுத்தும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட யாவரும் தமிழிலேயே தட்டச்சு செய்து செய்திகளைப் பகிர்ந்துகொள்வது காலத்தின், நம் தமிழ்மொழியின் முதன்மையான தேவையாகிறது. அவ்வடிப்படையில் இந்த புதுக்கோட்டையில் நடைபெறும் பதிவா் திருவிழாவை புதிய பல முயற்சிகளின் ஒட்டுமொத்த வடிவமாகவே பார்க்கமுடிகிறது.
       இதுவரை நடைபெற்ற பதிவா் சந்திப்புகளில் பெற்ற அனுபவங்களைக் கருத்தில் கொண்டு இந்தப் பதிவர் சந்திப்பு மிகவும் செம்மையாக வடிவமைக்கப்பட்டிருப்பதைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இந்த பதிவா் சந்திப்பை ஊக்குவிப்பது பதிவா்களை மேலும் ஆற்றலுடன் செயல்பட துணைபுரிவதாகவுள்ளது. இந்தப் பதிவா் சந்திப்பில் பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டி அறிவிப்புகளைக் காணும்போது சில ஆண்டுகளுக்கு முன்னா் தமிழ்மணம் திரட்டி நடத்திய போட்டிகள் கண்களில் நிழலாடுகின்றன. அக்காலகட்டத்தில் அந்தப் போட்டிகள் வலைப்பதிவா்களிடையே திருவிழா போன்ற உணா்வை ஏற்படுத்தின.
  
புதுக்கோட்டை பதிவா் சந்திப்பின் தனிச்சிறப்புகளாக...

  (1) கவிதை ஓவியக் கண்காட்சி 
    (2)    பதிவர்களின் அறிமுகம்
    (3)    தமிழிசைப் பாடல்கள்
    (4)    நூல்வெளியீடுகள்
    (5)    குறும்பட வெளியீடுகள்
    (6)    20க்கும் மேற்பட்ட பதிவர் விருதுகள்
    (7)    தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியீடு  
    (8)    பதிவர்களுக்கான போட்டிகள்  பரிசுகள்   
    (9)    புகழ்பெற்ற சான்றோர் சிறப்புரைகளுடன்
   (10)பதிவர்களின் புத்தகக் கண்காட்சி, விற்பனை ஆகியன பதிவா் திருவிழாவின் தனிச்சிறப்புகளாக உள்ளன. மேலும்,

·         புதிய பதிவா்களை இணையத்தில் தமிழ் எழுதஊக்குவித்தல்
·         தமிழ் எழுது மென்பொருள்கள் குறித்த அறிமுகம்
·         தமிழ்த் தட்டச்சு முறைகள்
·  வலைப்பதிவா் கையேடு வழி தொடா்ந்து எழுதுவோரை அடையாளம் கண்டுகொள்ளுதல்.
·         திரட்டிகளில் இணைத்தல்
·         விக்கிப்பீடியாவில் எழுதுதல்
·         வலைப்பதிவுக்கும் – இணையத்துக்கும் – முகநூல் – வாட்சாப் போன்ற ஊடகங்களில் எழுதுவதற்குமான வேறுபாடுகளை எடுத்தியம்புதல்.
·         தேடு இயந்திரங்களின் செயல்பாடுகள்.

போன்ற புதிய பதிவர்களின் சந்தேகங்களை போக்கிக்கொள்ளவும், அனுபவமிக்க பதிவா்களின் அனுபவங்களை எடுத்தியம்பவும் வாய்ப்பளிப்பதாக இருந்தால் இந்த பதிவா் சந்திப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமையும் என்று கருதுகிறேன்.

பேசுவது குறைந்து, கேட்பதும் குறைந்து, வாசிப்பு வழக்கமும் குறைந்து உலகமே முகநூலிலும், வாட்சாப்பிலும் மூழ்கிவரும் இந்த தொழில்நுட்ப காலத்தில் நகலெடுத்து ஒட்டும், (கட், காப்பி, பேஸ்ட்) வழக்கமும், யாரோ பகிர்ந்ததை பகிர்வது, லைக் செய்வது என்பதும் தன் உணா்வுகளை இருமொழி கலந்து எழுதுவது, ஸ்மைலி என்னும் உணா்வுக் குறியீட்டு மொழியில் வெளியிடுவதும் பெருகிவரும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற பதிவா் மாநாடுகள் கட்டாயமான தேவையாக அமைகின்றன. இதுபோன்ற பதிவா் திருவிழாக்கள் வழியாக இணையத்தில் தமிழில் எழுதவேண்டும் என்ற அடிப்படையான எண்ணம் ஊட்டப்படுவதுடன், பேச்சு எழுத்தாகவும், எழுத்து நூலாகவும், நூல் வரலாற்றின் ஆவணமாகவும் நிலைபெறுகிறது என்ற சிந்தனை விதைக்கப்படுகிறது.

