வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 21 அக்டோபர், 2014

புலிதுஞ்சு வியன்புலம்!

வலிமைவாய்ந்த புலிதங்கியிருக்கும் அகன்ற இடத்துக்குள் சராசரியான மனிதர்கள் சென்றால் அவர்கள் நிலை என்ன ஆகும்?

(சமகால விபத்துடன் சங்ககாலக் காட்சியை ஒப்பீடுசெய்வதாக இக்கட்டுரை அமைகிறது.)

விலங்குக் காட்சிசாலைக்குச் சென்ற பாரதி சிங்கத்தை அருகில் சென்று பார்க்கவேண்டும் என்று சொன்னதாகவும். பணியாளர் அருகில் இருக்க, அச்சமின்றி சென்ற பாரதி சிங்கத்தைப் பார்த்து நீ காட்டுக்கு ராஜா, நான் பாட்டுக்கு ராஜா என்று சொல்லியதாகவும். அதை ஏற்றுக்கொள்வதுபோல சிங்கமும் கர்சனை செய்ததாகவும் பாரதி பற்றி வாழ்க்கைக் குறிப்புகள் சொல்வதுண்டு.

எல்லோரும் பாரதியாகமுடியுமா? 



இந்தக் காட்சியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமுடியாது.

அந்த மனிதனின் நிலையில் நம்மை வைத்து எண்ணிப்பார்க்கும்போதே மனதெல்லாம் பதைபதைக்கிறது.

நாம் வாழ எத்தனையோ உயிர்களை அழித்திருக்கிறோம்.
ஆனால்

திங்கள், 20 அக்டோபர், 2014

இத்தனை அழகா இளவேனில்!



கடைசி தலைமுறை என்ற தலைப்பில் முகநூலில் படித்ததில் பிடித்தது,
1.
ஒளியும் ஒலியும் பார்த்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்
2.செல்போன்ல பட்டன பார்த்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
3.மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!
4.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
5.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
6.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
7.தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
8.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
9.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
10.நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
11.மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க புடை சூழ வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

இப்படி கணினியும், திறன்பேசியும் நம் உலகை நிறையவே மாற்றிவிட்டன. இன்றைய அறிவியலின் குழந்தைகளாக வாழும் நாம்,
இயற்கையின் குழந்தைகளாக வாழ்ந்த சங்ககால மக்களின் வாழ்வியலை சங்கஇலக்கியங்கள் வழியாகக் காணம்போது வியப்புதான் தோன்றுகிறது.

இதோ ஒரு கலித்தொகை பாடல்,

தலைமக்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றத்துக்கு பல தூதுப் பொருள்களையும் கேட்டிருப்போம் இளவேனிற் பருவமே தலைவனின் வரவைச் சொல்லும் தூதாக வந்ததாக இப்பாடல் மொழிகிறது,
தலைவன் பிரிந்து சென்றுள்ளான். அவன் குறித்த இளவேனிற் காலம் வந்தது. அவன் இன்னும் வரவில்லையே என்று அப்பருவம் கண்டு தலைவி  ஆற்றாது வருந்தினாள். தோழி காலத்தை நோக்கி,