வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 28 பிப்ரவரி, 2009

கூகுள் தருகிறது....



கூகுள் இணையத்தைப் பார்க்கும் போது எல்லோருக்கும் அதைப் போல ஒரு தளத்தை உருவாக்க ஆசை தோன்றும்.அந்த ஆசையை கூகுள் இணையதளமே தீர்த்துவைக்கிறது. ஆம் http://googlemyway.com///

இம்முகவரிக்குச் சென்று நமக்கு விருப்பமான பெயரை இட்டால் அப்பெயர் கூகுள் இணையப்பக்கம் போலத் தோன்றுகிறது.இதை நாம் நம் தொடக்கப் பக்கமாகவும் வைத்துக் கொள்ளமுடியும்.இப்பக்கத்திலேயே சென்று நமக்குத் தேவையான தரவுகளையும் தேடிக்கொள்ளமுடியும்.

சனி, 21 பிப்ரவரி, 2009

இணையத்தில் தமிழ்

முச்சங்கம் வைத்ததும் மூன்று தமிழ் வளர்த்ததும் நம் நேற்றாக இருந்தது.மின் வெளியில் வலைமொழியில் சங்கம் வைத்து தமி்ழ் வளர்ப்பது நம் இன்றாக உள்ளது.யாதும் ஊராக யாவரும் கேளிராக உலகு பரவி வாழும் தமிழர்களை இணையவழி தமிழ் மொழியால் இணைப்பது நம் நாளையாக இருக்க வேண்டும்.தமிழர் தம்முள் இணைவதால் நம் தொன்மை,கலை,இலக்கியம்,பண்பாடு ஆகியன காக்கப்படுவதோடு உலகோர் நம் மொழியின் சிறப்பை அறிந்துகொள்ள அது அடிப்படையான ஒன்றாகவும் அமைகிறது.
இணையம் இன்று இனம், மொழி, மதம், நாடு எனப் பல்வேறு எல்லைகளையும் கடந்து மனிதர்களை இணைக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக விளங்கி வருகிறது.இவ்வூடகத்தில் தமிழ் கடந்து வந்த பாதையைப் பின்னோக்கிப் பார்த்து அசைபோட்டு இன்றைய சூழலைச் சீர் தூக்கிப் பார்த்து நாளைய தேவையை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.
இணையத்தமிழ் நேற்று
 இணையத்தில் எழுத்துரு(Font) மிகப்பெரிய சிக்கலாக
இருந்தது.ஒவ்வொரு இணையதளங்களும் ஒவ்வொரு எழுத்துருக்களைப் பயன்படுத்தி வந்தன.அதனால் தமிழக அரசு (Tam,Tab)பொதுவான எழுத்துருக்களை அறிமுகப்படுத்தியது.
 தமிழ் மென்பொருள்கள குறைவான அளவிலேயே கண்டறியப்பட்டன.
 தமிழ் இணையதளம் தொடங்குவது,பராமரிப்பது எனும் இருநிலைகளிலும் தமிழர்கள் பின்தங்கியிருந்தனர்.அதற்கு கணிணி குறித்த ஆழ்ந்த அறிவும், பணவசதியும் அடிப்படையாக இருந்தன.
 இணையத்தில் தமிழ் நூல்கள்,தமிழ் ஒலி,ஒளிக் கோப்புகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தன.அவற்றை இலவசமாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளும் குறைவாகவே இருந்தன.
 தேவையான தரவுகளைத் தமிழ் வழியே தேட தமிழ்த் தேடு எந்திரங்கள் போதுமானதாக இல்லை.
 தமிழ்க்கல்வி போதிக்கும் இணையதளங்கள் குறைவாகவே இருந்தன.
 புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுள் புதிய தலைமுறையினர் தமிழ் மொழியை ஒலி வடிவில் மட்டுமே புரிந்து கொள்பவர்களாகவும் எழுத்து வடிவங்களைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாகவும் இருந்தனர்.அவர்களின் தேவையை நிறைவு செய்ய இயலாததாக நேற்றைய இணையம் இருந்தது.

