வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 29 மே, 2012

பக்கம் பார்த்துப் பேசு!




நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை காதுகள்..!

  •   நாம் ஒருவரைப் பாராட்டிப் பேசினால் கண்டுகொள்ளாத 

காதுகள்ஒருவரைத் தவறாகப் பேசும்போதுமட்டும் 


முழுமையாக உள்வாங்கிக் கொள்கின்றன.


 
  •  பேருந்திலோ, தொடர்வண்டியிலோ நாம் 
செல்லும்போது நம் உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ நம் 


தனிப்பட்ட இன்ப துன்பங்களையோ, அலுவலகம் சார்ந்த 

செய்திகளையோ நாம் பேசிக் கொண்டுவருவோம். நம் அருகே 

பயணிக்கும் ஒருவர் நமக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாதவராக 

இருந்தாலும் தம் காதுகளைக் கூர்தீட்டிக்கொண்டு 

கேட்பார்.சிலநேரங்களில் நம்மோடு கலந்து 


நமக்கு சில ஆலோசனைகள் கூட சொல்வார். இது உணவகத்தில் 


உணவு பரிமாறிய பணியாள் நாம் உண்பதையே உற்றுநோக்கிக் 


கொண்டிருப்பதுபோலவே இருக்கும்.


  •          அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்துகொள்வதில் சிலருக்கு இருக்கும் ஆர்வம் இன்று பலருக்கு அவர்களின் வாழ்வில் கூட இருப்பதில்லை.

  • இன்றும் பார்க்கிறோம் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள்
விளையாட்டு வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து 


கொள்வதில் நாமோ, நம்மைச்சுற்றி இருப்பவர்களோ எவ்வளவு 


ஆர்வம் கொள்கிறோம்..!

  •   பசி, தண்ணீர் தாகம்போல ஒட்டுக்கேட்டல்என்னும் பண்பு 

சிலருக்கு கூடப்பிறந்த பழக்கமாகவே இருக்கிறது.


  •    சங்ககாலத்தில் இப்படி காதுகொடுத்துக் கேட்பதை அம்பல், என்றும் அலர்  என்றும் பெயரிட்டு அழைத்தனர்.
அதனால் தான் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்..


'பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே'


என்று..

நினைவுக்கு வந்த திரையிசைப்பாடல் ஒன்று..

  “அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும்

எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்

சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்  

சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும் தக்க 

சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்    

ஏமாற்றாதே  ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே“


  • அதனால் தமிழ் உறவுகளே..

 நம்மைச்சுற்றி நிறைய காதுகள் இருக்கின்றன 

என்பதை அறிந்து பக்கம் பார்த்துப் பேசுவோம், இன்னொருவர் 


பேசுவதை  அவர் அறியாது கேட்டல், அதை இன்னொருவரிடம் 


சொல்லுதல் அநாகரீகம் என்பதை உணர்வோம்.

மனிதர்கள் வெறும் காதுகளில் ஒட்டுக்கேட்ட காலம் கடந்து

இன்று



  • தொலைபேசிகள், அலைபேசிகள்,இணையங்கள் 

வழியே ஒட்டுக் கேட்கும் காலத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம் 

என்பதையும் நினைவில் கொள்வோம்.


தொடர்புடைய இடுகை



திங்கள், 28 மே, 2012

இதைத்தான் களவு என்பதோ!

கெட்டிக் காரன் குட்டு எட்டு நாளில் வெளிப்படும் என்று வழக்கில் சொல்வதுண்டு.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கமுடியுமா?

அதுபோல எல்லா உண்மைகளையும் எல்லோராலும் மறைத்துவிடமுடியாது.

ஒவ்வொரு குற்றவாளிகளும் தாம் தவறுசெய்யும்போது அதற்கான தடையங்களையும் விட்டுச்செல்கிறார்கள் என்று காவற்துறையினர் அழுத்தமாகச் சொல்கிறார்கள்.

