வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடி

செவ்வாய், 17 ஜூன், 2025

கடல் - அழகின் சிரிப்பு - பாரதிதாசன்

 

கடல்

மணல்அலைகள்
ஊருக்கு கிழ‌க்கே உள்ள
பெருங்கடல் ஓர மெல்லாம்,
கீரியின் உடல் வண் ணம்போல்
மணல் மெத்தைஅம்மெத் தைமேல்
நேரிடும் அலையோகல்வி
நிலையத்தின் இளைஞர் போலப்
பூரிப்பால் ஏறும்வீழும்;
புரண்டிடும்பாராய் தம்பி.

கீரியின் உடல் வண்ணத்தையும் கடற்கரையின் மணல் மெத்தையையும் ஒப்பிட்டு  உரைக்கிறார். கடல் அலை வந்து செல்வது கல்விநிலையத்துக்கு வரும் இளைஞர் போல என்றுரைக்கிறார். இவ்வாறு இயற்கையிடமிருந்து நாம் பெற்றதும் பெவேண்டியதும் நிறையவுள்ளன.

செவ்வாய், 25 மார்ச், 2025

மெய்ப்பாட்டியல் விளக்கம் (தொல்காப்பியம்)

 




உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு. 

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில்  மெய்ப்பாட்டியல் அமைந்துள்ளது

 

உணர்வுகளை ஆங்கிலத்தில் Emotion என்கிறோம்.

உடலசைவு மொழிகளை ஆங்கிலத்தில் Body language என்கிறோம்..

முகத்தில் தோன்றும் உணர்வுகளை Emoji என்ற குறியீட்டு மொழியில் வெளிப்படுத்தி வருகிறோம்..

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் என்பார் திருவள்ளுவர்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

உள்ளத்தனையது உயர்வு

 


வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான பண்புகளுள் குறிப்பிடத்தக்க நற்பண்பு ஊக்கம் ஆகும்.

சோம்பலின் இழிவைப் பற்றி மடியின்மை அதிகாரத்திலும், முயற்சியின் பெருமையை ஆள்வினையுடைமை அதிகாரத்திலும் மன உறுதி பற்றி வினைத் திட்பம் அதிகாரத்திலும் பேசிய திருவள்ளுவர் ஊக்கமுடைமை அதிகாரத்தில் ஊக்கத்தின் சிறப்பியல்புகளைப் பேசியுள்ளார்.

ஊக்கம் என்பது ஒருவருக்கு பல நிலைகளில் ஏற்படலாம். பட்டம் உயரே பறப்பதற்கு காற்று மிகவும் தேவையாகிறது. அதுபோல மனிதர்கள் உயர ஊக்கம் தேவைப்படுகிறது

ஊக்கத்தை மனதின் எழுச்சி, புத்துணர்ச்சி, உற்சாகம் என பலவாறு அழைக்கிறோம்..

ஊக்கத்தை உள் ஊக்கம், புற ஊக்கம் எனப் பிரிக்கலாம்.

உள் ஊக்கமானது மனதளவில் தோன்றக்கூடியது..

புற ஊக்கம் நம்மைச் சுற்றியுள்ளவர்களாலும் சூழல்களாலும் தோன்றுகிறது.

ஊக்கமது கைவிடேல் என்றார் ஔவையர். ஊக்கத்தை எப்போதும் கைவிடக் கூடாது என்பதுதான் இதன் பொருள் ஆனால் ஊக்கம் தரும் மதுவைக் கைவிடேல் எனச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு மது ஊக்கம் தருகிறது என்று நம்புகிறார்கள். மேலும் மதுவைப் போல பல போதைப் பொருள்கள் ஊக்கம் தருவதாக நம்புவோர் பலர் உள்ளனர். விளையாட்டுப் போட்டிகளில் கூட விளையாட்டு வீரர்கள், ஊக்கம் தரும் உணவுப்பொருள்களோ, போதைப் பொருள்களோ பயன்படுத்தியுள்ளனரா என சோதிப்பது வழக்கமாக உள்ளது.

ஊக்கம் ஒருவருக்கு எப்படித் தோன்றுகிறது..

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

இதுவும் கடந்துபோகும் - வானொலி உரை

 


இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் இரண்டு பக்கங்கள். இன்பம் சிரிப்பையும், துன்பம் அழுகையையும் வரவழைக்கிறது. உண்மையான நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ இன்பத்தைப் பகிர்ந்துகொண்டால் இரண்டு மடங்காகிறது. துன்பத்தைப் பகிர்ந்துகொண்டால் பாதியாகக் குறைகிறது. நமக்குப் பிடித்த செயல்களில் உள்ள துன்பங்களை மனம் கண்டுகொள்வதில்லை. நமக்குப் பிடிக்காத செயல்களில் உள்ள சிறு துன்பங்களையும்,  மனம் ஏற்றுக்கொள்வதுமில்லை, சகித்துக்கொள்வதுமில்லை. பக்குவமுடையவர்கள் இன்பங்களையும் துன்பங்களையும் சமமாகவே பார்ப்பார்கள். பக்குவத்தின் முதிர்ந்த நிலை துன்பத்திலும் சிரிப்பது.

 திருக்குறளில் (63) இடுக்கண் அழியாமை என்றொரு அதிகாரம் உண்டு

 இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில். - 621

துன்பம் வரும்போது சிரிஅதுதான் துன்பத்தை வெல்லும் வழி  என்றார் திருவள்ளுவர். துன்பத்தில் சிரிக்கமுடியுமா? அப்படிச் சிரித்தால் அவர்களை இந்த உலகம் எப்படிப் பார்க்கும். இவருக்கு மனநலம் ஏதும் பாதிக்கப்பட்டுள்ளதா என்றுதானே பார்க்கும்.  மருத்துவர் ஊசி போடும் போது குழந்தைகள் அழுவதைப் பார்த்திருப்போம். ஆனால் பெரியவர்கள் அழுவதில்லை. இது எப்படி சாத்தியமானது? இருவருக்கும் வலி பொதுவானதுதானே.. இருந்தாலும் வலியை ஏற்றுக்கொள்ள மனம் துணிந்துவிட்டால் துன்பங்கள் தெரிவதில்லை..