வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


வெள்ளி, 23 ஜனவரி, 2026

திருக்குறள் – மருந்து அதிகாரம் நோட்புக் எல்.எம் வழி ஓர் ஆய்வு

   


(கோபி,பி.கே.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 22.01.2026 அன்று நடைபெற்ற இலக்கியங்களில் தொழில்நுட்பம் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கில் வழங்கிய ஆய்வுக்கட்டுரை)

Abstract

Thirukkural is a book full of wisdom. People gain knowledge by reading Thirukkural. Depending on the level of knowledge of the readers of this book, new ideas can be gained. This article explores the techniques of converting the subtle messages of Thiruvalluvar's medicinal power into media files suitable for learning and teaching using the Google Notebook LM tool.

குறிச்சொற்கள்

திருக்குறள், Google Notebook LM tool. செய்யறிவுக் கருவி, செயற்கை நுண்ணறிவு, மருந்து,

முன்னுரை

              நவில்தொறும் நயம்தரும் நூல் திருக்குறள். எல்லாப் பொருளும் இதன்பால் உள அதனால் தொட்டனைத் தூறும் மணற்கேணிபோல படிக்கப் படிக்க மனிதகுலம் திருக்குறளால் அறிவுபெறுகிறது. இந்நூலைப் படிப்பவர்களின் அறிவுநிலைகளுக்கேற்ப புதிய புதிய சிந்தனைகளைப் பெறமுடிகிறது. திருவள்ளுவர் கூறும் மருந்து அதிகாரத்தின் நுட்பமான செய்திகளை கூகுள் நோட்புக் எல்.எம் என்ற செய்யறிவுக் கருவி வழி, கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற ஊடகக்கோப்புகளாக மாற்றும் நுட்பங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

திங்கள், 19 ஜனவரி, 2026

திருக்குறள் – உணர்வுப் பகுப்பாய்வு

 (இந்த ஆய்வுக்கட்டுரை அரிமாநோக்கு இதழில் 

Volume-20 / Issue-1 / Jan-Mar 2026 

வெளியிடப்பட்டது என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்) 



ஆய்வுச் சுருக்கம்

        திருக்குறளுக்கு, பல உரைகள், மொழிபெயர்ப்புகள், திறனாய்வுகள் அச்சுவடிவில் உள்ளன. தேடுபொறி நுட்பங்கள், செய்யறிவு நுட்பங்களுக்கேற்ப ஒருங்குறி வடிவிலும், சொல்லடைவு, தொடரடைவு, பெரிய மொழி மாதிரி என பல வடிவங்களில் இணையத்தில் திருக்குறளை தரவாக்கம் செய்வது காலத்தின் தேவை என்பதை உணர்த்துவதுடன், திருக்குறளில் இடம்பெறும் உணர்வுகளை தொல்காப்பியரின் மெய்ப்பாட்டிலை அடிப்படையாகக் கொண்டு பெரிய மொழிமாதிரியாக உருவாக்கும் வழிமுறைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

திறவுச்சொற்கள்

          திருக்குறள், உணர்வுப் பகுப்பாய்வு, மெய்ப்பாடு, பெரிய மொழி மாதிரி, Sentiment analysis, LLM,

முன்னுரை

          மனித வாழ்வின் வழிகாட்டியாகத் திகழும் நூல் திருக்குறள். இந்நூலுக்குப் பல உரைகள் வந்தாலும் நவில்தொறும் நயம்தரும் நூலாகவும், தொட்டனைத் தூறும் மணற்கேணி போலவும் இந்த நூலை வாசிப்போர் அறிவு நிலைகளுக்கேற்ப புதிய புதிய சிந்தனைகளைப் பெறமுடிகிறது. இன்றைய சூழலில் திருக்குறளுக்கான பொருளை சாட் ஜிபிடி, ஜெமினி போன்ற செய்யறிவுக் கருவிகளில் உரை, படம், ஒலி, காணொலி வடிவில் பெறும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் பதிலின் துல்லியத்தன்மை குறைவாகவே உள்ளது. திருக்குறளுக்கென பெரிய மொழி மாதிரியை (Large Language Model (LLM) உருவாக்கி, அதில் ஒவ்வொரு குறளிலும் இடம்பெற்ற உணர்வுகளை வகைப்படுத்தி அகராதியாக உருவாக்கி, இயந்திரக் கற்றலில் மொழி மாதிரிகளுக்கு நுண்பயிற்சி (Fine-tuning) வழங்கினால் துல்லியமான பதில்களைப் பெறமுடியும். பெரிய மொழி மாதிரி உருவாக்கத்தில், திருக்குறளில் உணர்வுப் பகுப்பாய்வின் (Sentiment analysis) தேவையையும் அதற்கான வழிமுறைகளையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

வியாழன், 18 டிசம்பர், 2025

இன்னா நாற்பது -கூடா நீதி

 இன்னா நாற்பது என்னும் நூல் கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும்.

இன்னா என்ற சொல்லுக்கு, துன்பம், தீங்கு, வெறுப்பு, இகழ்ச்சி, அல்லது விரும்பத்தகாதவை 

 

விழுமியம் – கூடா நீதி

 

கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;

நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா;

கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,

தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 3

 

கொடுங்கோல் மன்னன் ஆட்சியில் வாழ்தல் இன்னாதது.

நீண்ட தொலைவு நீரை மிதவை இல்லாமல் நீந்துதல் துன்பம்.

கடுகடு’வெனப் பேசுபவர் தொடர்பு துன்பம்.

தட்டுத் தடுமாறிக்கொண்டு வாழும் உயிருக்குத் துன்பம்.

 

செவ்வாய், 16 டிசம்பர், 2025

புதன், 10 டிசம்பர், 2025

நாலடியார் - நல்லினம் சேர்தல்

 

நாலடியார் (Nalatiyar) பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு.இந்நூலைத் தொகுத்தவர் பதுமனார் என்ற புலவர் ஆவார். ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழியில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும்.

 



விழுமியம் – நல்லோர் நட்பு

 



வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமைகளாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.

அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த

நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்

புற்பனிப் பற்றுவிட் டாங்கு.  171

 

வெயில் காயக் காயப் புல்லில் இருக்கும் பனி மறைந்துவிடும். அதுபோல, ஒருவன் தன்  அறியாப் பருவத்தில் அடக்கம் இல்லாதவரோடு சேர்ந்து பழகி, நன்னெறி அல்லாதனவற்றைச் செய்த பிழைகள் எல்லாம் நல்லவர்களோடு சேர்ந்து பழகும்போது போய்விடும்.

திங்கள், 8 டிசம்பர், 2025

பழமொழி நானூறு – வாழ்வியல் அறம்

 


பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இந்த நூலின் காலம் கி.பி 4 ஆம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.

தன்னை அறியும் தலைவன்

பொற்பவும் பொல்லாதனவும் புனைந்(து) இருந்தார்

சொற்பெய்(து) உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்

அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! அறியும்

பெரி(து)ஆள் பவனே பெரிது.   82

 பொன் போல் நன்மை பயப்பனவற்றையும், பொல்லாதனவற்றையும்..