களவு என்றால் திருடுவது என்றே இன்றும் பலர் நம்பிவருகின்றனர்.

பழந்தமிழர் வாழ்வில் களவு - கற்பு என்பன இருபெரும் கூறுகள் என்பதை தமிழ் இலக்கியங்களை சற்று ஆழமாகப் படித்தவர்கள் நன்கு உணர்வார்கள்.

ஒரு ஆணும், (தலைவன்), பெண்ணும் (தலைவி) பெற்றோர், ஊரார் அறியாது காதலிப்பதைக் களவு என்று சங்ககாலத்தில் அழைத்தனர்.

அவர்கள் திருமணம் செய்துகொள்வதே கற்பு என்று அழைக்கப்பட்டது.


காதலிக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும். காதலித்துக்கொண்டே இருந்துவிடக்கூடாது. விரைவில் அதனை மறந்து திருமணம் 
செய்துகொள்ளவேண்டும் என்பதையே..


களவும் கற்றுமற என்று நம்முன்னோர் உரைத்துச்சென்றனர்.



இன்றைய சூழலில் பிள்ளைகள் தம் காதலைப் பெற்றோரிடமிருந்து எப்படியெல்லாம் மறைக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

சங்ககாலக் காட்சி ஒன்று..

தலைவன் காதலித்துக்கொண்டே இருக்கிறான். தலைவனைத் தினமும் தலைவி சந்தித்துக் கூடிமகிழ்வதால் தலைவியின் உடலில் எற்படும் மாற்றங்களைக் கண்டு அவளின் தாய் ஐயம் கொள்கிறாள். தலைவி உண்மையை உளறிக் கொட்டிவிடுவாளோ என அஞ்சிய தோழி இடையில் புகுந்து வேறு பல பொய்களைச் சொல்லித் தலைவியைக் காப்பாற்றுகிறாள். இந்த உண்மையைத் தலைவனிடம் சொல்லி, விரைவில் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று சொல்கிறாள் தோழி..

இப்போது பாடலுக்குச் செல்வோம்.



ஓங்கிய மலைநாடனே
நீ கூறும்வாய்மைகள் எல்லாம் இப்படியே பொய்த்து ஒழிவனவாகுக !
மூங்கில்கள் நெருங்கிய கற்பாறை நெறியாகிய சிறிய வழியில் இரைதேடி உழலுகின்ற வேங்கை முதலாய மிக்க பகையைப் பொருட்படுத்தாது இரவில் கூட வந்து இவளோடு கூடிமகிழ்கிறாய்
அதனால் உண்டாகிய புதுமணத்தைக் கருதி இவளுடைய தோளைச்சார்ந்து வண்டுகள் அளவில்லாதன மொய்த்தலினாலே
எம் அன்னை தன் கண்களாலே கொல்லுபவள் போல் நோக்கி 
"நீ இதன் முன்னும் இப்படி வண்டுகளால் மொய்க்கப்பெற்ற தோளினையுடையையோ?" என்று வினவினள்;
அங்ஙனம் வினவலும், இவள் அதற்கு எதிர்மொழி சொல்ல அறியாளாய் வருத்தமுற்று என் முகத்தை நோக்கி நின்றாள்
அதனை அறிந்த யான் இவள் எப்படி ஆராய்ந்து மறைத்துக் கூறுவாள் என்றெண்ணி அன்னையை நோக்கி;
அடுப்பிலிட்ட சந்தன விறகின் கொள்ளியை எடுத்துக் காட்டி
அன்னாய் ! இவ்விறகினை அடுப்பிலிடுதலும் இதிலுள்ள சுரும்புகள் இவளுடைய தோளில் மொய்க்கின்றன காண்
என மறைத்துக் கூறினேன்
இங்ஙனம் எத்துணை நாள் நீ வரைந்து கொள்ளுதல் காரணமாகப் பொய்கூறி அவளைக் காப்பாற்றுவது?
                                                                
