வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

சொல்லேருழவரான வில்லேருழவர்கள்




சொல்லை ஏராகக் கொண்டு உழுது, மக்கள் மனங்களை ஆள்வோர் புலவர்கள், வில்லை ஏராகக் கொண்டு உழுது பகைவர் நிலங்களையும் ஆள்வோர் புரவலர்கள். பாடல் பாடுவதை மட்டுமே இயல்பாகக்கொண்ட புலவர்களோடு, நாட்டை ஆளும் புரவலர்களும் பாடல் பாடிய பெருமை உடையன சங்கப்பாடல்கள். புறநானூற்றில் இடம்பெற்ற பாடல்களுள் புரவலர்களால் பாடப்பட்ட பாடல்களின் சிறப்பியல்புகளை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகிறது.


புதன், 18 ஏப்ரல், 2018

புறநானூற்றில் அறிவின் வாயில்கள்



           மனிதனின் அறிவுத் தேடலில் அனுபவங்களைப் பதிவு செய்வது என்பது தனித்துவமான பண்பாக அமைகிறது. பிற உயிரினங்களுக்கு இயற்கை அறிவு என்ற அடிப்படையில் இப்புரிதல் அமைந்தாலும் மனிதனுக்கு, இயற்கை அறிவுடன் செயற்கை அறிவு குறித்த தேடலும் இருந்தது. இத்தேடலே இவ்வுலகில் எல்லா உயிர்களையும், வளங்களையும் மனிதனே ஆட்சி செய்யத் துணைநின்றது. பல்வேறு நாடுகளிலும், பல்வேறு மொழிகளிலும் இதுவரை நடைபெற்ற அறிவு குறித்த ஆய்வின் பயனாக, பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பாக மெய்ப்பொருளியல் அமைகிறது. அம்மெய்ப்பொருளியலின் ஒரு கூறாக விளங்குவது அறிவாய்வியல். அவ்வறிவாய்விலின் ஒரு பிரிவாக அமையும் அறிவின் வாயில்கள் பற்றிய சிந்தனைகளைப் புறநானூற்றின் வழி எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகிறது.