வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 மே, 2020

விக்கிப்பீடியா எனும் களஞ்சியம் செய்வோம் - நீச்சல்காரன்




கோயம்முத்தூர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 15.05.2020 அன்று நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் நீச்சல்காரன் (எ) இராஜாராமன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். இவ்வுரையில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டங்கள், விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்கான வழிமுறைகள், விக்கிப்பீடியாவின் உள்ளீடு செய்யும் நுட்பங்களையும் செயல்முறையுடன் விளக்கினார். கேள்விகளுக்கான பதில்களும் வழங்கினார். இந்த கூட்டத்தை நடத்திய இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகத்துக்கும், முதல்வர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் அவர்களுக்கும் நன்றிகள். நிகழ்வை ஒருங்கணைத்த தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவா் ந.இராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றிகள்.


வியாழன், 28 செப்டம்பர், 2017

வியாழன், 6 ஏப்ரல், 2017

வெள்ளி, 31 மார்ச், 2017

வாய்ப்புக்காகக் காத்திருக்காதே உருவாக்கு!


வாய்ப்புக்காகக் காத்திருக்காதே உருவாக்கு!

என்று என் மாணவிகளுக்கு அடிக்கடி சொல்வதுண்டு..
என் மாணவிகளுள் தமிழ்மணி முருகன் அவர்கள் எங்கள் கல்லூரியில் வேதியியல்துறை பயின்று வருகிறார். இவருக்கு வானொலி அறிவிப்பாளராகவேண்டும் என்பது பெரிய கனவு.
அதற்கான வாய்ப்புக்காக பலமுறை என்னைச் சந்தித்தார்..
அவருக்கான வாய்ப்பை நான் அவருக்காக உருவாக்கியுள்ளேன்.
இனி நாள்தோறும் ஒரு சிந்தனையை வேர்களைத்தேடி என்னும் யுடியுப் வலைக்காட்சி வழியாக இணையத்தில் பதிவேற்றவுள்ளேன்.
உங்கள் ஊக்குவித்தலுடன் இன்று அவரது குரல் யுடியுப், முகநூல், கட்செவி உள்ளிட்ட பல்வேறு சமூகத் தளங்களிலும் ஒலிக்கிறது.
வாழ்த்துக்கள் தமிழ்மணி முருகன்!
எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும் உங்கள் குரல்!

புதன், 13 ஏப்ரல், 2016

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

மகிழ்ச்சி இங்கே இருக்கிறது

ஒரு அரசனுக்கு ஒரு ஏழையைப் பார்த்துப் வியப்பு! நாம் எல்லா செல்வங்களோடும் இருக்கிறோம். ஆனால் இவன் எந்த செல்வங்களும் இன்றி நம்மைவிட மிகவும் மகிழ்வாக இருக்கிறானே என்று. ஒருநாள் தன் அமைச்சரை அழைத்து இவன் மகிழ்வு எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்கவேண்டும் என்றார்.
அமைச்சர், 99 பொற்காசுகளை ஒரு பையில் கட்டி அவன் வீட்டு வாசலில் போட்டுவிட்டார். மறுநாள் காலையில் எழுந்து வந்த ஏழை அந்தப் பையைப் பார்த்து வியந்துபோனான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அதை எடுத்து வீட்டுக்குள் சென்று எண்ணிப்பார்த்தான். ஒரு காசு குறைந்தது. அன்றிலிருந்து அவனது உறக்கம்போனது, மகிழ்வு போனது! எப்போதும் தன் மடியிலேயே அந்தப் பையை வைத்துக்கொண்டு வீட்டையே சுற்றிச் சுற்றிவந்தான்.

இந்த ஏழையின் தூக்கத்தையும், மகிழ்வையும் பறித்த கவலைகள் இரண்டு,
  • இந்தப் பணத்துக்குச் சொந்தம் கொண்டாடி யாராவது வந்துவிடுவார்களோ?
  • தொலைந்த அந்த 100வது காசு எங்கே? 
அமைச்சர் அரசனிடம் சொன்னார். மன்னா,

“இந்த ஏழையிடம் இல்லாமையில் இருந்த மகிழ்ச்சி
இருப்பில் இல்லாமல் போனது!
இவன் தன்னிடம் இருப்பதைப் பற்றி மகிழ்வுகொள்ளாமல் இல்லாததைத் தேடித் தன் மகிழ்வைத் தொலைத்துவிட்டான்” 
என்று..
இந்தக் கதையில் வரும் ஏழையைப் போலத்தான் நாமும். நம்மிடம் இருப்பதை எண்ணி மகிழாமல், நம்மிடம் இல்லாததை எண்ணியே ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.

