இன்றைய வேகமான உலகில் நாம் அனைவரும்
ஏதோ ஒன்றை நோக்கி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். பணம்,
புகழ், பதவி எனப் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.
ஆனால், இவை அனைத்தையும் அடைந்த
பிறகும் நம் மனதில் ஒரு வெற்றிடம்
இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வெற்றிடத்தில் பொறாமை, பேராசை அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு நிறைந்துவிட்டால் மனநிறைவு பெற
இடம் கிடைக்காது.
"போதும் என்ற மனமே பொன் செய்யும்
மருந்து" என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்பவர்கள் மனநிறைவடைவார்கள். ஆனால்
போதும் என்ற மனம் அவ்வளவு எளிதில் யாருக்கும் வந்துவிடாது. நாம் வாழத் தேவை
குறைவுதான் என்றாலும், அடுத்தவரைப் போல வாழ்வதற்காகவும், அடுத்தவரைவிட சிறப்பாக
வாழ்வதற்கும் தான் அதிகமாக செலவிடுகிறோம்.
