பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
செவ்வாய், 21 அக்டோபர், 2014
புலிதுஞ்சு வியன்புலம்!
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
புதன், 2 ஏப்ரல், 2014
நிழலில் நீளிடைத் தனிமரம்
களிற்றுமுக வரியின் தெறுழ்வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து
மென்தினை யாணர்த்து நந்துங் கொல்லோ;
நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!
பெயல் = மழை
தலைஇய = பெய்த
காண்பு = காட்சி
காலை = காலம், பொழுது
வரி = புள்ளி
தெறுழ் = ஒரு கொடி
வீ = பூ
ஈயல் = ஈசல்
அளை = மோர்
யாணர் = புதுவருவாய்
நந்துதல் = கெடுதல்
பணை = முரசு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 27 டிசம்பர், 2012
மாலைப் பொழுதின் மயக்கத்திலே..
எத்தனை எத்தனை வண்ணங்கள்!
எத்தனை எத்தனை வடிவங்கள்!
கொஞ்சம் தலைநிமிர்ந்து பார்க்கக்கூட இந்த மனிதர்களுக்கு நேரமில்லையே என்று மனம் நொந்திருக்கிறேன்.
இலக்கியங்களில் இந்த மாலைப் பொழுதைப் பலகவிஞர்கள் பாடியிருக்கிறார்கள்.
மாலைப் பொழுதின் மயக்கத்திலேநான் கனவு கண்டேன் தோழி.....
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது. |
1221
|
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை. |
1222
|
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித் துன்பம் வளர வரும். |
1223
|
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும். |
1224
|
காலைக்குச் செய்தநன்று என்கொல்
எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை. |
1225
|
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன். |
1226
|
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய். |
1227
|
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை. |
1228
|
பதிமருண்டு பைதல் உழக்கும்
மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. |
1229
|
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர். |
1230
|
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே.
- இரவில் மலர்ந்து பகலில் கூம்பும் மலர் ஆம்பல் ஆகும். இந்த ஆம்பல், மலர்வதற்குரிய மாலைப்பொழுது இன்னும் வரவில்லை. அதற்குள் இந்த மாலைக்காலம் வந்துவிட்டது. என்ற தலைவியின் புலம்பலால் “மலர் மலர்வதையும் கூம்புவதையும் வைத்து சங்ககால மக்கள் காலத்தை அறிந்தார்கள்” என்ற வழக்கத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.
- சிறிது காலம் நிற்கும் மாலைப் பொழுது நீண்டநேரம் நிற்கும் இரவைத் துணைக்கு அழைத்து வந்தது தலைவிக்குப் பெரிதும் கவலையளிப்பதாக உள்ளது.
- பகலும் இரவும் இயல்பாக வந்துசெல்வது. ஆனால் இந்தத் தலைவியைப் போலத் தன் துணையைப் பிரிந்து வாடுவோருக்கோ, காலமும் நேரமும் வரும் போகாது.
- இன்று தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த எதிர்பார்ப்பு, பரிதவிப்பு நம்மிடம் இருக்கிறதா? யாரையும் எதிர்பார்த்து வழிமீதுவிழி வைத்து நாம் காத்திருக்கிறோமா? அலைபேசியில் அழைத்து உடனுக்குடன் விவரத்தைத் தெரிந்துகொண்டு அடுத்தவேலையைப் பார்க்கப் போய்விடுகிறோமே..
தொடர்புடைய இடுகைகள்..
1. அந்தியிளங்கீரனார்
2. தூங்காத விழிகள் இரண்டு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 17 நவம்பர், 2012
தற்கொலைகளைத் தடுக்கும் ஆற்றல்.
பசி, நோய், பணம், காதல், ஏமாற்றம், அவமானம், மனநலபாதிப்பு என தற்கொலைக்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் எல்லோருக்குமான உயிர்வலி ஒன்றாகத்தான் உள்ளது.
மனத்தடுமாற்றம் என்பது யாவருக்கும் பொதுவானது.
அப்போது மனதை தடுத்து மாற்றம் செய்யும் ஆற்றல் யாருக்கு இருக்கிறதோ அவர் தற்கொலையைத் தடுக்கும் ஆற்றலுடையவராவார். அந்த ஆற்றல் யாருக்கெல்லாம் இருக்கும்..?
நம் எல்லோருக்கும் அந்த ஆற்றல் உண்டு. ஆனால் நாம் தான் அதனைப் பயன்படுத்துவதில்லை.
நம் மனம் தடுமாறும்போது..
