வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருமண அழைப்பிதழ் மாதிரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமண அழைப்பிதழ் மாதிரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 ஆகஸ்ட், 2017

திருமண அழைப்பிதழ் மாதிரி



நன்றி முனைவா் சங்கரராம பாரதி.

தங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய

அன்புடன் வாழ்த்துகிறேன்.

திங்கள், 30 மே, 2016

திருமண அழைப்பிதழ் மாதிரி



மணமக்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்பு நண்பர்களே... தமிழில் இதுபோல வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்கள் உங்களிடம் இருந்தால் gunathamizh@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



புதன், 26 மார்ச், 2014

தமிழில் திருமண அழைப்பிதழ் மாதிரி

தமிழில் வடிவமைக்கப்பட்ட அழகான திருமண அழைப்பதழை  இணையத்தில் உலவும் போது பார்த்தேன். அதனை இங்கு வெளியிட்டிருக்கிறேன். மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு இணையத்தில் வெளியிட்டமைக்கு நன்றியையும் உரித்தாக்கிக்கொள்கிறேன்.

வியாழன், 11 ஏப்ரல், 2013

திருமண அழைப்பிதழ் மாதிரி




பலருக்கும் பயன்படவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் இந்தத் திருமண அழைப்பிதழ் மாதிரியை அனுப்பிய கெளதமி விமல்குமார் அவா்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

வியாழன், 17 ஜனவரி, 2013

திருமண அழைப்பிதழ் மாதிரி


அழைப்பிதழை மின்னஞ்சல் வழியாக அனுப்பிய நண்பர் சங்கர்அவர்களுக்கு நன்றிகளையும் & அழைப்பிதழை அழகாக வடிவமைத்த மணமகன் ஆனந்த் அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


வியாழன், 3 ஜனவரி, 2013

திருமண அழைப்பிதழ் மாதிரி


தமிழில் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் மாதிரிகளை இந்த வலையில் பதிவு செய்து வருகிறேன்..








பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன..

வியாழன், 15 நவம்பர், 2012

திருமண அழைப்பிதழ் மாதிரி


தமிழ்  உறவுகளே..

இவ்வலையில் தமிழில் வடிவாக்கம் செய்யப்பட்ட திருமண அழைப்பிதழ்களைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்துவருகிறேன்.

இணையத்தில் தேடும்போது கண்ணில்பட்ட இம்மாதிரியை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இம்மாதிரிகளை உலகு பரவிவாழும் பலரும் பயன்படுத்திவருகின்றனர்.

பதிவேற்றம் செய்த நண்பருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழில் வடிவாக்கம் செய்யப்பட்ட இதுபோன்ற அழைப்பிதழ்கள் உங்களிடம் இருக்கிறதா? gunathamizh@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்க தமிழ் நம் அடையாளம் என்பதை உலகுக்கு உணர்த்துவோம்.

ஞாயிறு, 29 ஜூலை, 2012

திருமண அழைப்பிதழ் மாதிரி


தங்கத் தடாகத்திற் கெழிலூட்டும்
தாமரைப்பூ போல - என்
அங்கத்தினுள் பூத்திருக்கும்
ஆருயிர் நட்பே! வணக்கம்.

வியத்தகு விக்ருதி வருடம்
உயர்மிகு ஆவணித் திங்கள் 13ஆம் நாள்(29.08.2010)
நலம் மல்கு ஞாயிற்றுக் கிழமை
கதிரெழு நற்காலை 6.00 -7.30 மணிக்குள்
திருமுதுகுன்றத்திலுள்ள (விருத்தாச்சலம்,ஆலடி ரோடு)
ராஜலெட்சுமி திருமண மண்டபத்தில்....

பண்ருட்டி சரஸ்வதி நகர்வாழ்
.கண்ணன்-கலைச்செல்வி இவர்களின்
பைங்கொடிப் பாவை, முகநகைப் பூவை
.செங்கமலத்தாயார் எம்.எஸ்சி.,பிஎட்., என்ற
மங்கலச் செல்விக்கும் எனக்கும்- நடைபெறும்
குங்குமத் திருவிழாவிற்கு - தாங்கள்
தங்கள் சுற்றத்துடன்
வருகை தந்து வாழ்த்திட வேண்டுகிறேன்

என்றும் நட்புடன்

கே.வெங்கடேசன்.எம்..,எம்பில்.,பிஎட்.,
ஆசிரியர் பயிற்றுநர்(வட்டார வள மையம் , புவனகிரி
கே.பூவனூர்


திருமண அழைப்பிதழை அழகிய தமிழில் உருவாக்கவேண்டும் என்ற வேட்கை இன்று பலருக்கும் ஏற்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியதாகும். 

இனிய தமிழில் திருமண அழைப்பிதழை வடிவமைத்த அன்பு நண்பர் கே.வெங்கடேசன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுதலையும், வாழ்த்துதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


தொடர்புடைய இடுகை

செவ்வாய், 17 ஜூலை, 2012

இந்தப் பிறவியல் மட்டுமல்ல...



தமிழ் உணர்வாளர்கள் சிலர் தம் திருமண அழைப்பிதழ்களில் திருக்குறளையோ, சங்கப்பாடல்களையோ முன்பக்கத்தில் இடுவதைக் காணமுடிகிறது.

“இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே“ 
என்ற பாடலையும் திருமண அழைப்பிதழ்களில் காணமுடிகிறது. இப்பாடலின் பொருளை இவர்கள் நன்கு அறிந்து தான் அழைப்பிதழில் அச்சடிக்கிறார்களா? இல்லை மேலோட்டமாகத் தான் புரிந்து கொள்கிறார்களா? என்பது சிந்திக்கத் தக்கதாகவுள்ளது.


பாடலைக் காணலாம் வாங்க,


அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து 

மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப 

இம்மை மாறி மறுமை ஆயினும் 
நீ ஆகியர் எம் கணவனை 
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே. 


குறுந்தொகை -49

அம்மூவனார்
தலைவன் பரத்தை மாட்டுப் பிரிந்த வழி ஆற்றாளாகிய தலைவி,அவனைக் கண்டதும் ஆற்றாமையை வெளிப்படுத்துவது.


இப்பாடலின் இம்மூன்று அடிகளை மட்டும் பார்க்கும் போது தலைவி தலைவனைப் பார்த்து இந்தப் பிறவி மாறி அடுத்த பிறவியிலும் நீதான் என் கணவனாக வேண்டும் நானே உனக்குப் பிடித்த மனைவியாக வேண்டும் எனக் கூறுவது போலத்தான் உள்ளது. இந்த அளவில் புரிந்து கொண்டு இப்பாடலை அழைப்பிதழில் போட்டு விடுகிறார்கள்.

இப்பாடலின் முன்னிரண்டு அடிகளையும் அறிந்தால் இப்பாடலைப் அழைப்பிதழ்களில் பயன்படுத்துவார்களா என்பது ஐயம் தான்.

இப்பாடலின் முழுமையான பொருள்.

நீயாகியர் என் கணவனை- என்றமையால் யானாகியர் நின் மனைவி என்பது விளங்கும்.மனைவியாக இருப்பினும் நெஞ்சு நேர்பளாம் பேறு பரத்தைக்கே வாய்க்கப் பெற்றுள்ளது என்ற தலைவியின் வருத்தம் இப்பாடலின் உள்ளீடாகவுள்ளது.

தலைவன் பரத்தையரிடம் சென்று வருகிறான். மனம் நொந்த தலைவி, தலைவனின் தவறைச் சுட்டிக்காட்டுவது போல, இப்பிறப்பில் தான் நான் உனக்குப் பிடித்தவளாக வாழஇயலவில்லை, அடுத்த பிறவியிலாவது பரத்தையரிடம் செல்லாதவனாக நீயும், உன் மனதுக்குப் பிடித்தவளாக நானும் என நாம் ஒற்றுமையாக வாழ்வோம் என உரைக்கிறாள் தலைவி.

திருமணம் என்பது அடுத்தபிறவிக்குக்கூட தொடர்ந்துவரவேண்டியது என்ற சிந்தனை..


காலையில் திருமணம் செய்துவிட்டு மாலையில் விவாகரத்து செய்யும் இன்றைய தலைமுறையினர் கூடப் புரிந்துகொள்ளவேண்டியதாகவுள்ளது.

திருமண அழைப்பிதழ்களில் இப்பாடலை பதிப்பிக்கவிரும்புவோர் இதன் முழுப் பொருளையும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இப்பாடலின் பொருளை இங்கு பதிவுசெய்கிறேன்.

தொடர்புடைய இடுகைகள்


திருமண அழைப்பிதழ்கள் மாதிரி

திங்கள், 14 நவம்பர், 2011

திருமண அழைப்பிதழ் மாதிரி

அன்பான தமிழ் உறவுகளே.. 
எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் சென்றும் கூகுளின் படங்கள் பகுதியில் பார்த்து சில நண்பர்கள் அழைப்பிதழ் நன்றாகவுள்ளது. இதனை எனக்கு பயன்படுத்திக்கொள்ளலாமா என்று கேட்டனர்... சிலர் இதுபோல எனக்கும் வடிவமைத்துத்தாங்களேன் என்றும் அன்பாகக் கேட்டுக்கொண்டனர். சரி கூகுளின் படங்கள் பகுதியில் சென்று மாதிரித் திருமணத் அழைப்பிதழ்கள் தமிழில் எவ்வாறு உள்ளன என்று பார்வையிட்டேன்..

இப்பகுதியில் இனி வரும் காலங்களில் என் கண்ணில்படும் சிறந்த தமிழால் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்களைத் தொகுக்கத் திட்டமிட்டுள்ளேன்.





திருமண அழைப்பிதழ்
மங்கள நாண் விழா
இருகரம் சேரும் விழா
இருமணம் சேரும் விழா
திலகமிடும் திருவிழா
வாழ்க்கைத் துணைநல ஏற்பு விழா
மன்றல் விழா
என்று தலைப்பே இப்போதெல்லாம் தமிழ் நயத்துடன் வைக்கின்றனர்.

மாதிரிக்காக..

இருமணம் இணையும் திருமணம்

விழிகளில் மலர்ந்தது 
காதல் மலர்
ஐப்பசி - அறிவன் புதன்
விடியலில் துவங்கும்
என் வாழ்க்கைப் பயணம்
வேதங்கள் ஓத மத்தளங்கள் முழங்க
சுற்றம் புடைசூழ
நம்பி (மணமகன் பெயர்)நான்
நங்கை (மணப் பெண் பெயர்)யின் கரம் பற்ற
நண்பர்காள் வாரீர்
உம் உள்ளம் குளிர வாழத்துவீர்
எம் மனம் மகிழ

நாள்
இடம்
நேரம்
வழி

அன்புடன் அழைக்கும்
மணமக்கள்

தொடர்புடைய இடுகைகள்