இணையத்தமிழ் இன்று

 தமிழ் தொடர்பான தரவுகளைத் தமிழ் வழியே தேடும் வசதியை கூகுள் உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களும் வழங்குகின்றன.http://jaffnalibrary.com//" தமிழ் எழுத்துருச் சிக்கலுக்கு நாம் கண்ட வழிமுறைகளுள் பிடிஎப்,யுனிகோடு ஆகிய இரண்டும் தனிச்சிறப்புடையன.
பிடிஎப்
1.பிடிஎப் என்பது எழுத்துருச் சிக்கலின்றி எல்லா இயங்குதளங்களிலும் எழுத்துருக்கள் தெரிய பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகும்.அடாப் ரீடர் எனும் மென்பொருள் மட்டுமே இதன் தேவைகளுன் குறிப்பிடத்தக்கதாகும்.இன்று பிடிஎப் கன்வெர்ட்டர்கள் பல இணையதளங்களில் இலவசமாகக் கி்டைக்கின்றன.
2.யுனிகோடு (ஒருங்குறி)
ஒருங்குறி என்பது கணிணிகளுக்கு இடையிலான எழுத்துருக்களுக்கான பொதுவான குறியீட்டு முறை. மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இக்குறியீட்டு முறையை ஆதரிப்பதால் இன்று எழுத்துருக்களுக்கான சிக்கல் ஓரளவிற்கு முடிவுக்கு வந்துள்ளது.பெரும்பாலானோர் எவ்விதமான தடையுமின்றி இணையத்தில் தமிழ் எழுதவும் படிக்கவும் பெரும் வாய்ப்பாக யுனிகோடு அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.இன்று வெவ்வேறு எழுத்துருக்களில் இயங்கி வந்த பல இணையதளங்களும் யுனிகோடு முறைக்கு மாறி வருவது குறிப்பிடத்தக்கது.
எழுத்துருமாற்றிகள்
பல்வேறு எழுத்துருக்களை யுனிகோடு முறைக்கும் யுனிகோடு முறையிலுள்ள எழுத்துருக்களை நமக்குத் தேவையான எழுத்துருக்களுக்கும் மாற்றித் தர பல இணையதளங்கள் உள்ளன.அவற்றுள் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது. cc  தமிழ் மென்பொருள்கள் மிகுதியான அளவில் கண்டறியப்பட்டு பயன்பாட்டில் வந்துள்ளன.சான்றாக .http://girgit.chitthajagat.in//"
இவ்விணையதளம் பிறமொழி் இணையதளத்தையோ,வலைப்பதிவையோ நாம் படிக்க விரும்பும் மொழிக்கு மாற்றித்தருகிறது.
 இணையம் வாயிலாக பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்களைப் பெறமுடிகிறது..http://tamilnool.com//" அதனால் ஒரு நூல் இணையத்தில் பதிவு செய்யப்பட்டவுடனேயே பரவலாக அனைவரும் அறி்ந்துகொள்ளமுடிகிறது.
இணைய வலைப்பதிவுகள்
 இணையதளங்களால் இன்று இலவசமாக வழங்கப்படும் வலைப்பதிவுகள் மிகப் பெரிய தகவல்த் தொடர்பு ஊடகங்களாக உருவெடுத்துள்ளன.
 எழுத்துத் திறமையை வளர்த்துக் கொள்ளவும்,கருத்துப்பரிமாற்றத்துக்கும் இவை பயனுள்ளவையாக உள்ளன.
 இணையத்தில் இன்று ஒரு செய்தி்யத் தேடினால் வலைப்பதிவுகளின் செய்திகளே மிகுந்து காணப்படுகின்றன.இது வலைப்பதிவுகளின் ஆதிக்கத்தைக் காட்டுவதாக உள்ளது.
 இணையம் தொடர்பான அடிப்படை அறிவு உள்ளவர்கள் கூட ஐந்து நிமிடங்களில் ஒரு வலைப்பதிவைத் தொடங்கிவிடமுடியும்.
வலைப்பதிவுத் திரட்டிகள் ..http://tamilveli.com//"
பல இணையதளங்களும் இவ்வலைப்பதிவுகளை உடனுக்குடன் திரட்டித் தருகின்றன.இதனால உலகளவில் வலைப்பதிவுகள் அனைவரின் பார்வைக்கும் வரும் வாய்ப்பு ஏற்படுகிறது.

வலைப்பதிவுகளின் இரு நிலை1.இலக்கியம்,அரசியல்,கருத்துப்பரிமாற்றம்,விவாதம்,
கருத்துக்கணிப்பு,வரலாறு,பண்பாடு,பொழுதுபோக்கு ஆகிய கூறுகளைக் கொண்டவை முதல் வகை வலைப்பதிவுகளாகும்,
2.புகைப்படம், ஒலி,ஒளி கோப்புகள் வழிக் கருத்துப்புலப்பாட்டு நெறியைக் கொண்டு விளங்குவன இரண்டாம் வகை வலைப்பதிவுகளாகும்.
பாட்காஸ்டிங்
Broadcasting,Telecasting போல இதுவும் ஒரு வகையான ஒலிபரப்புச் சேவையாகும். (podcasting)இணையத்தின் வாயிலாகக் கருத்துக்களை பதிவு செய்து வைத்தல் இதன் தலையான பணியாகும்.இன்று படிப்போர் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் பாட்காஸ்டிங் சேவையால் நாம் விரும்பும் நேரத்தில் படித்துக் கொள்ள இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இதற்குச் சான்றாக .http://vetripadigal.blogspot.com//"
தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சியைப் பாட்காஸ்டிங்காகத் தரஇயலும்.அதனை நாம் விரும்பிய நேரத்தில் பதிவிறக்கிக் கேட்டுக்கொள்ளலாம்.இணையதளங்களும் வலைப்பதிவுகளும் இன்று இம்முறைக்கே மாறிவருகின்றன.

