தனக்கு இருக்கும் பகை இன்னது இன்னது என்று
அடுக்கிக் காட்டிப் புலவர் தன் வறுமை நிலையை விளக்குகிறார்.
யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப
இழை வலந்த பல் துன்னத்து
இடைப் புரை பற்றி, பிணி விடாஅ
ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த
பேஎன் பகை என ஒன்று என்கோ?
உண்ணாமையின் ஊன் வாடி,