சரி ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி எங்கு இருக்கிறது என்று பார்ப்போம்.

  • பணம் மட்டுமே மகிழ்வு தரும்
  • சுற்றுலா செல்வதே மகிழ்ச்சி.
  • கொடுப்பதால் கிடைப்பதே மகிழ்ச்சி
  • பெறுவதால் வருவதே மகிழ்ச்சி.
  • இயற்கையை பார்ப்பதே மகிழ்ச்சி
  • சமூகதளங்களில் உலவுவதே மகிழ்ச்சி
  • மறுமொழியிடுவதே மகிழ்ச்சி
  • மறுமொழி பெறுவதே மகிழ்ச்சி
  • தொலைக்காட்சி பார்ப்பதே மகிழ்ச்சி
  • பேசிக்கொண்டிருப்பதே மகிழ்ச்சி
  • தூங்குவதே மகிழ்ச்சி
  • விளையாடுவதே மகிழ்ச்சி
  • அடுத்தவரைப் பற்றிப் பேசுவதே மகிழ்ச்சி
  • போதையில் உள்ளதே மகிழ்ச்சி
  • குழந்தைகளிடம் விளையாடுவதே மகிழ்ச்சி
  • நூல்களை வாசிப்பதே மகிழ்ச்சி

என ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் இடம், வெவ்வேறாக உள்ளது. இப்படி தன்னலம் சார்ந்த மகிழ்ச்சிகளுக்கு நடுவே, பிறர் நலம் நாடும் மகிழ்ச்சியே போற்றத்தக்கது. 
இங்கே பதிவு செய்யப்பட்ட காணொளி கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை என்பதை அழகாக எடுத்துரைக்கிறது. ஆனால் யாரிடம் கொடுக்கிறோம் என்பதற்கேற்ப மகிழ்ச்சி மாறும் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.  மதிப்பு தெரியாதவர்களிடம் நாம் எதையும் கொடுத்தால் குரங்கு கையில் பூமாலையைக் கொடுத்தது போல ஆகிவிடும். 

நம் மகிழ்ச்சி எங்கு உள்ளது என்று கண்டறிவதிலும் அதைத் தக்கவைத்துக்கொள்வதிலுமே நம் வாழ்க்கை தொலைந்துவிடுகிறது.

மகிழ்ச்சி இருக்கும் இடத்தை வெளியே தேடிச்சென்ற நான். என்னுள் மகிழ்ச்சி எங்கு இருக்கிறது என்று தேடிப் பார்த்தேன்,

தமிழ் வாசிக்கும்போதும், அதைப் பேசும் போதும் என் மனதில் தோன்றும் மகிழ்ச்சி பிற மகிழ்ச்சிகளைவிடக் கூடுதலானது என்பதை உணர்ந்துகொண்டேன்.

அன்பு நண்பர்களே உங்கள் மகிழ்ச்சி எங்கு உள்ளது என்று நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்களா?

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

உணவுக்கு நீங்கள் தரும் மரியாதை!

 


என் நண்பர் ஒருவருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென அவர் பாதி சாப்பாட்டை வைத்துவிட்டு போதும் என்றார்.

ஏன் உடல்நிலை எதுவும் சரியில்லையா? ஏன் பாதி உணவை அப்படியே வைத்துவிட்டீர்கள் என்றேன். உடல் நிலை நன்றாகத்தான் இருக்கிறது, மனநிலை தான் சரியில்லை என்றார்.

சரி அதனால் உணவை வீணாக்கலாமா?

உலகில் ஒவ்வொரு 3.6 வினாடிகளுக்கும் ஒருவர் பசியால் இறக்கிறார்.என்றொரு புள்ளிவிவரம் சொல்கிறது நண்பரே என்றேன்.

