பக்கங்கள்
திருக்குறள் தேடுபொறி
திருக்குறள் தேடுபொறி
செவ்வாய், 10 மார்ச், 2026
தமிழ் கற்றல் கற்பித்தலில் இயற்றறிவு நுட்பங்கள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 7 மார்ச், 2026
மதிப்புகள் - சான்றோர் சிந்தனை - வானொலி உரை
காலம் பொன்போன்றது என்று சொல்வதுண்டு.
காலம் மட்டும்தான் பொன்போன்றதா, என்றால், காலத்தைக் காட்டிலும்
மதிப்புமிக்கவை பல உண்டு.
காலத்தின் மதிப்பை உணர்ந்தவர்கள் தங்கத்தை விட மதிப்பு மிக்கது
காலம் என்பார்கள். ஆம் யாவருக்கும் 24 மணிநேரம் பொதுவானதாக இருந்தாலும் எல்லோரும் அதை
ஒரே மாதிரி பயன்படுத்துவதில்லை.
பெற்றோர்கள், தம் பிள்ளைகளுக்கு கல்வியின் மதிப்பை, வாழ்க்கையின்
மதிப்பை, உழைப்பின் மதிப்பை, நேரத்தின் மதிப்பை, பணத்தின் மதிப்பை இப்படி பல்வேறு
மதிப்புகளையும் உணர்த்துகிறார்கள். பெற்றோர்களே எல்லா மதிப்புகளையும் உணர்த்த முடியாது
என்பதால்தான் கல்வி நிலையங்களில் மேலும் இம்மதிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
பெற்றோரிடமும் கல்வி நிலையங்களிலும் இம்மதிப்பை உணராதவர்கள் வாழ்க்கையில் அனுபவம் வழியாக இம்மதிப்பை உணர்கிறார்கள். ஆனால் அனுபவம் பாடம் நடத்திய பிறகு தேர்வு வைக்காது. தேர்வு வைத்தபின்தான் பாடம் நடத்தும்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
புதன், 4 மார்ச், 2026
கற்றது ஒழுகு - சான்றோர் சிந்தனை - வானொலி உரை
கற்றலும் கடைப்பிடித்தலும், வாழ்வில் உயர்வதற்கான திறவுகோல்களாகும். கல்வியின் நோக்கம்,
தேர்வில் மதிப்பெண் பெறுவது, பட்டம் பெறுவதுமட்டும் அல்ல.
கற்ற கல்வியானது ஒரு மனிதனின் ஒழுக்கத்திலும்,
அவன் எடுக்கும் முடிவுகளிலும் பிரதிபலிக்க வேண்டும்.
திருவள்ளுவர்,
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (391) என்றார்.
எதையும் தெளிவாகக் கற்க வேண்டும். அதோடு நின்றுவிடக் கூடாது;
கற்ற அறநெறிகளின் வழியில், வாழ்க்கை அமைய வேண்டும். அறிவு என்பது வழிகாட்டும் ஒளி என்றால்,
அந்த ஒளியில் நடப்பதே உண்மையான அறம். எல்லா நேரமும் கற்ற கல்வியை வாழ்க்கையில் கடைபிடிக்க இயலுமா
என்று சிந்தித்த வள்ளுவர் நிற்க அதற்குத் தக என்றார். சூழல்களுக்குத் தக சரியாக நிற்பதே
அறிவின் வெளிப்பாடு.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. (297)
உண்மை பேசுவது அறம் செய்வதைவிட உயர்ந்தது என்று சொன்ன வள்ளுவர்,
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (292)
நன்மைக்காகப் பேசும் பொய்களும் வாய்மை எனக் கருதப்படும் என்றார். அதனால் நாம் வாழ்வில் எந்த சூழலில் உண்மை பேசவேண்டும், எந்த சூழலில் பொய்பேசவேண்டும் என்று சிந்தித்துப் பேசவேண்டும்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வெள்ளி, 23 ஜனவரி, 2026
திருக்குறள் – மருந்து அதிகாரம் நோட்புக் எல்.எம் வழி ஓர் ஆய்வு
(கோபி,பி.கே.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 22.01.2026 அன்று நடைபெற்ற இலக்கியங்களில் தொழில்நுட்பம் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கில் வழங்கிய ஆய்வுக்கட்டுரை)
Abstract
Thirukkural
is a book full of wisdom. People gain knowledge by reading Thirukkural.
Depending on the level of knowledge of the readers of this book, new ideas can
be gained. This article explores the techniques of converting the subtle
messages of Thiruvalluvar's medicinal power into media files suitable for
learning and teaching using the Google Notebook LM tool.
குறிச்சொற்கள்
திருக்குறள்,
Google Notebook LM tool. செய்யறிவுக் கருவி, செயற்கை நுண்ணறிவு, மருந்து,
முன்னுரை
நவில்தொறும்
நயம்தரும் நூல் திருக்குறள். எல்லாப் பொருளும் இதன்பால் உள அதனால் தொட்டனைத் தூறும் மணற்கேணிபோல படிக்கப்
படிக்க மனிதகுலம் திருக்குறளால் அறிவுபெறுகிறது. இந்நூலைப் படிப்பவர்களின்
அறிவுநிலைகளுக்கேற்ப புதிய புதிய சிந்தனைகளைப்
பெறமுடிகிறது. திருவள்ளுவர் கூறும் மருந்து அதிகாரத்தின் நுட்பமான
செய்திகளை கூகுள் நோட்புக் எல்.எம் என்ற செய்யறிவுக் கருவி வழி,
கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற ஊடகக்கோப்புகளாக மாற்றும் நுட்பங்களை ஆராய்வதாக
இக்கட்டுரை அமைகிறது.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 19 ஜனவரி, 2026
திருக்குறள் – உணர்வுப் பகுப்பாய்வு
(இந்த ஆய்வுக்கட்டுரை அரிமாநோக்கு இதழில்
Volume-20 / Issue-1 / Jan-Mar 2026
வெளியிடப்பட்டது என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்)
ஆய்வுச் சுருக்கம்
திருக்குறளுக்கு, பல உரைகள், மொழிபெயர்ப்புகள்,
திறனாய்வுகள் அச்சுவடிவில் உள்ளன. தேடுபொறி நுட்பங்கள், செய்யறிவு நுட்பங்களுக்கேற்ப
ஒருங்குறி வடிவிலும், சொல்லடைவு, தொடரடைவு, பெரிய மொழி மாதிரி என பல வடிவங்களில் இணையத்தில்
திருக்குறளை தரவாக்கம் செய்வது காலத்தின் தேவை என்பதை உணர்த்துவதுடன், திருக்குறளில்
இடம்பெறும் உணர்வுகளை தொல்காப்பியரின் மெய்ப்பாட்டிலை அடிப்படையாகக் கொண்டு பெரிய மொழிமாதிரியாக
உருவாக்கும் வழிமுறைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
திறவுச்சொற்கள்
திருக்குறள், உணர்வுப் பகுப்பாய்வு, மெய்ப்பாடு,
பெரிய மொழி மாதிரி, Sentiment analysis, LLM,
முன்னுரை
மனித வாழ்வின் வழிகாட்டியாகத் திகழும் நூல் திருக்குறள். இந்நூலுக்குப் பல உரைகள் வந்தாலும் நவில்தொறும் நயம்தரும் நூலாகவும், தொட்டனைத் தூறும் மணற்கேணி போலவும் இந்த நூலை வாசிப்போர் அறிவு நிலைகளுக்கேற்ப புதிய புதிய சிந்தனைகளைப் பெறமுடிகிறது. இன்றைய சூழலில் திருக்குறளுக்கான பொருளை சாட் ஜிபிடி, ஜெமினி போன்ற செய்யறிவுக் கருவிகளில் உரை, படம், ஒலி, காணொலி வடிவில் பெறும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் பதிலின் துல்லியத்தன்மை குறைவாகவே உள்ளது. திருக்குறளுக்கென பெரிய மொழி மாதிரியை (Large Language Model (LLM) உருவாக்கி, அதில் ஒவ்வொரு குறளிலும் இடம்பெற்ற உணர்வுகளை வகைப்படுத்தி அகராதியாக உருவாக்கி, இயந்திரக் கற்றலில் மொழி மாதிரிகளுக்கு நுண்பயிற்சி (Fine-tuning) வழங்கினால் துல்லியமான பதில்களைப் பெறமுடியும். பெரிய மொழி மாதிரி உருவாக்கத்தில், திருக்குறளில் உணர்வுப் பகுப்பாய்வின் (Sentiment analysis) தேவையையும் அதற்கான வழிமுறைகளையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 18 டிசம்பர், 2025
இன்னா நாற்பது -கூடா நீதி
இன்னா நாற்பது என்னும் நூல் கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும்.
இன்னா என்ற சொல்லுக்கு, துன்பம்,
தீங்கு, வெறுப்பு, இகழ்ச்சி,
அல்லது விரும்பத்தகாதவை
விழுமியம் – கூடா நீதி
கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 3
கொடுங்கோல் மன்னன் ஆட்சியில் வாழ்தல் இன்னாதது.
நீண்ட தொலைவு நீரை மிதவை இல்லாமல் நீந்துதல் துன்பம்.
’கடுகடு’வெனப் பேசுபவர் தொடர்பு துன்பம்.
தட்டுத் தடுமாறிக்கொண்டு வாழும் உயிருக்குத் துன்பம்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14




%20copy.jpg)