வலைப்பதிவுகளின் வளர்ச்சி
வலைப்பதிவுகளின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.இன்றைய சூழலில் முழுநேர வலைப்பதிவர்கள் பலரையும் காணமுடிகிறது. வலைப்பதிவுகளில் விளம்பரங்கள் வாயிலாகக் கி்டைக்கும் வருமானமே இதற்குக் காரணமாகும்.ஆட்சீன் உள்ளிட்ட பல அமைப்புகள் வலைப்பதிவு விளம்பரங்களை ஊக்குவித்து வருகின்றன.
இணையத்தில் தமிழ்பதிவுகள் http://www.chennailibrary.com//" http://noolaham.net//"பல இணையதளங்களும் தமிழ் நூல்களை மின்னூல் வடிவில் பதிவு செய்துள்ளன.இவற்றை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பாகவுள்ளது.சான்றாக நூலகம் என்ற இணையதளம் 2000 நூல்களைக் கொண்டு விளங்குகிறது.தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழ் நூல்கள் பலவற்றை நூலகம் என்னும் பகுதியில் உரையோடு பதிவு செய்து இற்றைப்படுத்தி வருகிறது.இணையம் வாயிலாகக் கல்வி வழங்குவதிலும் இத்தளம் சிறந்து விளங்குகிறது.


தமிழ் ஒலிக்கோப்புகள்
http://pkp.in/mydrive/index.php?dir=//" http://ravidreams.net/library//"
பல இணையதளங்கள் ஒலி, ஒளிக்கோப்புகளை பதிவு செய்துள்ளன. இவற்றில் திருக்குறள், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் குரல்வடிவம், வைரமுத்து, திருவாசகம், குழந்தைக் கதைகள் மற்றும் பாடல்கள், போன்ற பலவற்றையும் காணமுடிகிறது.CIIL எனப்படும் செம்மொழி ஆய்வு நிறுவனம் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களை ஓதல் முறையில் ஒலி வடிவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளது.

இணையத்தமிழ் நாளை
 இணையத்தில் தமிழ் எழுதுவதும் படிபதும் குறையும்.மாறாக ஒலி, ஒளிக் கோப்புகள் வழி இணையம் இன்னொரு ஒலி, ஒளி ஊடகமாக மாற்றமடையும்.
 இணையதளங்களைவிட வலைப்பதிவுகள் மிகுதியான வழக்கில் வரும்.
 இணையத்தில் தமிழ் எழுதுவதிலோ, படிப்பதிலோ சிக்கல் ஏதுமிருக்காது.
 உலகமொழிகள் யாவும் சில குறியீடுகளுக்குள் அடங்கிப்போகும்.அதனால் தமிழ் மொழியின் எழுத்துருச்சிக்கலும் முடிவுக்குவரும்.

 (E.books)மின்னூல் வடிவில் தமிழ்ப் பயன்பாடு அதிகரிக்கும். இணையத்தில் அதிகமான மின்னூலகங்கள் தோன்றும் இலவசமாகப் பதிவிறக்கிப் பயன் படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.

 (Sony E book Reader) மின்னூல்களைப் படிக்க கையடக்கமான கருவிகள் பயன்பாட்டில் வரும்.

 .http://thinnai.info// செல்லிடப் பேசிகளிலேயே மின்னூல்களைப் பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ள பல இணையதளங்கள் துணைசெய்யும்.

 எம்பி3 வடிவிலான தமிழ் கோப்புகளை பல இணையதளங்கள் வழங்கும்.சான்றாக http://itsdiff// இவ்விணையதளம் வானொலியில் இடம்பெற்ற பல ஒலிக் கோப்புகளை வழங்குகிறது.