இந்த பதிவா் திருவிழா நம்ம வீட்டு திருவிழா என்ற உணா்வோடு நான் கலந்துகொள்ள ஆா்வமாக உள்ளேன். நீங்களும் வாங்க... சந்திக்கலாம்.

(இடம் -புதுக்கோட்டை,

தேதி -11-10-2015   கிழமை - ஞாயிறு  

விழா - வலைப்பதிவர் திருவிழா-2015”)

போட்டிகள் குறித்த அறிவிப்பு..  கவிஞா் நா.முத்துநிலவன் ஐயா 

அவா்களின் இந்த வலையில் வளரும் கவிதை




ஞாயிறு, 18 டிசம்பர், 2011

ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு - நினைவுத்துளிகள்




  • சிந்திக்கவைக்கும் தமிழின் பெருமையோடு குழந்தைகள் தமிழ்வாழ்த்துப் பாட சரியாக இன்று 10.30 மணிக்கு தொடங்கியது ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு.
  • குழும உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வருகை தந்த பதிவர்களை இனிதே வரவேற்றனர்.
  • குழுமத்தின் தலைவர் தாமோதர் சந்ரு வருகை தந்த அனைவரையும் முகமலர்ச்சியுடன் வரவேற்று அமர்ந்தார்.
  • சிறப்பு விருந்தினரான “ஸ்டாலின் குணசேகரன்” அவர்களின் பெருமைகளைக் கூறி மனம் நிறைய வரவேற்றார் அன்பர் ஆருரன் அவர்கள்.
  • நண்பர் ஈரோடு கதிர் அவர்கள் குழுமத்தின் வரலாறை அழகுபட தொகுத்து உரைத்தார்.
  • விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 15 சிறந்த தமிழ்ப் பதிவர்களைத் தேர்வு செய்து அவர்களின் சமூகப் பணியைப் பாராட்டி நினைவுப் பரிசளித்து மகிழ்ந்தார்கள். அப்போது அந்தப் பதிவர்களின் சாதனைகள் காணொளிகளாகத் திரையில் தோன்றச் செய்தமை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
  • பாராட்டப் பட்ட பதிவர்கள்..
  1. உண்மைத்தமிழன் சரவணன்
  2. ஜாக்கிசேகர்
  3. ஐயப்பன் ஜீப்ஸ்
  4. அதிஷா
  5. தேனம்மை இலட்சுமணன்
  6. வெயிலான் இரமேஷ்
  7. வலைச்சரம் சீனா ஐயா
  8. கே.ஆர்.பி செந்தில்
  9. சுரேஷ்பாபு
  10. லக்கிலுக் யுவகிருஷ்ணா
  11. இரவிக்குமார்
  12. யெஸ்.பாலபாரதி
  13. இளங்கோவன்
  14. மகேந்திரன்
  15. ஓவியர் ஜீவா
  • ஈரோடு கதிர், மகேசுவரன், அருள்மொழி ஆகியோர் அழகுத் தமிழில் செம்மையாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது பெருமிதம் கொள்வதாக அமைந்தது.
  • ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தொழில்நுட்பத்தின் தற்கால வளர்ச்சியையும், வலைப்பதிவர்களின் தனிச்சிறப்பையும், பதிவின் தேவையையும் அழகாக சிந்திக்கும் விதமாக எடுத்துரைத்தார். “ வலைப்பதிவர்கள் சமூக மாற்றத்தில் பெரும்பங்காற்றுகிறார்கள்” என்பதை மிகவும் பெருமிதத்துடன் முன்மொழிந்து சென்றார்.
  • பரிசு பெற்ற 15 பதிவர்களும் விருது பெற்றமைக்கு ஏற்புரை தெரிவித்தனர்.
  • செல்வக்குமார் அவர்களின் குறும்படத்தை சிறப்பு விருந்தினர் வெளியிட்டார்.
  • ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்து பாராட்டினார்கள்.
  • ஈரோட்டில் முதல் முறை நடந்த கூட்டத்துக்கு 70 பேர்களும், இரண்டாவது ஆண்டு நடந்த கூட்டத்துக்கு 150 பேர்களும் இப்போது நடந்த கூட்டத்துக்கு 200 பேருக்குக் குறையாமல் பதிவர்கள் வந்தார்கள் என்பதை ஈரோடு கதிர் அவர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். மேலும் இக்குழுமத்தை அறக்கட்டளையாக மாற்றும் வாய்ப்பு உள்ளது என்பதையும் மகிழ்சிசயுடன் அவர் தெரிவித்தார்.
  • நிறைவாக நண்பர் பாலாசி அவர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
  • அடுத்து வருகை தந்த ஒவ்வொரு பதிவர்ளும் மேடைக்கு வந்து தம்மை அறிமுகம் செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
  • பதிவர்கள் ஒவ்வாருவரும் பெருமகிழ்ச்சியுடன் சென்று மேடையில் தம்மை அறிமுகம் செய்துகொண்டனர்.
  • சைவ, அசைவ உணவுக்கு ஏற்பாடு செய்திருந்த குழுவினர் பதிவர்களை அன்புன் மதிய உணவுக்கு அழைத்தனர்.
  • அவர்கள் அளித்த உணவைவிட அவர்கள் அருகே வந்து என்ன சாப்பிடுறீங், வேறு என்ன வேண்டும் என்று அன்போடு கேட்டது உணவின் சுவையை அதிகப்படுத்துவதாக அமைந்தது.
  • விழா முடிந்தும் பதிவின் உறவுகள் நீண்ட நேரம் ஒருவரை ஒருவர் பார்த்து உறவாடி மகிழ்ந்தனர்.

