Wednesday, April 10, 2013

திருமண அழைப்பிதழ் மாதிரி




பலருக்கும் பயன்படவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் இந்தத் திருமண அழைப்பிதழ் மாதிரியை அனுப்பிய கெளதமி விமல்குமார் அவா்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

Monday, March 18, 2013

சின்னச் சின்னத் தீப்பொறிகள்.


ஈழத்தமிழர்களுக்காக இளைய தலைமுறையினர் செய்துவரும் போராட்டங்களை சில அரசியல்வாதிகள் அரசியலாக்கப்பார்க்கின்றனர்.
சில ஊடகங்கள் காசாக்கப்பார்க்கின்றன.
இன்று நேற்று ஏற்பட்டதல்ல இந்தக் கோபம்.

நெடுங்காலமாகவே  சிறிது சிறிதாய் சேர்த்துவைத்த தீப்பொறிகள் இவை.

அதற்கான சான்று..



நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே
உயர்ந்தோங்கிய தூணோரம்
ஒதுங்கி நின்று
உள்ளே வரலாமா? என்று
“இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு
ஐம்பதாண்டு காலமாக
அடிதொழுது கிடக்கிறாள்
என் தாய்.

பள்ளிகளின்
வாயில்களுக்கு வெளியே
வறியவள் போல் நின்று
தான் பெற்ற குழந்தைகளுக்குத்
தாய் பாலூட்ட
ஆங்கிலச் சீமாட்டியிடம்
அனுமதி கோரி
கண்ணீரோடு காத்து நிற்கிறாள்
என் தாய்.

ஆலயத்துக்குள்ளே நடக்கும்
ஆறுகால பூசைகளில்
ஒரு காலத்துக்கேனும் என்னை
உள்ளே விடக்கூடாதா- என்று
சமசுகிருத எசமானியிடம்
தட்டேந்தி நிற்கிறாள்
என் தாய்.

இசை மன்றங்களின்
குளிரூட்டிய கூடங்களில்
துக்கடாவாக மட்டுமே
தூக்கி எறியப்படுவதைச்
சகித்துக் கொண்டு
நூலோரின் சங்கீத சபைக்குள்
நுளையமுடியுமா –என்று
தெலுங்கு தியாகையரிடம்
தேம்பி நிற்கிறாள்
என் தாய்.

டெல்லி வழி இந்தி
பள்ளி வழி ஆங்கிலம்
இறைவன் வழி சமசுகிருதம்
இசையின் வழி தெலுங்கு மொழி

என்ற நான்கு சங்கிலிகள்
கைகள் இரண்டிலும்
கால்கள் இரண்டிலும்
இரும்புத் தளைகளால்
இறுக்கப்பட்ட என் தாய்

அடைக்கப்பட்ட சிறையின் பெயர்
டெல்லி!

தேசியக் கொடியாட்சி
என்ற பெயரில் – இந்தியத்
தேசங்களின் மீது
கொடிய ஆட்சி
 

ஆளும் கொடிகள்
வண்ணங்கள் மாறலாம்
சின்னங்கள் மாறலாம்
எண்ணங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை

சற்றே திரும்பிப்பார்க்கிறேன்
என் – சரித்திரச் சாலையை

அன்று நான்
சோழனாக இருந்தேன்
சேரனாக இருந்தேன்
பாண்டியனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

அன்று நான்
சைவனாக இருந்தேன்
வைணவனாக இருந்தேன்
சமணனாக இருந்தேன்
பவுத்தனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

நான்

பல்லவனாக இருந்தேன்
சுல்தானாக இருந்தேன்
பாளையக்காரனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

பிரிட்டீஷ் இந்தியனாக இருந்தேன்
பிரெஞ்சு இந்தியனாக இருந்தேன்
போர்த்துகீஸ் இந்தியனாக இருந்தேன்
தமிழ் இந்தியனாக இருந்ததில்லை!

இன்று நான்

இந்துவாக இருக்கிறேன்
இஸ்லாமாக இருக்கிறேன்
ஏசுவாக இருக்கிறேன்
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!

நான்

சூத்திரனாக இருக்கிறேன்
பஞ்சமனாக இருக்கிறேன்
பழங்குடியாக இருக்கிறேன்
தமிழனாக இல்லை!