முடிவுரை இணையத்தில் நேற்றும்,இன்றும் பெற்ற அனுபவங்களையும், வளர்ச்சியையும் கொண்டு நாம் நாளை செய்ய வேண்டியன.................
 தமிழ் மென்பொருள்கள் மேலும் கண்டறியப்பட வேண்டும்.அரசு அதனை ஊக்குவிக்க வேண்டும்.
 பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழி ஆய்வு நிறுவனம் இணையம் தொடர்பான தேவைகளைக் கருத்தில் கொண்டு நிதிநல்கை செய்தல் வேண்டும்
 உலகு பரவி வாழும் தமிழர்கள் தம்முள் தொடர்பு கொள்ள மொழிச்சிக்கல் எழுத்து வடிவிலோ ஒலி வடிவிலோ உள்ளதா என ஆய்வு செய்து நீக்க வேண்டும்
 தமிழ் மொழியின் சிறப்புகளை உலகத்தால் அறிந்து கொள்ளவும் உலக மொழிகளில் உள்ள அறிவுச் செல்வங்களை தமிழ் மொழியில் உணர்ந்து கொள்ளவும் வகை செய்யவேண்டும்.
 தமிழ் ஆய்வு செய்வோருக்குத் தேவையான தரவுகள் யாவும் இணையத்தில் கிடைக்கும் வகை செய்தல் வேண்டும்.
 இன்றைய சூழலில் இணையத்தைப் பயன்படுத்த ஆங்கில அறிவோ இணையம் குறித்த மிகுதியான அறிவோ தேவையில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.இதனைப் பயன்படுத்தி நம் கருத்துக்களை நம் தாய்மொழியான தமிழில் வெளியிடுவது நம் தலையான கடமையாகும்.இதுவே நாம் நம் எதிர்காலத் தலைமுறையினருக்குச் சேர்த்து வைக்கும் செல்வமாகும்.

வியாழன், 5 பிப்ரவரி, 2009

கணினி மற்றும் இணையத்தமிழ்

கணினி மற்றும் இணையத்தமிழ் என்னும் தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம் 27,28.02.2009ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பதிவுக்கட்டணம் ஆய்வாளர்க்ளுக்கு 100 விரிவுரையாளார்களுக்கு 200.ஆகும்.கட்டுரை16.02.2009தேதிக்குள் அனுப்பவேண்டும்.

புதன், 4 பிப்ரவரி, 2009

சங்கப் புலவர் அகரவரிசை

சங்க இலக்கியம் குறித்த பல நுண்ணாய்வுச் செய்திகளை இவ்வலைப்பகுதியில் தரவுள்ளேன்.
இதுவரை வேறு தளங்களில் இல்லாத பல செய்திகளும் சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்வோர் பயன்பெறுவதற்காக இம்முயற்சி மேற்கொண்டுள்ளேன்.
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே புலவர்களின் பெயர்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளளது.எனினும் இப்பெயர்கள் நூல்களின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளதால் 473 புலவர்களின் பெயர்களையும் தொகுப்பாகக் காண இயலவில்லை.அதனால் நான் இப்பெயர்களை அகர வரிசையில் அளித்துள்ளேன்.

பெயர் என்பது ஒரு இனத்தின்,மொழியின்,பண்பாட்டின் அடையாளமாகும்.
சங்கப்புலவர்களின் பெயர்களைக் காணும் போது சங்க கால மக்களின் பண்பாடு,வாழ்க்கைமுறை ஆகியனவும் அறியமுடிகிறது.
இன்று நாம் இட்டுவரும் பெயர்கள் நம்மை தமிழர்களாகக் காட்டாது தமிங்கிலராகவே காட்டுகிறது.இந்நிலையில் சங்கப்புலவர்களின் பெயர்களை அறிந்து கொள்வது தேவையாகிறது.பலர் இப்பெயர்களை தம் குழந்தைகளுக்கு இடுவது சிறப்பகும்.



சங்கப் புலவர் அகரவரிசை



1) அகம்பன் மாலாதனார்
2) அஞ்சியத்தை மகள் நாகையார்
3) அஞ்சில் அஞ்சியார்
4) அஞ்சில் ஆந்தையார்
5) அடைநெடுங்கல்வியார்
6) அணிலாடு முன்றிலார்
7) அண்டர் மகன் குறுவழுதியார்
8) அதியன் விண்ணத்தனார்
9) அதி இளங்கீரனார்
10) அம்மூவனார்
11) அம்மெய்நாகனார்
12) அரிசில் கிழார்
13) அல்லங்கீரனார்
14) அழிசி நச்சாத்தனார்
15) அள்ளூர் நன்முல்லையார்
16) அறிவுடைநம்பி
17) ஆரியன் பெருங்கண்ணன்
18) ஆடுதுறை மாசாத்தனார்
19) ஆதிமந்தி
20) ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்
21) ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
22) ஆலங்குடி வங்கனார்
23) ஆலத்தூர் கிழார்
24) ஆலம்பேரி சாத்தனார்
25) ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
26) ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
27) ஆவூர்கிழார்
28) ஆலியார்
29) ஆவூர் மூலங்கீரனார்
30) இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
31) இடைக்காடனார்
32) இடைக்குன்றூர்கிழார்
33) இடையன் சேந்தன் கொற்றனார்
34) இடையன் நெடுங்கீரனார்
35) இம்மென்கீரனார்
36) இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
37) இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
38) இருந்தையூர்க் கொற்றன் புலவன்
39) இரும்பிடர்தலையார்
40) இளங்கீரந்தையார்
41) இளங்கீரனார்
42) இளநாகனார்
43) இளந்திரையன்
44) இளந்தேவனார்
45) இளம்புல்லூர்க் காவிதி
46) இளம்பூதனார்
47) இளம்பெருவழுதி
48) இளம்போதியார்
49) இளவெயினனார்
50) இறங்குடிக் குன்றநாடன்
51) இறையனார்
52) இனிசந்த நாகனார்
53) ஈழத்துப் பூதந்தேவனார்
54) உகாய்க் குடிகிழார்
55) உக்கிரப் பெருவழுதி
56) உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
57) உம்பற்காட்டு இளங்கண்ணனார்
58) உருத்திரனார்
59) உலோச்சனார்
60) உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
61) உழுந்தினைம் புலவர்
62) உறையனார்
63) உறையூர் இளம்பொன் வாணிகனார்
64) உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
65) உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
66) உறையூர்ச் சல்லியங் குமரனார்
67) உறையூர்ச் சிறுகந்தனார்
68) உறையூர்ப் பல்காயனார்
69) உறையூர் மருத்துவன் தாமோதரனார்
70) உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
71) ஊட்டியார்
72) ஊண்பித்தை
73) ஊண்பொதி பசுங்குடையார்
74) எயிற்றியனார்
75) எயினந்தையார்
76) எருமை வெளியனார்
77) எருமை வெளியனார் மகனார் கடலனார்
78) எழூப்பன்றி நாகன் குமரனார்
79) ஐயாதி சிறு வெண்ரையார்
80) ஐயூர் முடவனார்
81) ஐயூர் மூலங்கீரனார்
82) ஒக்கூர் மாசாத்தனார்
83) ஒக்கூர் மாசாத்தியார்
84) ஒருசிறைப் பெரியனார்
85) ஒரூத்தனார்
86) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
87) ஓதஞானி
88) ஓதலாந்தையார்
89) ஓரம்போகியார்
90) ஓரிற்பிச்சையார்
91) ஓரேர் உழவர்
92) ஔவையார்
93) கங்குல் வெள்ளத்தார்
94) கச்சிப்பேடு இளந்தச்சன்
95) கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
96) கச்சிப்பேடு பெருந்தச்சனார்
97) கடம்பனூர்ச் சாண்டில்யன்
98) கடலூர்ப் பல்கண்ணனார்
99) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
100) கடுந்தொடைக் காவினார்
101) கடுந்தொடைக் கரவீரன்
102) கடுவன் இளமள்ளனார்
103) கடுவன் இளவெயினனார்
104) கடுவன் மள்ளனார்
105) கணக்காயன் தத்தனார்
106) கணியன் பூங்குன்றனார்
107) கண்ணகனார்
108) கண்ணகாரன் கொற்றனார்
109) கண்ணங்கொற்றனார்
110) கண்ணம் புல்லனார்
111) கண்ணனார்
112) கதக்கண்ணனார்
113) கதப்பிள்ளையார்
114) கந்தரத்தனார்
115) கபிலர்
116) கயத்தூர்கிழார்
117) கயமனார்
118) கருங்குழலாதனார்
119) கரும்பிள்ளைப் பூதனார்
120) கருவூர்க்கிழார்
121) கருவூர் கண்ணம்பாளனார்
122) கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
123) கருவூர் கலிங்கத்தார்
124) கருவூர் கோசனார்
125) கருவூர் சேரமான் சாத்தன்
126) கருவூர் நன்மார்பனார்
127) கருவூர் பவுத்திரனார்
128) கருவூர் பூதஞ்சாத்தனார்
129) கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
130) கல்பொருசிறுநுரையார்
131) கல்லாடனார்
132) கவைமகன்
133) கழாத்தலையார்
134) கழார்க் கீரனெயிற்றியனார்
135) கழார்க் கீரனெயிற்றியார்
136) கழைதின் யானையார்
137) கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
138) கள்ளில் ஆத்திரையனார்
139) காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
140) காசிபன் கீரன்
141) காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
142) காப்பியஞ்சேந்தனார்
143) காப்பியாற்றுக் காப்பியனார்
144) காமஞ்சேர் குளத்தார்
145) காரிக்கிழார்
146) காலெறி கடிகையார்
147) காவட்டனார்
148) காவற்பெண்டு
149) காவன்முல்லையார்
150) காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
151) காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
152) காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
153) காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
154) காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார்
நப்பூதனார்
155) கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
156) கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
157) கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
158) கிள்ளிமங்கலங்கிழார்
159) கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
160) கீரங்கீரனார்
161) கீரந்தையார்
162) குடபுலவியனார்
163) குடவாயிற் கீரத்தனார்
164) குட்டுவன் கண்ணனார்
165) குட்டுவன் கீரனார்
166) குண்டுகட் பாலியாதனார்
167) குதிரைத் தறியனார்
168) குப்பைக் கோழியார்
169) குமட்டூர் கண்ணனார்
170) குமுழிஞாழலார் நப்பசலையார்
171) குழற்றத்தனார்
172) குளம்பனார்
173) குளம்பாதாயனார்
174) குறமகள் இளவெயினி
175) குறமகள் குறியெயினி
176) குறியிறையார்
177) குறுங்கீரனார்
178) குறுங்குடி மருதனார்
179) குறுங்கோழியூர் கிழார்
180) குன்றம் பூதனார்
181) குன்றியனார்
182) குன்றூர்க் கிழார் மகனார்
183) கூகைக் கோழியார்
184) கூடலூர்க் கிழார்
185) கூடலூர்ப பல்கண்ணனார்
186) கூவன்மைந்தன்
187) கூற்றங்குமரனார்
188) கேசவனார்
189) கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
190) கொட்டம்பலவனார்
191) கொல்லன் அழிசி
192) கொல்லிக் கண்ணன்
193) கொள்ளம்பக்கனார்
194) கொற்றங்கொற்றனார்
195) கோக்குளமுற்றனார்
196) கோடைபாடிய பெரும்பூதன்
197) கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
198) கோட்டியூர் நல்லந்தையார்
199) கோண்மா நெடுங்கோட்டனார்
200) கோப்பெருஞ்சோழன்
201) கோவர்த்தனர்
202) கோவூர்க் கிழார்
203) கோவேங்கைப் பெருங்கதவனார்
204) கோழிக் கொற்றனார்
205) கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
206) கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
207) சங்கவருணர் என்னும் நாகரியர்
208) சத்திநாதனார்
209) சல்லியங்குமரனார்
210) சாகலாசனார்
211) சாத்தந்தந்தையார்
212) சாத்தனார்
213) சிறுமோலிகனார்
214) சிறுவெண்டேரையார்
215) சிறைக்குடி ஆந்தையார்
216) சீத்தலைச் சாத்தனார்
217) செங்கண்ணனார்
218) செம்பியனார்
219) செம்புலப்பெயல்நீரார்
220) செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
221) செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
222) செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
223) செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
224) சேந்தங்கண்ணனார்
225) சேந்தம்பூதனார்
226) சேந்தங்கீரனார்
227) சேரமானெந்தை
228) சேரமான் இளங்குட்டுவன்
229) சேரமான் கணைக்கால் இரும்பொறை
230) சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
231) சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
232) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
233) சோழன் நலங்கிள்ளி
234) சோழன் நல்லுருத்திரன்
235) தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
236) தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
237) தனிமகனார்
238) தாமாப்பல் கண்ணனார்
239) தாமோதரனார்
240) தாயங்கண்ணனார்
241) தாயங்கண்ணியார்
242) திப்புத்தோளார்
243) திருத்தாமனார்
244) தீன்மதிநாகனார்
245) தும்பிசேர்கீரனார்
246) துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
247) துறையூர்ஓடைக்கிழார்
248) தூங்கலோரியார்
249) தேய்புரி பழங்கயிற்றினார்
250) தேரதரன்
251) தேவகுலத்தார்
252) தேவனார்
253) தொடித்தலை விழுத்தண்டினர்
254) தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
255) தொல்கபிலர்
256) நக்கண்ணையார்
257) நக்கீரர்
258) நப்பசலையார்
259) நப்பண்ணனார்
260) நப்பாலத்தனார்
261) நம்பிகுட்டுவன்
262) நரிவெரூத்தலையார்
263) நரைமுடி நெட்டையார்
264) நல்லச்சுதனார்
265) நல்லந்துவனார்
266) நல்லழிசியார்
267) நல்லாவூர்க் கிழார்
268) நல்லிறையனார்
269) நல்லுருத்திரனார்
270) நல்லூர்ச் சிறுமேதாவியார்
271) நல்லெழுநியார்
272) நல்வழுதியார்
273) நல்விளக்கனார்
274) நல்வெள்ளியார்
275) நல்வேட்டனார்
276) நற்சேந்தனார்
277) நற்றங்கொற்றனார்
278) நற்றமனார்
279) நன்பலூர்ச் சிறுமேதாவியார்
280) நன்னாகனார்
281) நன்னாகையார்
282) நாகம்போத்தன்
283) நாமலார் மகன் இளங்கண்ணன்
284) நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
285) நெடுங்கழுத்துப் பரணர்
286) நெடும்பல்லியத்தனார்
287) நெடும்பல்லியத்தை
288) நெடுவெண்ணிலவினார்
289) நெட்டிமையார்
290) நெய்தற் கார்க்கியார்
291) நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
292) நெய்தற்றத்தனார்
293) நொச்சி நியமங்கிழார்
294) நோய்பாடியார்
295) பக்குடுக்கை நன்கணியார்
296) படுமரத்து மோசிகீரனார்
297) படுமரத்து மோசிக்கொற்றனார்
298) பதடிவைகலார்
299) பதுமனார்
300) பரணர்
301) பராயனார்
302) பரூஉமோவாய்ப் பதுமனார்
303) பறநாட்டுப் பெருங்கொற்றனார்
304) பனம்பாரனார்
305) பாண்டரங்கண்ணனார்
306) பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
307) பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
308) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்
309) பாண்டியன் பன்னாடு தந்தான்
310) பாண்டியன் மாறன் வழுதி
311) பாரதம் பாடிய பெருந்தேவனார்
312) பாரிமகளிர்
313) பார்காப்பான்
314) பாலைக் கௌதமனார்
315) பாலை பாடிய பெருங்கடுங்கோ
316) பாவைக் கொட்டிலார்
317) பிசிராந்தையார்
318) பிரமசாரி
319) பிரமனார்
320) பிரான் சாத்தனார்
321) புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
322) புல்லாற்றூர் எயிற்றியனார்
323) பூங்கணுத் திரையார்
324) பூங்கண்ணன்
325) பூதங்கண்ணனார்
326) பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
327) பூதம்புல்லனார்
328) பூதனார்
329) பூதந்தேவனார்
330) பெருங்கண்ணனார்
331) பெருங்குன்றூர்க் கிழார்
332) பெருங்கௌசிகனார்
333) பெருஞ்சாத்தனார்
334) பெருஞ்சித்திரனார்
335) பெருந்தலைச்சாத்தனார்
336) பெருந்தேவனார்
337) பெருந்தோட் குறுஞ்சாத்தன்
338) பெரும் பதுமனார்
339) பெரும்பாக்கன்
340) பெருவழுதி
341) பேயனார்
342) பேய்மகள் இளவெயினி
343) பேராலவாயர்
344) பேரிசாத்தனார்
345) பேரெயின்முறுவலார்
346) பொதுக்கயத்துக் கீரந்தை
347) பொதும்பில் கிழார்
348) பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
349) பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
350) பொத்தியார்
351) பொய்கையார்
352) பொருந்தில் இளங்கீரனார்
353) பொன்மணியார்
354) பொன்முடியார்
355) பொன்னாகன்
356) போதனார்
357) போந்தைப் பசலையார்
358) மடல் பாடிய மாதங்கீரனார்
359) மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
360) மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
361) மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
362) மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
363) மதுரை இனங்கௌசிகனார்
364) மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
365) மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
366) மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
367) மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
368) மதுரைக் கணக்காயனார்
369) மதுரைக் கண்டராதித்தனார்
370) மதுரைக் கண்ணத்தனார்
371) மதுரைக் கவுணியன் பூதத்தனார்
372) மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
373) மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
374) மதுரைக் காருலவியங் கூத்தனார்
375) மதுரைக் கூத்தனார்
376) மதுரைக் கொல்லன் புல்லன்
377) மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
378) மதுரைச் சுள்ளம் போதனார்
379) மதுரைத் தத்தங்கண்ணனார்
380) மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
381) மதுரைத் தமிழக் கூத்தனார்
382) மதுரைப் படைமங்க மன்னியார்
383) மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
384) மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
385) மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
386) மதுரைப் புல்லங்கண்ணனார்
387) மதுரைப் பூதனிள நாகனார்
388) மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
389) மதுரைப் பெருங்கொல்லன்
390) மதுரைப் பெருமருதனார்
391) மதுரைப் பெருமருதிளநாகனார்
392) மதுரைப் போத்தனார்
393) மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
394) மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
395) மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
396) மதுரை வேளாசன்
397) மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
398) மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
399) மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
400) மருதம் பாடிய இளங்கடுங்கோ
401) மருதனிளநாகனார்
402) மலையனார்
403) மள்ளனார்
404) மாங்குடிமருதனார்
405) மாடலூர் கிழார்
406) மாதீர்த்தன்
407) மாமிலாடன்
408) மாமூலனார்
409) மாயேண்டன்
410) மார்க்கண்டேயனார்
411) மாலைமாறன்
412) மாவளத்தன்
413) மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
414) மாறோக்கத்து நப்பசலையார்
415) மாற்பித்தியார்
416) மிளைக் கந்தன்
417) மிளைப் பெருங்கந்தன்
418) மிளைவேள் பித்தன்
419) மீனெறி தூண்டிலார்
420) முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
421) முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
422) முடத்தாமக்கண்ணியார்
423) முடத்திருமாறன்
424) முதுகூத்தனார்
425) முதுவெங்கண்ணனார்
426) முப்பேர் நாகனார்
427) முரஞ்சியயூர் முடிநாகராயர்
428) முள்ளியூர்ப் பூதியார்
429) முலங்கீரனார்
430) மையோடக் கோவனார்
431) மோசிக்கண்ணத்தனார்
432) மோசிக்கீரனார்
433) மோசிக்கொற்றன்
434) மோசிக்கரையனார்
435) மோசிசாத்தனார்
436) மோசிதாசனார்
437) வடநெடுந்தத்தனார்
438) வடவண்ணக்கன் தாமோதரன்
439) வடமோதங்கிழார்
440) வருமுலையாரித்தி
441) வன்பரணர்
442) வண்ணக்கன் சோருமருங்குமரனார்
443) வண்ணப்புறக் கந்தரத்தனார்
444) வாடாப்பிராந்தன்
445) வாயிலான் தேவன்
446) வாயிலிலங்கண்ணன்
447) வான்மீகியார்
448) விட்டகுதிரையார்
449) விரிச்சியூர் நன்னாகனார்
450) விரியூர் நன்னாகனார்
451) வில்லக விரலினார்
452) விழிகட்பேதை பெருங்கண்ணனார்
453) விற்றூற்று மூதெயினனார்
454) விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
455) வினைத் தொழில் சோகீரனார்
456) வீரை வெளியனார்
457) வீரை வெளியன் தித்தனார்
458) வெண்கண்ணனார்
459) வெண்கொற்றன்
460) வெண்ணிக் குயத்தியார்
461) வெண்பூதன்
462) வெண்பூதியார்
463) வெண்மணிப்பூதி
464) வெள்ளாடியனார்
465) வெள்ளியந்தின்னனார்
466) வெள்ளிவீதியார்
467) வெள்வெருக்கிலையார்
468) வெள்ளைக்குடி நாகனார்
469) வெள்ளைமாளர்
470) வெறிபாடிய காமக்கண்ணியார்
471) வேட்டகண்ணன்
472) வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
473) வேம்பற்றுக் குமரன்

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்

1) அஞ்சியத்தை மகள் நாகையார்
2) அஞ்சில் அஞ்சியார்
3) ஆதிமந்தி
4) ஊண்பித்தை
5) ஒக்கூர் மாசாத்தியார்
6) ஔவையார்
7) காக்கைப் பாடினி நச்செள்ளையார்
8) கழார்க் கீரனெயிற்றியார்
9) காமக்கண்ணியார்
10) காவற்பெண்டு
11) குமிழிஞாழலார் நப்பசலையார்
12) குறமகள் இளவெயினி
13) குறமகள் குறியெயினி
14) தாயங்கண்ணனார்
15) நக்கன்னையார்
16) நப்பசலையார்
17) நன்னாகையார்
18) நெடும்பல்லியத்தை
19) பாரிமகளிர்
20) பூங்கணுத்திரையார்
21) பூதப்பாண்டியன் தேவி பெருங்கோ்பபெண்டு
22) பேய்மகள் இளவெயினி
23) போந்தைப் பசலையார்
24) மாற்பித்தியார்
25) மாறோகத்து நப்பசலையார்
26) வருமுலையாரித்தி
27) வெண்குயத்தியார்
28) வெண்பூதியார்
29) வெண்மணிப்பூதி
30) வெள்ளி வீதியார்.