அன்பு நண்பர்கள் தாமோதர் ஐயா,ஈரோடுகதிர், ஆருரன்,சங்கவி, வால்ப்பையன், பாலாசி, இராஜா, கார்த்திக் ஆகிய குழும உறுப்பினர்களின் அன்பான வரவேற்பு என் குடும்த்தில் நடக்கும் திருமண விழாவுக்குச் சென்றுவந்ததுபோல மனநிறைவைத் தந்தது.

சீனா ஐயா
தமிழ்பேரன்ஸ் சம்பத்
தமிழ்வாசி பிரகாஷ்
வீடு.சுரேஷ்
எழுத்தோசை தமிழரசி
வானம்பாடிகள் ஐயா 
பொன்னியின் செல்வன் கார்த்திகேயன்
ஸ்ரீ

என வலையுலக சொந்தங்கள் பலரையும் நேரில் கண்டு மனம் விட்டுப் பேசியது மறக்கமுடியாத அனுபவமாகும்.


வலைப்பதிவர் சந்திப்பு தந்த நம்பிக்கைகள்.

  • வலைப்பதிவர்கள் நினைத்தால் சமூகத்தில் நல்ல பல மாற்றங்களை உருவாக்க முடியும்.
  • ஒவ்வொரு பதிவர்களும் ஏதோ ஒரு தனித்திறன்களுடனும், ஆயிரம் ஆயிரம் கனவுகளுடனும் சமூக மாற்றங்களுக்காகத் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கூட்டத்தின் அதிர்வாக இருந்தது.
  • பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த பதிவர்களின் முகங்களில் சொந்த வீட்டுக்கு வந்ததுபோன்ற அன்பு பிரதிபலித்தது.
  • இயல், இசை, நாடகத்தோடு தமிழ் என்றோ தற்கொலை செய்துகொண்டது என்ற சிலரின் பொருளற்ற வாதங்களைப் பொய்யாக்கும்விதமாக, தமிழ் தன்னை “இணையத்தமிழ்” என்று பெயர்மாற்றிக் கொண்டு வலைப்பதிவு, முகநூல், டுவைட்டர் என தன்னம்பிக்கையோடு உலா வருகிறது என்பதை எடுத்தியம்புவதாகவும் இவ்விழா அமைந்தது.

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்துக்கு வாங்க

தமிழ் வலையுலகம் என்வாழ்வில் இன்னொரு உலகம் போன்றது. இவ்வுலகத்தோடு எனக்கான தொடர்பு 5 ஆண்டுகள் தான் ஆனாலும்.
100 ஆண்டுகள் வாழ்ந்து சம்பாதிக்கவேண்டிய தமிழ் உறவுகளைப் பெற்றுத்தந்திருக்கிறது இந்த வலையுலகம்.

“நினைத்துப் பார்த்தல் கூட ஒருவிதமான சந்திப்புதான்” அந்த வகையில் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காவிட்டாலும் வலைப்பதிவு என்னும் ஊடகவழியே நினைத்துப் பார்த்தல் ஒரு இனிமையான அனுபவமாகும்.