ஆயிரம் உண்டிங்கு சாதி
அத்தனைச் சாதியாகவும்
நான் இருக்கிறேன்
தமிழ்ச் சாதியாக மட்டும்
இருக்க மறுக்கிறேன்

அமெரிக்காவில் நான் கருப்பிந்தியன்
இலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி
டெல்லியில் நான் மதராஸி
அந்தமானில் நான் தோத்திவாலா
ஆந்திரத்தில் நான் அரவாடு
கேரளத்தில் நான் பாண்டிப்பறையா
கர்நாடகத்தில் நான் கொங்கா
ரிக் வேதத்தில் நான் தஸ்யூ
ராமாயணத்தில் நான் ராட்சசன்
சரித்திரத்தில் நான் திராவிடன்
எங்கேயும் தமிழனாக
ஏற்கப்படவில்லை நான்

அரசியல் சட்டத்தில்
என் பெயர் இந்தியன்
இந்தியத் தேர்தலில்
என் பெயர் வாக்காளன்
எங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை

தமிழ் நாட்டில் என் அடையாளம்
வன்னியன்,வேளாளன்,
கள்ளன்,கைக்கோளன்,
பள்ளன், பறையன்,
இத்தியாதி இத்தியாதி
என்று எத்தனையோ சாதி

செட்டியார் இனம்
ரெட்டியார் இனம்
என்பது போல்
சாதி தான் இனம் என்று எனக்குத்
தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்
தமிழன் என்ற இன அடையாளம்
சந்திரகிரகணமாகிவிட்டது……
 

என்பார் கவிஞர்.தணிகைச்செல்வன் . தற்போது தன் இனம், மொழி, நாடு குறித்த சிந்தனை இளைய தலைமுறையினரிடம் ஏற்பட்டிருப்பருப்பது வரவேற்கத்தக்கதாகவுள்ளது.



எல்லா ஆரம்பத்துக்கும் ஒரு முடிவு உண்டு!
எல்லா முடிவுக்கும் ஒரு ஆரம்பம் உண்டு!

என்பதை நடந்துமுடிந்த இனப்படுகொலையும்
நடந்துகொண்டிருக்கும் மாணவர் போராட்டமும் உணர்த்துகின்றன.
            
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
      ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே !

என்ற மகாகவி பாரதியின் வாக்கை மனதில் கொண்டு, நடக்கும்,இந்தப் போராட்டங்கள் எவ்விதமான உள்நோக்கங்களும் இன்றி, இனப்பற்று மற்றும் மொழிப்பற்றை மட்டுமே அடித்தளமாகக்கொண்டு நடந்துவருகின்றன என்பதை மாநில, மத்திய அரசுகள் உணர்ந்து மாணவர்களின் குரலைச் செவிமடுத்து அதை எதிரொலித்தால்தான் இந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வரும் என்பதை அரசு மட்டுமின்றி நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

LinkWithin

அகப்பொருள்.

1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (1) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (203) அன்று இதே நாளில் (5) அன்றும் இன்றும் (123) அறிவிப்பு (1) ஆசிரியர்தினம். (3) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (73) இயற்கை (31) ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் (2) ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் 2010 (1) உன்னையறிந்தால் (4) உயிருள்ளபெயர்கள் (எனது நூல்) (1) உளவியல் (77) எதிர்பாராத பதில்கள் (16) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (4) ஒரு நொடி சிந்திக்க (15) ஒலிக்கோப்புகள் (1) ஓவியம் (3) கதை (31) கருத்தரங்க அறிவிப்பு (9) கலித்தொகை (12) கலீல் கிப்ரான். (8) கலீல் சிப்ரான் (1) கலை (6) கல்வி (26) கவிதை (34) காசியானந்தன் கதைகள் (2) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (15) கால நிர்வாகம் (7) காலந்தோறும் பெண்கள் (1) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (42) குறுந்தொகை (87) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (19) சங்க இலக்கியத்தில் உவமை (36) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (17) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (7) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (4) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (22) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (4) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (23) சமூகம் (23) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (148) சிறப்பு இடுகை (10) சிறுபாணாற்றுப்படை (1) சென் கதைகள் (2) சொல்புதிது (1) தன்னம்பிக்கை (5) தமிழர் பண்பாடு (14) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (2) தமிழாய்வுக் கட்டுரைகள் (16) தமிழின் சிறப்பு (25) தமிழ் அறிஞர்கள் (11) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) திருக்குறள் (42) திருப்புமுனை (2) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (9) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (3) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொன்மம் (1) தொல்காப்பியம் (2) தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை முழுவதும் (1) தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை.. (1) தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை..... (1) நகைச்சுவை (112) நட்சத்திர இடுகை (3) நற்றிணை (49) நல்வழி (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிற்றுப்பத்து (1) பழமொழி (10) பழைய வெண்பா (1) பாராட்டுவிழா (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) பிள்ளைத்தமிழ் (1) புதிர் (2) புறத்துறைகள் (12) புறநானூறு (72) புள்ளிவிவரங்கள் (8) புவிவெப்பமயமாதல் (6) பெண்களும் மலரணிதலும் (2) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (5) பொன்மொழிகள் (10) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (3) மலைபடுகடாம் (1) மாணவர் படைப்பு (7) மாணாக்கர் நகைச்சுவை (31) மாமனிதர்கள் (2) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) யாப்பு (1) யுடியுப் (2) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (60) விழிப்புணர்வு (23) வேடிக்கை மனிதர்கள் (90) வைரமுத்து (7)