வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 28 ஜனவரி, 2025

தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான தேடுபொறி உகப்பாக்கம் - SEO




Search Engine Optimization for Tamil e-Contents

குறிச்சொற்கள்

          தமிழ் மின் உள்ளடக்கங்கள்தேடுபொறி உகப்பாக்கம்தேடுபொறி மேம்படுத்தல்வலைப்பதிவுமின்னூல்வலையொளி, Tamil E-Contents, SEO, Search Engine Optimization, Blog, E-Book, Youtube


 கட்டுரைச் சுருக்கம்

          அறிவைப் பெறும் வாயில்களுள் ஆசிரியர்கள் முதன்மையானவர்கள். ஆசிரியர்களுக்கு இணையாக இன்று இணையதளங்கள் வளர்ந்துள்ளன. இணையதளங்களில் கொட்டிக்கிடக்கும் செய்திகளுள் பயனர்களுக்குத் தேவையான செய்திகளைப் பெறத் தேடுபொறிகள் உதவுகின்றன. தேடுபொறிகளால் மனிதர்களின் அறிவுப் பரப்பு விரிவடைந்துள்ளது. மொழி எல்லைகளைக் கடந்து அவரவர் தாய்மொழியில் பல நுட்பங்களையும் அறிந்துகொள்ளத் தேடுபொறிகள் உதவுகின்றன. தமிழ் மின் உள்ளடக்கங்களைப் பலரும் உருவாக்கினாலும், தேடுபொறிகளுக்கு இணையத்தில் உள்ள பல்வேறு தமிழ் வளங்கள் தெரியவில்லை. தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான தேடுபொறி உகப்பாக்கம் குறித்து நுட்பமாக எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.

 

தேடுபொறி

          தேடுபொறி என்பது ஒரு கணினி நிரலாகும். இது இணையத்தில்  உள்ள தரவுகளிலிருந்து பயனர்கள் தேடும் தரவுகளைத்  திரட்டி வழங்குகிறது. இத்தரவுகளின் துல்லியத்தன்மை, நம்பகத்தன்மை, விரைந்து வழங்குதல் ஆகிய நிலைகளில் தேடுபொறிகளின் தரநிலை மாறுபடுகிறது. “ஆர்ச்சி (Archie) தேடுபொறி[1]  1990 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட முதல் தேடுபொறியாக அறியப்படுகிறது. அதைத் தொடர்ந்து யாகூ, கூகுள், பிங், பைடு என பல தேடுபொறிகள் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

திங்கள், 7 அக்டோபர், 2024

புகழ்I வானொலி உரை



ஒருவன் எவ்வளவு உயராமானவன் என்பதைவிட – அவன்

எவ்வளவு உயர்வானவன் என்பதையே காலம் திரும்பிப்பார்க்கிறது.

ஒருவன் எவ்வளவு அழகானவன் என்தைவிட – அவன்

எவ்வளவு அழகான பண்புகளைக்கொண்டவன் என்பதையே இவ்வுலகம் எண்ணிப்பார்க்கிறது.

 ஒருவன் வாழும்போது எவ்வளவோ இடங்களை ஆளுமை என்ற பெயரில் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அதையெல்லாம்விட.... அவன் இறந்தபின்...

 எவ்வளவு மனங்களில்..எவ்வளவு இடங்களை...தன் அன்பால்ஆளுமையால் ஆக்கிரமித்திருந்தான் என்பதே நினைவில் கொள்ளத்தக்க சிறப்பான பண்பாக அமைகிறது..

 

வியாழன், 3 அக்டோபர், 2024

சொல்லுக சொல்லை...

 


 வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

 சொல்லேர் உழவர் பகை (திருக்குறள் -872)

என்பார் வள்ளுவர். அதாவது வில்லை ஏராகக் கொண்ட உழவராகிய வீரருடன் பகைகொண்டபோதிலும், சொல்லை ஏராகக் கொண்ட உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது என்பது இக்குறளின் கருத்தாகும்.

மூன்று வயதில் பேசக் கற்றுக்கொள்கிறோம். ஆனால் வாழ்நாள் முழுக்க என்ன பேசவேண்டும், எங்கு பேசவேண்டும், எவ்வளவு பேசவேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்வதில்லை. அதனை அறிந்துகொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.

நெல்லைக் கொட்டினால் அள்ளிவிடலாம் சொல்லைக் கொட்டினால் அள்ளமுடியாது என்பது பழமொழி

திங்கள், 30 செப்டம்பர், 2024

அறிவெனப்படுவது…


 அறிவெனப்படுவது பேதையார் சொல் நோன்றல் என உரைக்கிறது கலித்தொகை அறிவில்லாதவர்களின் சொல்லைப் பொறுத்துக்கொள்ளுவதே அறிவுடைமை என்பது இதன் பொருள்.

கல்வி அறிவு, கேள்வி அறிவு, அனுபவ அறிவு,இயற்கை அறிவு, நுண்ணறிவு, என அறிவு பல வகைப்பட்டதாக ஒவ்வொரு துறைசார்ந்தும் பாகுபடுத்தப்படுகிறது.

இப்பிறவியில் கற்பது ஏழு பிறவிக்கும் உதவும் என்பது வள்ளுவர் வாக்கு.     

திருக்குறளில் அறிவுடைமை என்ற அதிகாரத்தில் மட்டுமின்றிப் பல குறட்பாக்களில் அறிவைப் பற்றி திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார்.

 

அறிவு என்றால் என்ன? அறிவை எதற்கு, எங்கு, எப்படிப் பயன்படுத்தவேண்டும்? என்று வள்ளுவரைக் கேட்டால்..