வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

கோவிந்தசாமியுடன் உரையாடல் - மகாகவி பாரதியார்


ர்வ மத சமரசம் -

கோவிந்தசாமியுடன் உரையாடல் - மகாகவி பாரதியார்

பாரதியார், இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் கவிதைகள் வாயிலாக மக்கள் மனதில் சுதந்திர உணர்வை ஊட்டியவர். இவர் கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சமூக சீர்திருத்தவாதி, மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் தன்மைகொண்டவர். . 

'எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்' என்று தன்னைச் சித்தனாகவும் அறிமுகம் செய்துகொண்டவர். சி.எஸ்.முருகேசனின் ‘பாரதி கண்ட சித்தர்கள்’ என்ற நூலில் பாரதி கண்ட சித்தர்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்துள்ளார். பாடப்பகுதியில் இடம்பெற்ற கோவிந்த சுவாமியுடன் உரையாடல், பாரதி-அறுபத்தாறில் இடம்பெற்றுள்ளது. 

கோவிந்தசாமி என்னும் ஞானியை முன்பே அறிந்திருந்த பாரதி அவர் மறைந்த தம் பெற்றோரின் உருவத்தைக் காட்டியதாலும், அவரின் அன்பாலும் ஞானத்தாலும் அவரைக் குருவென்று சரணடைந்தார். கோவிந்தசாமியால் மரணபயம் நீங்கி வலிமை பெற்றதாகக் குறிப்பிட்ட பாரதிஅந்த கோவிந்த சாமியை மீண்டும் சந்தித்தபோது நடந்த உரையாடலாக இப்பாடப்பகுதி அமைகிறது. 

இவ்வுரையாடலின் வழியாக பாரதியார் ஒற்றுமையை எடுத்துரைத்துள்ளார். 


கோவிந்த சுவாமியுடன் உரையாடல்


''மீளவுமங் கொருபகலில் வந்தான் என்றன்

மனையிடத்தே கோவிந்த வீர ஞானி,

ஆளவந்தான் பூமியினை,அவனி வேந்தர்