வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 3 ஜூலை, 2018

இயற்கையுடன் இயைந்து வாழ்வோம்!


இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை!

மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள்,

செயற்கை நுண்ணறிவுத்திறன் (AI),

மெய்நிகர் தொழில்நுட்பம்(VR)

பொருள்களின் இணையம் (IOT),

போன்றவை எதிர்காலத்தில் இந்த வேலைக்கு மனிதர்கள் எதற்கு?

என்ற கேள்வியை முன்வைத்து வளர்ந்து வருகின்றன. இயற்கையை மறந்து செயற்கையை பெரிதும் சார்ந்து வாழும் இவ்வாழ்க்கை முறையே பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை.

வியாழன், 28 ஜூன், 2018

வள்ளுவர் கூறும் அழகு!


                                                                              
உலகின் தலைசிறந்த நூல்களுள் ஒன்றாகவும், மொழி எல்லைகளைக் கடந்து மனிதகுலம் கொண்டாடும் நூலாகவும் திகழ்வது திருக்குறள் ஆகும். தமிழின் அடையாளமாகத் திகழும் இந்நூலில் தமிழ் என்ற சொல்லே பயன்படுத்தப்படவில்லை. இருந்தாலும் தமிழின் சிறப்பை மிகச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார் வள்ளுவர். அதுபோல அழகு என்ற சொல்லே திருக்குறளில் பயன்படுத்தப்படவில்லை. அச்சொல்லுக்கு இணையாக கவின், எழில், அணி ஆகிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். வள்ளுவர் பார்வையில் எது அழகு என்பதையும், அதை அவர் வெளிப்படுத்தும் பாங்கினையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகிறது.

உறுப்புகளின் அழகு

                                உடலில் அமைந்துள்ள உறுப்புகளின் அமைப்பைப் பற்றிக் கூறுவது சாமுத்ரிகா லட்சனம். மனித உடலில் ஒவ்வோர் உறுப்புகளும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறும் இந்த சாத்திரம் சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் அடிப்படையாகப் போற்றப்படுகிறது. சிலைகளிலும், ஓவியங்களிலும் அழகு என்ற கூறு இதை அடிப்படையாகக் கொண்டே பார்க்கப்படுகிறது. ஆனால் வள்ளுவரோ அன்புடைமை என்ற அதிகாரத்தில்,                          

               புறத்துறுப் பெல்லாம் எவன் செய்யும்  யாக்கை
                                 அகத்துறுப்பு அன்பி லவர்க்கு – 79 என்று உரைக்கிறார்.
இவர் பார்வையில் அழகு என்பது புறத்தோற்றம் சார்ந்தது அல்ல. அன்பு என்னும் அகத்தின் உறுப்பு என்ற பார்வை புலனாகிறது.

புதன், 6 ஜூன், 2018

ஐம்பெரும் காப்பியங்கள்


ஐம்பெரும் காப்பியங்கள் ( இலக்கிய வரலாறு)
           தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியங்களுக்கு சிறப்பிடம் உண்டு. தண்டியலங்காரம் பெருங்காப்பியம் என்பதற்கு நுவல்பொருளும், கட்டமைப்பும் நோக்கிய பல விதிகளைக் குறிப்பிட்டாலும், முத்தாய்ப்பாக அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் தழுவியது பெருங்காப்பியம் என உரைக்கும். தமிழ்க்காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம் என வடமொழி மரபின் வழிப் பகுத்தனர். ஐம்பெருங்காப்பியங்களாவன,(1)சிலப்பதிகாரம்  (2) மணிமேகலை (3) சீவகசிந்தாமணி                      (4)வளையாபதி(5)குண்டலகேசி ஆகும்.    ஐம்பெரும் காப்பியம் - ஓர் ஒப்புமை

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

சொல்லேருழவரான வில்லேருழவர்கள்




சொல்லை ஏராகக் கொண்டு உழுது, மக்கள் மனங்களை ஆள்வோர் புலவர்கள், வில்லை ஏராகக் கொண்டு உழுது பகைவர் நிலங்களையும் ஆள்வோர் புரவலர்கள். பாடல் பாடுவதை மட்டுமே இயல்பாகக்கொண்ட புலவர்களோடு, நாட்டை ஆளும் புரவலர்களும் பாடல் பாடிய பெருமை உடையன சங்கப்பாடல்கள். புறநானூற்றில் இடம்பெற்ற பாடல்களுள் புரவலர்களால் பாடப்பட்ட பாடல்களின் சிறப்பியல்புகளை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகிறது.


புதன், 18 ஏப்ரல், 2018

புறநானூற்றில் அறிவின் வாயில்கள்



           மனிதனின் அறிவுத் தேடலில் அனுபவங்களைப் பதிவு செய்வது என்பது தனித்துவமான பண்பாக அமைகிறது. பிற உயிரினங்களுக்கு இயற்கை அறிவு என்ற அடிப்படையில் இப்புரிதல் அமைந்தாலும் மனிதனுக்கு, இயற்கை அறிவுடன் செயற்கை அறிவு குறித்த தேடலும் இருந்தது. இத்தேடலே இவ்வுலகில் எல்லா உயிர்களையும், வளங்களையும் மனிதனே ஆட்சி செய்யத் துணைநின்றது. பல்வேறு நாடுகளிலும், பல்வேறு மொழிகளிலும் இதுவரை நடைபெற்ற அறிவு குறித்த ஆய்வின் பயனாக, பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பாக மெய்ப்பொருளியல் அமைகிறது. அம்மெய்ப்பொருளியலின் ஒரு கூறாக விளங்குவது அறிவாய்வியல். அவ்வறிவாய்விலின் ஒரு பிரிவாக அமையும் அறிவின் வாயில்கள் பற்றிய சிந்தனைகளைப் புறநானூற்றின் வழி எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகிறது.

வியாழன், 25 ஜனவரி, 2018

பெண்கள் வாழ சிறந்த நாடுகள்!


m12
உலகெங்கும் மகளிர் மதிப்புடனும் மரியாதையுடனும் பாதுகாப்புடனும் வாழ்கிறார்களா? "வுமன் ஃபீஸ் மற்றும் செக்யூரிட்டி இன்டெக்ஸ்' என்ற நிறுவனம் 2017 - 2018-ஆம் ஆண்டுக்கான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் வருமாறு:
 பெண்களுக்கு தரப்படும் நீதி, பாதுகாப்பு உள்பட 11 காரணிகள் இதற்கு கவனத்தில் கொள்ளப்பட்டு, 153 நாடுகள் கண்காணிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த நாடுகளின் பட்டியல்:
 1. ஐஸ்லாந்து
 2. நார்வே
 3. சுவிட்சர்லாந்து
 4. ஸ்லோவேனியா
 5. ஸ்பெயின்
 இந்தப் பட்டியலில் 87-ஆவது இடம் சீனாவுக்கு. இந்தியாவுக்கோ 131-ஆவது இடம்.
 பெண்களுக்கு மிகமோசமான மதிப்பை அளிக்கும் நாடுகள் என்று கடைசி ஐந்து இடத்தைப் பிடித்த நாடுகள்:
 149. மத்திய ஆப்பிரிக்க குடியரசு
 150. பாகிஸ்தான்
 151. ஏமன்
 152. ஆப்கானிஸ்தான்
 153. சிரியா
 என இந்தப் பட்டியல் கூறுகிறது.
 - ராஜி


நன்றி தினமணி