                 ஓங்கு மலை நாடஒழிகநின் வாய்மை
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி,
உறு பகை பேணாதுஇரவின் வந்துஇவள்
பொறி கிளர் ஆகம் புல்லதோள் சேர்பு
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின்,
கண் கோள் ஆக நோக்கி, 'பண்டும்
இனையையோ?' என வினவினள்யாயே;
அதன் எதிர் சொல்லாளாகிஅல்லாந்து,
என் முகம் நோக்கியோளே: 'அன்னாய்!- 
யாங்கு உணர்ந்து உய்குவள்கொல்எனமடுத்த
சாந்த ஞெகிழி காட்டி
ஈங்கு ஆயினவால்என்றிசின் யானே.
நற்றிணை -55  பெருவழுதி 


வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழி தலைவற்குச் சொல்லியது. -


பாடல் வழியே..


  • களவு என்ற சொல்லின் சங்ககாலப் பொருளை உணர்ந்துகொள்ளமுடிகிறது.
  • களவை (காதலை) மறைக்கத் தெரியாமல் திருதிருவென விழிக்கும் தலைவியைப் பார்த்தால் நமக்கே சிரிப்பு வருகிறது.
  • இடையில் புகுந்து ஏதோ காரணம் காட்டித் தலைவியைக் காப்பாற்றும் தோழியின் செயல் நட்பின் தன்மைக்குத் தக்க சான்றாக அமைகிறது.
  • தலைவியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை உற்று நோக்கியறியும் தாயின் உளவியல் அறிவு இன்றைய பெற்றோர்கள் அறிந்துகொள்ளவேண்டிய அடிப்படைப் பாடமாகவே அமைகிறது.
தொடர்புடைய இடுகைகள்

வெள்ளி, 25 மே, 2012

ஓட்டைக் குடத்தில் நிரப்பிய நீர்!



பணக்காரனுக்கு ஒரு நீதி!
ஏழைக்கு ஒரு நீதி!
அரசியல்வாதிக்கு ஒரு நீதி!
ஆன்மீகவாதிக்கு ஒரு நீதி!
குற்றங்களைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட சட்டங்களைவிட
குற்றங்களிலிருந்து தப்பிக்க அதிகமான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன!
இத்தனை காவல்நிலையங்களும், நீதிமன்றங்களும் இருந்தும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

ஓட்டையான குடத்தில் தண்ணீர் நிரப்புவதுபோல நம் கட்டுப்பாடுகளெல்லாம் எங்கோ சிதைந்துபோகின்றன?
சரி மனித ஆற்றலுக்கு மேல் நம்பப்படும் கடவுளாவது மக்களைப் பண்படுத்துவார் என்றால், கடவுளின் பெயரால் போலிகளால் நடத்தப்படும் நாடகங்கள் மனித இனத்தையே ஆட்டுமந்தைகளாக மாற்றிவிடுகின்றன.

இன்றைய சூழலில் நீதியின் நிலை குறித்து இவ்வாறு நாம் சிந்திக்கும்போது, என் நினைவுக்கு வந்த கலீல் சிப்ரான் அவர்களின் கதை ஒன்று உங்கள் பார்வைக்காக..

ஓர் இரவு, அரண்மனையில் விருந்தொன்று நடந்தது. அங்கே ஒரு மனிதன் அரசர் முன் முகம் கவிழ்ந்து குப்புற வீழ்ந்து பணிந்தான். விருந்தினர் அனைவரும் உற்றுநோக்கினர் அவனை. அவனது கண்களின் ஒன்று காணாமல் போயிருந்ததையும், கண்குழியில் குருதி வழிவதையும் அவர்கள் பார்த்தனர்.