அதற்கு அவர் என் மனக்கவலையைவிட இந்தப் புள்ளிவிவரம் பெரிய கவலையைத் தருகிறது நண்பரே என்றார் அவர்.

ஆமாம்..

“நீ உன்னால் முடியாது என்று எதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறாயோ..
அதை உலகின் ஏதோ ஓரிடத்தில் ஒருவர் முடித்துக்கொண்டிருக்கிறார்! என்றொரு பொன்மொழி உண்டு நண்பரே..

அவரும் சிரித்துக்கொண்டே ஆமாம் ஆமாம் பலர் சாப்பிடுவதற்காகவே பிறந்திருக்கிறோம் என்றுதான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி்க்கொண்டே கொஞ்சம் முயற்சித்து சாப்பிட்டார். அப்போது நான் சொன்னேன்..

நண்பரே இதுதான் நீங்கள் உணவுக்குத் தரும் மரியாதை என்றேன்.



இனிமேல் உணவுப் பொருட்களை வீணாக்கும் முன் சிந்திப்போம்.

இதுகூட செய்வதற்கு அரிய செயல்தான்..

முயற்சித்தால் நாமும் பெரியோராகலாம்.

தொடர்புடைய இடுகைகள்


புதன், 28 மார்ச், 2012

நமக்கும் இந்த நிலை வரவேண்டுமா?

இன்னும் கொஞ்சம் நாளில் நம் நாட்டிலும்...
இப்படியொரு காட்சியைப் பார்க்கலாம்....

தொடர்புடைய இடுகை

வியாழன், 8 மார்ச், 2012

பெண்கள் இல்லாத உலகத்திலே..


பெண்கள் இல்லாத உலகத்திலே..
அம்மா என்ற கடவுளின்
முகவரி தெரியாமல் போயிருக்கும்!

பெண்கள் இல்லாத உலகத்திலே..
காதல் என்ற வேதத்தின்
உட்பொருள் தெரியாமல் போயிருக்கும்!

பெண்கள் இல்லாத உலகத்திலே..
சிரிப்புக்கும் - அழுகைக்கும்
தேவையில்லாமல் போயிருக்கும்!




தொடர்புடைய இடுகைகள்


ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

இதெல்லாம் சட்டசபையில செய்யவேண்டியது..


இந்த காலத்துல பார்த்தீங்ன்னா..
எங்க பார்த்தலும் கொலைவெறிபிடிச்சவங்களா இருக்காங்க..

கொலை,கொள்ளை, வழிப்பறி, மோசடி இதெல்லாம் காலந்தோறும் இருப்பதுதான் என்றாலும்..
இப்போது இளம் தலைமுறையினரிடையே பரவி வரும் வன்முறைச் செயல்களுக்கு ஊடகங்களும் பெரும்பங்கு வகிப்பனவாக உள்ளன.

சென்னையில் ஆசிரியரைக் கொன்ற மாணவரின் வெறிச்செயலுக்குக் காரணம் யார்?
பெற்றோரா?
ஆசிரியர்களா?
கல்விமுறையா?
ஊடகங்களா?
சட்டங்களா?
என ஆயிரம் பேரைக் காரணம் சொல்லலாம் என்றாலும். போன உயிர் மீண்டு வருவதில்லை.
இப்போதெல்லாம் இணையம் உலகத்தையே சிறுகிராமமாக மாற்றிவிட்டது. இன்றைய தலைமுறையினர் இங்கு இருந்துகொண்டே உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் பார்க்கிறார்கள்.
அதனால் நலமான, வளமான, வலிமையான சமூகம் உருவாக நாம் யாரையும் குறைகூறாது நம்மால் முடிந்தவரை நேர்மறையான எண்ணங்களை இளம் தலைமுறையினரிடம் விதைப்பது நம் அடிப்படைக் கடமையாகும்.

இந்த பள்ளிமாணவனின் செயலுக்குப்பின் தமிழகத்தில் நிறைய பள்ளிகளில் கட்டண சலுகை அறிவித்திருக்கிறார்கள். மாணவர்களை திட்டக்கூடாது என ஆசிரியர்களுக்கு வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இது மாணவர்களுக்கு மேலும் கொம்பு சீவிவிட்டதுபோல உள்ளது.

