வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 25 நவம்பர், 2023

செயற்கை நுண்ணறிவு உரையாடிகளில் தமிழ்

(Tamil in Artificial Intelligence Chatbots)

முனைவர் இரா.குணசீலன்

தமிழ் இணைப்பேராசிரியர்

பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர்


               மனிதர்களை விலங்குகளுடன் வேறுபடுத்திக்காட்டுவது அறிவு. விலங்குகளைவிட மனிதர்கள் அறிவுடையவர்களாகத் திகழ்வதற்கு கல்வியே அடித்தளமாக அமைகிறது. அதனால் தான் வள்ளுவர் கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்குமான வேறுபாடு, விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான வேறுபாடு என்பார். மனிதர்களின் அறிவால் உருவாக்கப்பட்ட கணினி, இயந்திர வழி கற்றல் வழியாக செயற்கை நுண்ணறிவுள்ள கருவியாக உருமாறி வருகின்றது. கணினியின் நுட்பங்களுள் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) குறிப்பிடத்தக்கது. செயற்கை நுண்ணறிவு உரையாடிகளில் (chatbots) தமிழின் தற்கால நிலையை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.