அரசர் அவனை விசாரித்தார்- என்ன நிகழ்ந்தது உனக்கு?
அந்த மனிதன் பதிலளித்தான்- ஓ அரசே!
தொழில்முறையில் நான் ஒரு திருடன். இந்த இரவில் நிலவில்லாததால் பணம் மாற்றுவோர் அங்காடிக்குக் கொள்ளையிடச் சென்றேன். சன்னல் வழியே மேலேறும் போது தவறுதலாக ஒரு நெசவாளியின் அங்காடிக்குள் நுழைந்துவிட்டேன். இருட்டில் தடுமாறித் தறிக்குள் விழுந்தேன். என் கண் பறிபோனது. நான் இப்போது ஓ அரசே! நெசவாளியின் தவறுக்காக நீதி கேட்கிறேன்.

பிறகு அரசர் நெசவாளியை அழைத்துவரச் சொல்லஅவனும் வந்தான். நெசவாளியின் ஒரு கண் பிடுங்கப்படவேண்டுமெனத் தீர்ப்பானது.

நெசவாளி சொன்னான் – ஓ அரசே! உங்கள் நீதி நியாயமானது. என் கண்களுள் ஒன்று கவரப்படவேண்டுமென்பது சரியானதே. ஆனால், அந்தோ...! நான் நெய்யும் துணியின் இரு ஓரங்களைப் பார்ப்பதற்காக இரு கண்களும் எனக்குத் தேவையன்றோ! ஆனால் என் அண்டைவீட்டுக்காரன், செருப்புத் தைப்பவன். இரு கண்களும் உள்ளவன், அவனது தொழிலில்  அவனுக்கு இரு கண்கள் தேவையில்லை.

நெசவாளியின் கூற்றைக் கேட்ட அரசன் செருப்புத் தைப்பவனை வரவழைத்தான். செருப்பு தைப்பவனின் இருகண்களில் ஒன்றை அவர்கள் கவர்ந்தனர்.
பாரபட்சமின்றி நியாயம் வழங்கப்பட்டதில் நீதி திருப்தியுற்றது!

தொடர்புடைய இடுகை

செவ்வாய், 15 மே, 2012

கனவு நினைவானது.


 

மனை மருட்சி.


காலங்கள் மாறினாலும் சில மரபுகள் மாறுவதில்லை.

எதிர்த்தவீட்டுப் பையன் பக்கத்துவீட்டுப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான் என்பது போன்ற செய்திகளை இன்றும் கண்ணால் பார்க்கிறோம், நாளிதழ்களில் படிக்கிறோம்.

இதோ சங்ககாலக் காட்சி ஒன்று..

ந்து விளையாடிக் கொண்டிருந்தாள் தலைவி. அப்போது வீட்டில் வளர்ந்த வயலைக் கொடியைக் கன்றினை ஈன்ற பசு தின்றது. அதைக் கண்ட தலைவி தான் ஆடிக் கொண்டிருந்த பந்தினை எறிந்துவிட்டு, ஓரையாடும் பாவையையும் நீங்கியவளாகத் தம் வயிற்றில் அடித்துக்கொண்டு வருந்தினாள்.

மான் போன்ற பார்வை கொண்டவளான என் மகள், நானும் செவிலித்தாயும் “தேனோடு கலந்த பாலைப் பருகுவாய் பருகுவாய்” என்று ஊட்டியபோதும் உண்ணாமல் அழும் தன்மையுடையவளாவாள்.

நேற்றும் அத்தன்மையளாகத் தான் இருந்தாள்.

இன்றோ காளை போன்ற வலிமை வாய்ந்த தலைவனின் பொய்மொழிகளே உண்மையென்றெண்ணி வெண்மையான பற்களில் சிரிப்புத் தோன்ற எம்மை நீங்கிச் சென்றுவிட்டாள்.

இத்தகைய மென்மைத்தன்மையுடையவள் எவ்வாறு மனையறம் நடத்துவாளோ!

என்று வருந்துகிறாள் நற்றாய்.

