வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 17 ஜூலை, 2008

தமிழா!நீ பேசுவது தமிழா?

தமிழா!நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைகொன்று தொலைத்தாய்...
தமிழா!நீபேசுவது தமிழா?
உறவை 'லவ்' என்றாய்உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியைபார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்விடியாதுன்
வாழ்க்கைஇனிப்பை 'ஸ்வீட்' என்றாய்அறுத்தெறி நாக்கை...
தமிழா!நீ பேசுவது தமிழா?
வண்டிக்காரன் கேட்டான்'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?
தமிழா!நீ பேசுவது தமிழா?
கொண்ட நண்பனை'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியைஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழிசாவது நல்லதா?
தமிழா!நீ பேசுவது தமிழா?
பாட்டன் கையில'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுலஎன்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்உனக்கு அப்பனா?
தமிழா!நீ பேசுவது தமிழா?
-உணர்ச்சிக் கவிஞர் .காசியானந்தன் .அவர்கள்


இக்கவிதை என்னை மிகவும் பாதித்த கவிதையாகும் .