வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 24 மே, 2021

வாழ்க்கை பற்றிய 40 பொன்மொழிகள்


 

1. அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது. - புத்தர்.

 

2. வாழ்க்கையில் முன்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும், ஊக்கமும் தேவை. இறுதியில் வெற்றிபெற பொறுமையும், தன்னடக்கமும் தேவை.

-அரிஸ்டாட்டில்          

 

3. வாழ்க்கை என்கிற ஆடையில் நன்மை, தீமை

என்ற இரு நூல்களும் இருக்கும். - ஷேக்ஸ்பியர்

 

4. பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்தே படிக்கின்றார்கள். - லிண்டல்

 

5. நூலகம் என்பது ஆடம்பரமல்ல. ஆனால் அது வாழ்க்கையின் அவசியங்களுள் ஒன்று- ஹென்றி வார்டு பீச்சர்

 

6. நேரத்தை வீணாக்காதே அதில்தான் வாழ்க்கை அடங்கியிருக்கிறது. -பெஞ்சமின்

 

7. வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது!                                       - பெர்னார்ட்ஷா

 

8. வாழ்வில் வெற்றிபெற நண்பன் தேவை. வாழ்க்கை முழுவதும் வெற்றிபெற எதிரி தேவை - யாரோ

 

9. நீங்கள் தான் உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் அதை, அடுத்தவர்களை எழுத விட்டு விடாதீர்கள் - ஹார்லி டேவிட்சன்

10. வாழ்க்கை ஒரு போர்க்களம். நம்பிக்கைதான் ஆயுதம்

- மகாவீரர் 

 

செவ்வாய், 18 மே, 2021

கணித்தமிழ்ப் பயிலரங்க அழைப்பிதழ்


 கணித்தமிழ்ப் பேரவை சார்பாக நடைபெறும் இரண்டு நாள் பயிலரங்கத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

சனி, 8 மே, 2021

செலவு - சங்க இலக்கியச் சிறுகதை - 1

 


கலித்தொகை 9, பாலை பாடிய பெருங்கடுங்கோ

செவிலித்தாய் வைணவத் துறவியிடமும் அவருடைய மாணாக்கர்களிடமும் சொன்னது :

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்

உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்

நெறிப்பட சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்

குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!

வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர் இவ் இடை  5

என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்

தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்

அன்னார் இருவரை காணிரோ பெரும?

வைணவத் துறவி:

காணேம் அல்லேம்!  கண்டனம்!  கடத்து இடை

ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய,  10

மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறீர்!

பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,

மலை உளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும்?

நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,  15

நீர் உளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்?

தேருங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

 

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,

யாழ் உளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?

சூழுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!  20

என, ஆங்கு

இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்,

அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே.

என்ற பாடலை மையக்கருத்தாகக் கொண்டு எழுதப்பட்டது.

 

செலவு

     ஞாயிற்றுக் கிழமையென்பதால் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார் இனியன்.

     வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆண்களே! என்ற அணியில் பேசிய கவிஞர் பரிதிசாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை என்று சும்மாவா நம் முன்னோர் சொல்லியிருக்காங்க நடுவரே!” ஆண் குழந்தை என்றால் வரவு பெண் குழந்தை என்றால் செலவு என்பது அன்றும் இன்றும் என்றும் மாறாதது நடுவர் அவர்களே,  என்று பேசினார். தொடர்ந்து விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.