எழுத்துக்களாலும், கருத்துக்களாலும் அறிமுகமான ஒவ்வொரு தமிழ் உறவுகளும்...
ஒரே குடும்பத்தில் பிறந்தவர்போல, 
ஒரே பள்ளியில் படித்தவர்போல பேசிப்பழகியமை வியப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. 

தமிழ் வலையுலகம் எந்த இலக்கு நோக்கிச் செல்கிறது..?
தமிழ்ப் பதிவர்களின் நிறைகள்? குறைகள்?தேவைகள்?

என பதிவர்கள் தம்மைத் தாமே மதிப்பீடு செய்துகொள்ளும் களமாக இந்தக்கூட்டம் அமையும் என நம்புகிறேன். இந்தமுறை இக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

அன்பான தமிழ் உறவுகளே..

உங்களையும் இக்கூட்டத்துக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறேன்..


ஈரோடு வலைப்பதிவர் சங்கமம்-2011 

 18.12.2001 ஞாயிறன்று, 

ஈரோடு, பெருந்துறை சாலை, 

பழையபாளையத்தில் உள்ள ரோட்டரி CD அரங்கில், 

காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் இரண்டு மணிக்கு 

நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 

நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், தங்கள் வருகையை 15.12.2011 வியாழக்கிழமைக்குள் erodesangamam@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு
 
தங்கள் பெயர்
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்து விழாக்குழுவினருக்குத் துணைநிற்போம்.



தொடர்புடைய இடுகைகள்



புதன், 15 டிசம்பர், 2010

ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் 2010




மறக்கமுடியுமா....
ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு முடிந்து ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டன என்றால் நம்பமுடியவில்லை.நேற்றுதான் சந்தித்ததுபோல இருக்கிறது


பள்ளிக்கால பழக்கமா..?
கல்லூரி தந்த நட்பா..?
தொப்புள் கொடி உறவா..?

இவையெல்லாவற்றுக்கும் மேலே தமிழ்மொழி தந்த உறவிது..!

தமிழின் இனிமையை,

பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
பக்கத் துறவின் முறையார்
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை
குயில் போற் பேசிடும் மனையாள் = அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை
அயலவராகும் வண்ணம் = தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர்
.“

என்பார் பாரதிதாசன். இவ்வினிய மொழிதந்த உறவிது அதனால் இவ்வுறவுக்குத் தனிச்சிறப்பு உண்டு.

எழுத்துக்களால் மட்டுமே அறிமுகமான உறவுகளை நேரில் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தின் சங்கம முயற்சி இணையத்தமிழ் வளர்ச்சியின் அடுத்த படிநிலையாகவே கருதத்தக்கதாகும்.

இன்னும் இரண்டு மூன்று கடற்கோள்களுக்குத் தேவையான குப்பைகள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால் இந்த நூற்றாண்டின் தேவைக்குக்கூட அறிவும் உணர்வும் இன்னும் ஆக்கப்படவில்லை.

தமிழன்னைக்குக் காதில் குண்டலகேசியும், கழுத்தில் சிந்தாமணியும், கையில் வளையாபதியும், இடுப்பில் மணிமேகலையும், பாதத்தில் சிலம்பும் மட்டும் போதாது.

அவள் சிரசில் கம்யூட்டர் மகுடம் ஒன்று கட்டாயம் சூட்டுங்கள்.
துருப்பிடித்த கத்தியைத் தூர வீசுங்கள்.

தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டு ஆங்கிலத்திற்கு வயிற்றை விற்றுவிட்ட அறிவுஜீவிகளே!

நீங்கள் தமிழை வாசிக்கவுமில்லை.தமிழில் யோசிக்கவுமில்லை.
முற்றிய மரத்தில் வைரம் பாய்ந்திருப்பது போல நமது மூத்த மொழியும் வைரம் பாய்ந்திருக்கிறது.

நமக்குத் தாய்மொழியாய்த் தமிழ் அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.
ஆனால், அப்படியொரு வாய்ப்புக் கிட்டியதற்காகவே நாம் வாழ்நாள் முழுவதும் கர்வப்படலாம்.


இதோ நாம் தமிழர் என்று கர்வப்பட ஓர் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது ஈரோடு வலைப்பதிவர் சங்கமக்குழு..

நாள் : 26.12.2010 ஞாயிறு
நேரம் : காலை 11.00 மணி
இடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு


தமிழன்பர்கள் அனைவரையும் வருக வருகவென ஈரோடு பதிவர்கள் சார்பாக வரவேற்கிறேன்..