என் நண்பர் ஒருவர் புலம்பினார்.

என்னங்கய்யா இப்பல்லாம் வகுப்புக்குப் போயிட்டுவருவது ஏதோ போர்க்களத்துக்குப் போயிட்டுவருவதுபோல இருக்குது என்று..

ஏன் என்று கேட்டேன்..

அவர் சொன்னார்...
ஐயா ஒரு பையன் என்னைப் பார்த்து கேட்கிறான்..

என்னங்க ஐயா...
உங்க முகத்துல ஒரு மரண பீதி தெரியுதே.. !
பயப்படாதீங்க..
நாங்க உங்கள எதுவும் செய்யமாட்டோம் என்றானாம்.
இவர் அவனைத் தனியாக அழைத்துச் சென்று அவனுக்கு அறிவுரை சொல்லி அனுப்பினாராம்..
திரும்பி வகுப்புக்கு வந்த மாணவனைப் பார்த்து அவன் நண்பர்கள் கேலி செய்தார்களாம் இப்படி
என்னடா..
இப்ப உன்னோட முகத்துல மரண பீதி தெரியுது?
என்று

மாணவர்களைத் திருத்த அடிப்பது சரியா? தவறா?
என்பதெல்லாம் இன்றைய காலத்தில் விவாதத்துக்குக் கூட எடுத்துக்கொள்ள முடியாது..
காலம் ரொம்ப மாறிப்போச்சு பாருங்க..

அன்று பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும்போதே பெற்றோர்கள் சொல்லிச் சேர்ப்பார்கள்.
கண்ணு, காது, மூக்க மட்டும் விட்டு எங்க வேண்டுமானலும் அடிங்க
எம்புள்ளய படிக்கவெச்சு அவனோட கண்ணைத் திறந்துவிடுங்கய்யா போதும் என்பார்கள்.
ஏன் என்று கேட்டால் அடியா மாடு படியாது என்பார்கள்.

இன்று நிலை வேறு!
அடிக்கக் கூட வேண்டாம் திட்டினாலே போதும்
இந்த மாணவர்கள் தவறான முடிவெடுத்துவிடுகிறார்கள்.

பேருந்தில் வரும்போது இரு மாணவர்கள் என்னருகே பேசிக்கொண்டு வருகிறார்கள்.

டேய் மச்சான் இவங்க டார்ச்சர் தாங்கமுடியலடா என்று
அதற்கு இவன் சொல்கிறான்.
டேய் மாப்பிள நான் சொல்றத நீ கேட்க மாட்டேங்கிற
பள்ளிக்கூடத்துல மாடில இருந்து குதிச்சிடுறா
அப்புறம் பாரு உனக்கு இராஜ மரியாதைதான் என்று

கேட்ட எனக்கு ஒரு மணித்துளி இதயத்துடிப்பே நின்றுவிட்டது.

யாரைக் குறை சொல்வது..
என்னைக் கேட்டால் மாணவர்களை அடிக்காமல் கூட அன்பால் திருத்திவிடமுடியும். அதற்கு 
ஆசிரியர் மட்டும் தன்னை மாற்றிக்கொண்டால் போதாது.
இதில் குறிப்பிடத்தக்க பங்கு
பெற்றோருக்கும்
ஊடகங்களுக்கும்
நாட்டை ஆள்வோருக்கும்
உண்டு என்பதை நாம் மறக்கக்கூடாது.


தொடர்புடைய இடுகை


கல்வி உளவியல்

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

ஐந்துநாக்கு மனிதர்



ஒரு நாக்குகொண்ட மனிதர்களையே இப்போது காண்பது அரிதாகவுள்ளது. ஏனென்றால் காணும் மனிதர்களுக்கெல்லாம் இரண்டு, மூன்று, நான்கு என பல்வேறு நாக்குகள் உள்ளன.

நாக்கு என்பது சுவையை உணர்வதற்கு மட்டுமல்ல!!
நம் தாய்மொழியைச் சுமப்பதற்கும் தான்!!

விலங்குகள் கூட தம் நாவில் அவைதம் தாய்மொழியைத்தான் சுமக்கின்றன.

ஆனால் நாம்........?

இதோ ஒவ்வொரும் காண வேண்டிய காட்சி...!