நாம் என்ன எதிர்பார்க்கிறோம்..?
நம் குறையைக் கேட்க யாராவது இருக்கமாட்டார்களா?
என்பது தானே..
அதைதானே தற்கொலை செய்துகொள்பவர்களும் எதிர்பார்க்கிறார்கள்!
மனத் தடுமாற்றத்தின் போது அருகே ஒருவர் இருந்து கொஞ்சம் காதுகொடுத்து அவர்களின் மனதைத் திடப்படுத்தினால்போதும்..
ஆனால் அதற்கெல்லாம் நமக்கு நேரம் இருக்கிறதா?
அறிவுரை சொல்ல ஆயிரம் பேர் இங்குண்டு
காது கொடுத்துக் கேட்க இங்கு எத்தனைபேர் உண்டு..?
சங்கப்பாடல் ஒன்று..
"இடிக்கும் கேளிர் நும்குறை யாக
நிறுத்தல் ஆற்றினோ நன்றுமன் தில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கின்
கையில் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்கு அரிதே".
குறுந்தொகை 58 வெள்ளிவீதியார்.
தலைவன் தன் தோழனிடம் சொல்கிறான்..
என்னை இடித்துரைக்கும் நண்பா!
இதனை நின் செயலாகக் கொண்டு
நிறைவேற்றுதல் வேண்டும். அதுவே சிறந்தது.
கதிரவன் காயும் வெப்பமான பாறையில் கைஇல்லாத ஊமன் கண்ணினால் காக்கும் வெண்ணெய்த்திரள் வெப்பத்தால் உருகிப் பரவுவதுபோல, என்மனத்துப் பரவியுள்ள இந்நோய் பொறுத்தற்கு அரியது.
வெப்பத்தால் பாறையில் வைக்கப்பட்ட வெண்ணெய் உருகுவதை ஊமையானவன் பார்க்கத்தான் முடியும், அதனை எடுத்து வேறொரு இடத்தில் வைக்கநினைத்தாலும் அவனுக்குக் கையில்லை. வாய்பேசமுடியாததால், அவன் பிறரைத் துணைக்கு அழைத்தலும் இயலாது. தன் கண் எதிரிலிலேயே அந்த வெண்ணெய் பாழாவதைப் பார்த்து வருந்துதல் ஒன்றே அவனால் முடியும்.
அதுபோலத் தான் தலைவிமீதுகொண்ட அளவுகடந்த ஆசையை அடக்கிக்கொள்ளும் ஆற்றலும், பிறரிடம் வெளியிடும் துணிவும் தன்னிடம் இல்லை எனத் தலைவன் தோழனிடம் கூறினான்.
தோழன், தலைவனின் மெலிவைப் கண்களால் பார்க்கிறான், வேறு எந்த உதவியும் செய்யவில்லை. கை, கால், கண்கள் பெற்றிருந்தும் தனக்கு இவன் உதவவில்லையே என்ற ஏமாற்றம் தலைவனுக்கு இருக்கிறது என்பது இப்பாடலின் பொருளாகும்.
சங்க இலக்கியத்தில் புகழ்பெற்ற இப்பாடலை அப்படியே இன்றைய வாழ்வுக்குப் பொருத்திப் பார்க்கலாம் வாங்க..
சங்ககாலத் தலைவனுக்கு இந்தப்பாடலில் உள்ளதுபோல இன்றைய சராசரி மனிதர்களுக்கும் தற்கொலை செய்துகொள்ள ஏதோ ஒரு காரணம் உள்ளது. அது சிறிய காரணமாகவே இருந்தாலும் அவர்களுக்கு அப்போது அதுதான் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது.
அதனால் நாம் ஒவ்வொருவரும் தற்கொலைகளைத் தடுக்கும் ஆற்றல் உடையவர்கள் என்பதை உணர்வோம்..
மனிதர்களுக்கு மனத்தடுமாற்றத்தின்போது தேவையானது
அறிவுரைகளல்ல - அன்பான செவிமடுத்தல்
என்ற எனது புரிதலை இவ்விடுகைவழியே குறிப்பிட்டுள்ளேன்.
தற்கொலைகளைத் தடுக்கும் வழிமுறைகளை தாங்களும்
கூறினால்
தமிழுலகம் பயன்பெறும்..