பாடல் இதோ,



இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென,
பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி,
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள்
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு,
5 யானும் தாயும் மடுப்ப, தேனொடு
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி,
நெருநலும் அனையள்மன்னே; இன்றே,
மை அணற் காளை பொய் புகலாக,
அருஞ் சுரம் இறந்தனள் என்ப-தன்
10 முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே.


நற்றிணை-179.

வயலைக் கொடியை பசு மேய்ந்தமைக்குத் தலைவி வருந்தி வயிற்றில் அடித்து அழுததுபோல,

தலைவன் தலைவியை அழைத்துச் சென்றமைக்குத் தாய் வயிற்றில் அடித்துக்கொண்டு கலங்கினாள்.

தீம்பாலை உண்ணச் சலித்தவள் இன்று எப்படி கொடிய சுரவழியே செல்லத் இசைந்தாள்?

என வியப்பெய்தினாள் நற்றாய்!

இப்பாடல் வழி அறியலாகும் செய்திகள்.
(மனை என்றால் வீடு, மருட்சி என்றால் மயக்கம் ஆகும். தலைவியின் பிரிவால் மருட்சியடையும் தாயின் அவல நிலை சொல்லப்பட்டதால் மனைமருட்சியானது)

1.மனை மருட்சி என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.
2.சங்ககால பெண்கள் விளையாட்டுகளுள் “பந்து விளையாட்டும், பாவை விளையாட்டும்“ குறிப்பிடப்படுகிறது.

வியாழன், 3 மே, 2012

யானைச் சாமியும் - பாகச்சாமியும்

ஒரு குரு தன் சீடர்களிடம் சொற்பொழிவாற்றினார்.


“கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். எல்லா உயிர்களிலும் இறைவன் குடிகொண்டிருக்கிறார். எனவே எல்லா உயிர்களையும் கடவுளாகப் போற்றி வழிபடவேண்டும்”

இதைக் கேட்ட சீடன் ஒருவன் கடைவீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது,
யானை ஒன்று மதம்பிடித்து ஓடிவந்தது. பாகனோ, யானையைக் கட்டுப்படுத்தமுடியாமல் பின்னால் ஓடிவந்து மக்களை எச்சரித்துக்கொண்டிருந்தான்.

சீடனோ,  யானையைக் கண்டதும் குருசொன்னபடி கடவுள் யானை வடிவில் வருகிறது என்று கையெடுத்துக் கும்பிட்டான். யானையின் அருகில் சென்றான்.

பாகனோ யானை மதம்பிடித்து வருகிறது அருகில் செல்லாதீர்கள் என்று எச்சரி்த்தான்.

சீடனோ பாகன் கூறியதைக் கவனிக்கவில்லை. 

யானை சீடனைத் தூக்கிவீசியது. விழுந்து எழுந்த சீடன் நொண்டிக்கொண்டே சென்று தம் குருவிடம் நடந்ததைச் சொன்னான். குரு சொன்னார்.

யானைச் சாமியை நீ கடவுளாகக் கருதி வழிபட்டது சரிதான். ஆனால் பாகன் வடிவில் வந்த சாமியின் எச்சரிக்கையை நீ ஏன் அலட்சியம் செய்தாய்? பாகச் சாமியின் பேச்சைக் கேளாததால் நீ இந்தத் துன்பத்தை அனுபவிப்பது சரிதான் என்றாராம் குரு.

எங்கோ படித்த கதையிது. இந்தக் கதையோடு தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டிய இடுகைகள் இரண்டினை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

புதன், 2 மே, 2012

சிறப்பான பயணம்.

நம்மால் முடியும்..



சாலை விழிப்புணர்வு
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

திருக்குறள் -435 

குற்றம் நேர்வதற்கு முன்னரே வராமல் காத்துக்கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன்னர் நின்ற வைக்கோல் போர் போல அழிந்துவிடும்.