வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 10 மார்ச், 2022

நீ நல்கிய வளனே

 

தனக்கு இருக்கும் பகை இன்னது இன்னது என்று 

அடுக்கிக் காட்டிப் புலவர் தன் வறுமை நிலையை விளக்குகிறார்.

யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப

இழை வலந்த பல் துன்னத்து

இடைப் புரை பற்றி, பிணி விடாஅ

ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த

பேஎன் பகை என ஒன்று என்கோ?          

உண்ணாமையின் ஊன் வாடி,

புதன், 9 மார்ச், 2022

பெருவிறல் நாடே!


      பாரியின் பறம்பு நாட்டில், புன்செய் நிலத்தில் வரகு, தினை, எள் போன்ற பொருள்கள் நிறைய விளைந்தன. அந்நாட்டு மக்கள் மிகுந்த அளவில் கள்ளும் ஊனும் உண்டார்கள். இது போன்ற புது வருவாயுடைய வளமான நாடு இனி அழிந்துவிடுமோ என்று எண்ணிக் கபிலர் புலம்புவதாக இப்பாடல் அமைகிறது.

செவ்வாய், 8 மார்ச், 2022

நன்றி மறக்கலாமா..


பசுவின் முலையை அறுத்தல், தாலி அணிந்த பெண்ணின் கருவைச் 

சிதைத்தல் சான்றோரை அடித்தல், இவை பாவச் செயல்கள்.

இப் பாவங்களைக் கழுவாய் செய்து போக்கிக்கொள்ளலாம். ஆனால், 

நிலநடுக்கத்தால் நிலமே மேடு பள்ளமாக, பள்ளம் மேடாக 

பெயர்வதானாலும் ஒருவன் செய்த உதவியை மறந்து கொன்றோர்க்கு 

அவற்றின்  விளைவுகளிலிருந்து பிழைக்கும் வழி இல்லை என்றும் அறம் 

பாடுகிறது.

(எந்நன்றி கொன்றாற்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு - திருக்குறள்)

செவ்வாய், 1 மார்ச், 2022

எண்ணி விளையாடுதல்


சங்க இலக்கியத்தில் 36 வகையான விளையாட்டுகள் குறித்த குறிப்புகள் உள்ளன. அவற்றுள் எண்ணி விளையாடுதல் என்பதும் ஒரு வகை விளையாட்டு ஆகும்.  மரத்தையோ,நாவாயையே,விலங்குகளையோ பறவையையோ இருபாலர் ஒன்று,இரண்டு என்று எண்ணிப் பொழுது போக்காக ஆடுதல். இவ்விளையாட்டின் இயல்பாகும். இந்த விளையாட்டு பற்றிய குறிப்புள்ள ஒரு நற்றிணைப் பாடலைக் காண்போம்..

தோழி தலைவனிடம், யாம் பகலில் இங்கிருந்து மாலையில் பாக்கம் சென்றால் தலைவி அங்கு வருந்துவாள்.

அவளை அங்கு வருக என அழைக்கும் வலிமையும் எமக்கில்லை. எனவே எம் பாக்கத்தினர் 

மகிழ்ந்து கொண்டாடுமாறு நீ உன் தேரில் வருக என திருமணத்திற்குத் தூண்டினாள்.

இளையோன் உள்ளம்


    தலைவனும், தலைவியும் சுரத்தின் வழியே செல்வதைக் கண்டவர்கள், இக்கொடிய சுரத்தில் மென்மை பண்புடைய தலைவியை அழைத்துச் செல்லும் இந்த இளைஞன் மனம் இடியைவிடக் கொடியது எனக் கவலைப்பட்டுக் கூறினர்.


தலைவனும், தலைவியும் இரவில் காட்டு வழியில் செல்கின்றனர். 

அவர்களைப் பார்த்தவர்கள் பேசிக்கொள்கின்றனர்.

அவள் மென்மையானவள்.

அவள் முன்னே செல்ல அவன் பின்னே செல்கிறான்.

புயலும் மழையுமாக இருக்கும்போது இடிக்கும் இடியைக் காட்டிலும் 

கொடியது தலைவன் இந்த இளைஞன் உள்ளம்.

ஏனென்றால்,

மாலையில் நேரத்தில், குண்டும் குழியுமாக இருக்கும் குன்றத்து வழியே 

அழைத்துச் செல்கின்றனான்.

அக்குன்றம் பெரிய குளிர்ச்சியையுடையது.

உலவை என்னும் பேய்க்காற்று வீசுகிறது. ஈந்து தழைத்திருக்கிறது.

இண்டங்கொடி முள்ளுடன் படர்ந்திருக்கிறது.

வழியில் செல்வோர் தலைமேல் புலிக்குட்டிகள் பாய்கின்றன.

அவை இரை தின்ற குருதியோடு கூடிய வாயை உடையவை.

இப்படிப்பட்ட வழியில் செல்லத் துணிந்திருக்கிறானே! இவன் உள்ளம் 

கொடிது.

அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,

ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,

ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த

செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,

வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,

மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;

வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று

எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,

காலொடு பட்ட மாரி

மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே!


- பெரும்பதுமனார்.

உடன்போகா நின்றாரை இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது


சொற் பொருள்


ஒலிதல்-தழைத்தல். உலவை-காற்று. நெய்த்தோர்-இரத்தம். வல்லியம் - புலி. 

இவர்தல் - படர்ந்தேறுதல். வை-கூர்மை. எல் - இராத்திரி. மிளிர்க்குதல்-புரட்டுதல். ஐயள் - மெல்லியள்