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 8 செப்டம்பர், 2012
பொகுட்டுவிழி
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 21 ஜூன், 2012
நாளைய குடிநீர்
- பிறந்தவீட்டுப் பெருமையைப் போலவே புகுந்தவீட்டுப் பெருமையையும் காக்கவேண்டியது பெண்களின் கடமை என்ற பண்பாட்டை நினைவுபடுத்துவதாக இப்பாடல் அமைகிறது. என்னதான் தலைவனின் நாட்டில் கிடைக்கும் நீர் சுத்தமற்றதாக, சுவையற்றதாக இருந்தாலும் அதைவிட்டுக்கொடுக்காமல் பேசும் தலைவியின் பண்பு அவள் தலைவன் மீது கொண்ட காதலை அறிவுறுத்துவதாக உள்ளது.
- என்னதான் தலைவி கலங்கிய நீரை தேனோடும் பாலோடும் கலந்த நீர் என்று சொன்னாலும், மான்உண்டு எஞ்சிக் கலங்கிய நீர் என்ற சிந்தனை நாளை நாம் குடிக்கும் நீருக்கும் இந்த நிலை வருமோ? என்ற கருத்தை முன்வைப்பதாக அமைகிறது.
என் சிறுவயதில் எங்க ஊரில், பல இடங்களிலும் “குடிநீர் குளங்கள்” என்று பல இருந்தன. இன்று அந்த இடங்களெல்லாம் கட்டிடங்கள் வந்துவிட்டன.சில குளங்களில், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று குடிநீரை விலைகொடுத்துத்தான் வாங்கிக்கொண்டிருக்கிறோம்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
ஞாயிறு, 29 ஏப்ரல், 2012
கயம் மூழ்கும் மகளிர் கண்கள் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 09
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
ஞாயிறு, 25 மார்ச், 2012
மகவுடை மந்தி!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம்!
ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் எண்ணங்களுக்கே முன்னுரிமை அளிக்கிறோம்..
இன்னொருவரின் ஆசைகளையோ, எண்ணங்களையோ காதுகொடுத்து என்ன? என்று கேட்பதற்குக் கூட நமக்கெல்லாம் நேரம் இருப்பதில்லை.
அப்படிக் கேட்டால் உலகில் தற்கொலைகள் கூட பாதியாகக் குறைந்துவிடும் என்பது என் எண்ணம்!
இதோ ஒரு சங்ககாலத் தலைவன் தன் நெஞ்சோடு பேசிக்கொள்கிறான்..
உங்களுக்குக் கேட்கிறதா?
தோழி - தலைவ! இதுவரை நீ ஊருக்குத் தெரியாமல் இரவுநேரத்தில் வந்து தலைவியைக் கண்டு காதல் மொழி பேசி வந்தாய்..
தலைவன் - ஆமாம். உன் உதவியை மறக்கமுடியுமா?
தோழி - போதும்! போதும்! எல்லாவற்றையும் இதோடு நிறுத்திக்கொள்!
தலைவன் - ஏன்? என்ன ஆனது?
தோழி - நீ இரவு நேரத்தில் வரும் வழியின் துன்பங்கள் எண்ணியும், உங்கள் சந்திப்பை ஊரார் அறிந்து பேசும் அலர் மொழிக்கு அஞ்சியும் நாளும் நாளும் நாங்கள் பட்ட துன்பங்கள் போதும். தலைவியை நீ திருமணம் செய்துகொள். அது தான் உங்கள் இருவருக்கும் நல்லது.
தலைவன் - (தன் நெஞ்சைப் பார்த்து இவ்வாறு பேசுகிறான் தலைவன்)
ஏ நெஞ்சே! அதோ பார் பச்சை மண்பானை!
இதோ பார் தம் குட்டியைத் தூக்கிச் செல்லும் குரங்கு!
அந்த பச்சை மண்பானையை மழையிலிருந்து காக்க முடியுமா? அந்த மண்பானை அழிவது உறுதி. அதுபோல தலைவியின் நினைவால் தன் மனம் அழிதலும் உறுதி!
சே! அந்த குரங்குக் குட்டியைக் கூட கிளைகளில் ஏறும் போது கீழே விழாமல் பாதுகாத்து அன்போடு அணைத்துச் செல்ல அதன் தாய்க்குரங்கு உண்டு. ஆனால் எனக்கு..?
இன்னும் கொஞ்ச காலம் காதலித்து மகிழலாம் என்று எனக்கு ஆசை இருந்தாலும் என்னைப் புரிந்துகொள்ளவோ, என் தேவையை அன்போடு கேட்டு நிறைவேற்றவோ யாருமே இல்லையே..
| குறுந்தொகை -29 |
என்று தலைவன் தன் மனதோடு இவ்வாறு பேசிக்கொள்கிறான்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14










