வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 31 டிசம்பர், 2022

நெய்தல் கார்க்கியார்

 



சங்க இலக்கியத்தில் தலைவனின் பிரிவு தாங்காமல் வருந்தும் தலைவியின் மனநிலையைப் பாடுவன நெய்தல் பாடல்கள் ஆகும்.இவ்வுணர்வை இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என உரைப்பர்.

நெய்தலின் முதல், கரு, உரி ஆகிய முப்பொருளும் சிறப்பாகப் பாடப்பட்டமையால் இப்புலவர் நெய்தல் கார்க்கியார் என்ற பெயர் பெற்றார்.

இன்று பிரிவு என்ற சொல் பெரிதும் பொருளற்றதாகிவிட்டது. 

போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புகள் பிரிவின் இடைவெளிகளைக் குறைத்துவிட்டன.

செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை (குறள் – 1151) என்ற வள்ளுவரின் குறள் இங்கு நோக்கத்தக்கது.

குறுந்தொகையில் களவுக்காலத்தை நீட்டிக்கும் தலைவனிடம் அவன் தலைவியை விரைந்து திருமணம்செய்து கொள்ளாவிட்டால் இவள் இறந்துவிடுவாள் என்று அவள் தோழி நாகரிகமாக உரைக்கிறாள்.

வெள்ளி, 30 டிசம்பர், 2022

அம்பல் ஊர்


நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க...

ஊர் என்ன பேசும்..

அடுத்தவங்க என்ன நினைப்பாங்க...

உலை வாய மூடலாம் ஊர்வாய மூடமுடியுமா..

கிசுகிசு பேசுதல்

என்றெல்லாம் காலந்தோறும் அடுத்தவர்களைப் பற்றிப் பேசுவது குறித்து அறிவோம்..

அன்று கிணற்றடி, குளத்தங்கரை, ஆற்றங்கரைகளில் பேசப்பட்ட ஊர்க்கதைகள் இன்று சமூகத்தளங்களில் பேசப்படுகின்றன.

அடுத்தவர்களைப் பற்றி அதிகம் பேசுவது ஆண்களா? பெண்களா? என்றால் இருவரும்தான்..

இருந்தாலும் ஆண்களைவிடப் பெண்களே அதிகமாக அடுத்தவர்களைப் பற்றிப் பேசுவார்கள் என்பதைச் சங்கப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன.