வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


சனி, 31 டிசம்பர், 2022

நெய்தல் கார்க்கியார்

 



சங்க இலக்கியத்தில் தலைவனின் பிரிவு தாங்காமல் வருந்தும் தலைவியின் மனநிலையைப் பாடுவன நெய்தல் பாடல்கள் ஆகும்.இவ்வுணர்வை இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என உரைப்பர்.

நெய்தலின் முதல், கரு, உரி ஆகிய முப்பொருளும் சிறப்பாகப் பாடப்பட்டமையால் இப்புலவர் நெய்தல் கார்க்கியார் என்ற பெயர் பெற்றார்.

இன்று பிரிவு என்ற சொல் பெரிதும் பொருளற்றதாகிவிட்டது. 

போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புகள் பிரிவின் இடைவெளிகளைக் குறைத்துவிட்டன.

செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை (குறள் – 1151) என்ற வள்ளுவரின் குறள் இங்கு நோக்கத்தக்கது.

குறுந்தொகையில் களவுக்காலத்தை நீட்டிக்கும் தலைவனிடம் அவன் தலைவியை விரைந்து திருமணம்செய்து கொள்ளாவிட்டால் இவள் இறந்துவிடுவாள் என்று அவள் தோழி நாகரிகமாக உரைக்கிறாள்.

வெள்ளி, 30 டிசம்பர், 2022

அம்பல் ஊர்


நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க...

ஊர் என்ன பேசும்..

அடுத்தவங்க என்ன நினைப்பாங்க...

உலை வாய மூடலாம் ஊர்வாய மூடமுடியுமா..

கிசுகிசு பேசுதல்

என்றெல்லாம் காலந்தோறும் அடுத்தவர்களைப் பற்றிப் பேசுவது குறித்து அறிவோம்..

அன்று கிணற்றடி, குளத்தங்கரை, ஆற்றங்கரைகளில் பேசப்பட்ட ஊர்க்கதைகள் இன்று சமூகத்தளங்களில் பேசப்படுகின்றன.

அடுத்தவர்களைப் பற்றி அதிகம் பேசுவது ஆண்களா? பெண்களா? என்றால் இருவரும்தான்..

இருந்தாலும் ஆண்களைவிடப் பெண்களே அதிகமாக அடுத்தவர்களைப் பற்றிப் பேசுவார்கள் என்பதைச் சங்கப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

வியாழன், 27 அக்டோபர், 2022

ரோமியோ ஜூலியட் - புரட்சிக்கவி - கொடிமுல்லை ஒப்பீடு

 

ரோமியோ ஜூலியட் - புரட்சிக்கவி - கொடிமுல்லை ஒப்பீடு

சேக்சுபியர், பாரதிதாசன், வாணிதாசன் ஆகியோர் படைப்புகளை ஆராய்ந்து காதலில் வீரமும், வீரத்தில் காதலும் இருப்பதாக இக்கட்டுரை சான்றுகளுடன் இயம்புகிறது.

காதலும் வீரமும் தமிழரின் இருகண்கள். காதலில் வீரமும், வீரத்தில் காதலும் நுட்பமான உள்ளீடுகளாக உள்ளன, மொழி எல்லைகளைக் கடந்து இவ்வுணர்வுகள் இலக்கியங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. வில்லியம் சேக்சுபியரின், ரோமியோ ஜூலியட், பாவேந்தர் பாரதிதாசனின் புரட்சிக்கவி, வாணிதாசனின் கொடிமுல்லை ஆகிய படைப்புகளில் காதல் அடிக்கருத்தியலாக இருந்தாலும் காதலில் வீரத்தையும், வீரத்தில் காதலையும் படைப்பாளர்கள் நயம்பட பதிவுசெய்துள்ளனர். ஒப்பீட்டு நிலையில் இக்கதைக்களங்களின் சிறப்பியல்புகளை இக்கட்டுரை ஆராய்கிறது.

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

கிளி பேசுகிறது! - விந்தன் (சிறுகதை)

 

கிளி பேசுகிறது! - விந்தன் (சிறுகதை)

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். தமிழ்நாடு அரசு 2008 - 2009 இல் இவரது நூல்களை நாட்டுடமை ஆக்கியது. தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார்.  தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது. கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது.

 

கதைக் கரு

சமூக நீதி, தன்மானம், விடுதலை, நன்றி, சுயநலம் என வாசிப்பாளர் அறிவுக்கேற்ப பல சிந்தனைகளைப் பெறமுடியும்.

கதாபாத்திரங்கள்

தாய் கிளி, கிளிக்குஞ்சு, சிட்டுக் குருவி, இரு சிறுமிகள்

கதைச் சுருக்கம்

 

ஒரு பெரிய பங்களாவைச் சுற்றிலும் பெரிய தோட்டம் இருந்தது.  அந்தத் தோட்டத்திலிருந்த ஒரு மாமரப் பொந்தில் தாய்க்கிளியும், கிளிக்குஞ்சும் வாழ்ந்து வந்தன. கிளிக்குஞ்சுக்கு வானத்தையும் பிற பறவைகளையும் பார்த்துத் தானும் பறக்கவேண்டும் என ஆசை. அவசரப்படாதே காலம் வரும்வரை காத்திரு எனத் தாய்க்கிளி

சொல்லியும் கேட்காமல் சிட்டுக் குருவி பறப்பதைப் பார்த்துத் தானும் பறந்து கீழே விழுந்தது கிளிக்குஞ்சு. கிளிக்குஞ்சின் ஓசை கேட்டு அந்த பங்களாவில் வாழும் ஒரு சிறுமி தூக்கி தன் அக்காவுடன் சேர்ந்து அதை வளர்த்தாள். அந்த சிறுமிகள் காட்டிய அன்பும் அவர்கள் தன்னால் பெற்ற ஆனந்தத்தையும் எண்ணி தனக்குள் பேசிக்கொண்ட கிளி எப்படியாவது இவர்களிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் எனக் காத்திருந்தது. அப்படியொரு வாய்ப்பும் கிடைத்தது. சிறுகு வளர்ந்துவிட்ட இந்தக் கிளி தன் அன்புக்குக் கட்டுப்பட்டது என அக்காவும், இல்லை சிறகுகளை வெட்டாவிட்டால் பறந்துவிடும் எனத் தங்கையும் சொல்ல. இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலில் கிளி என் அன்புக்குக் கட்டுப்பட்டது அது என்னை விட்டுப் போகாது என கூண்டைத் திறந்தாள் அக்கா.

இப்படியொரு வாய்ப்புக்காகத்தானே காத்திருந்தேன் என சுதந்திரமாகப் பறந்தது அந்தக் கிளி..

 

கிளிக்குஞ்சின் மனதில் தோன்றிய எண்ணங்களாக

ஆசிரியர் கூறுவன

அம்மா சொன்னதைக் கேட்காமல் அவசரப்பட்டுவிட்டோமே..

இந்தச் சிறுமிகளிடம் அடிமைப்பட்டுவிட்டோமே

இவர்கள்  காட்டும் அன்பும், உணவும் எனக்குத் தேவையில்லை

எனக்குத் தேவை சுதந்திரம்

நாய் நன்றியுள்ளது என்று சொன்னாலும் தன்மானமின்றி வாழ்வதும் வாழ்வா?

என கிளியின் எண்ணங்களாக ஆசிரியர் பல செய்திகளைப் பதிவுசெய்துள்ளார்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்று நாம் சொன்னாலும். பறவைகளின் மொழியை மனிதர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை என்ற கருத்தை விந்தன் நுட்பமாக எடுத்துரைக்கிறார்.

ஆசிரியரின் புலப்பாட்டுநெறி..

எல்லோருக்கும் பொதுவாக இயற்கை அளிக்கும் அந்தச் செல்வத்தை பங்களாவில் குடியிருந்த ஒரு சிலர்மட்டும் ஏகபோகமாக அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தங்களைப் போன்ற மனிதர்களைத்தான் அவற்றை அனுபவிக்க முடியாதபடி அவர்களால் தடுக்க முடிந்ததே தவிர, எங்களைப் போன்ற புள்ளினங்களை அவ்வாறு தடுக்க முடியவில்லை.

என பறவையினங்களின் சுதந்திரத்தையும் மனிதர்களின் சுயநலத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.

 

எங்களுடைய தயவு அவர்களுக்கு இல்லை யென்றால், அந்த இயற்கைச் செல்வத்தில் கொஞ்சமாவது அவர்கள் அனுபவிக்க முடியுமா?

என்ற கிளியின் கேள்வி வழியாக இயற்கையைப் பாதுகாப்பதில் பறவைகளின் பங்கை நினைவுபடுத்துகிறார்.

நாங்கள் அடிமைகளாயிருக்கவுமில்லை; விடுதலை கோரவும் இல்லை. நாடு எங்களுடையது; காடு எங்களுடையது; கடல் எங்களுடையது, வானம் எங்களுடையது; மலைகள் நதிகளெல்லாம் எங்களுடையவை; மரம், செடி, கொடி எல்லாமே எங்களுடையவைதான்.

என மனிதர்களுக்கும் பறவைகளுக்குமான வேறுபாட்டை இயம்புகிறார்.

ஆனால் எனக்கோ பழமும் வேண்டியிருக்கவில்லை; பாலும் வேண்டியிருக்கவில்லை. யாருக்குவேண்டும், இந்தப் பழமும் பாலும்? என கிளியின் விருப்பத்தைப் பதிவுசெய்துள்ளார்.

நிறைவாக..

கிளி பேசுகிறது..

உண்மையைப் பேசுகிறது.

மனிதர்களின் அறியாமையைப் பேசுகிறது.

மரங்களை வளர்ப்பதில் பறவைகளின் பங்கைப் பேசுகிறது.

அறிவுரைகளைப் புறக்கணிக்கக் கூடாது என்று பேசுகிறது..

நாயின் நன்றியைக் கொண்டாடினாலும் அதன் தன்மானமில்லா வாழ்வை இழிவாகப் பேசுகிறது.

கிளிக்குத் தேவை பாலும் பழமும் இல்லை! விடுதலை விடுதலை விடுதலை என சத்தமாகப் பேசுகிறது..

சிட்டுக்குருவியைப் பார்த்துப் பறக்க ஆசைப்பட்ட கிளிக்குஞ்சு, நாயைப் பார்த்து இப்படி வாழக்கூடாது என முடிவுசெய்தது.

நாயைப் போல நன்றியுள்ள விலங்கு என பெயரெடுப்பதைவிட கிளிக்குஞ்சைப் போல சுதந்திரமாக வாழ்வதே நல்வாழ்வு என்று இக்கதை வழியாக விந்தன் எடுத்துரைத்துள்ளார்.