வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 7 பிப்ரவரி, 2011

உங்களுக்கு காக்கை பிடிக்கத் தெரியுமா..?



தம் வேலையை பாதுகாத்துக்கொள்ள, தன் தேவையை நிறைவு செய்துகொள்ள ஒருவரை அளவுக்கு அதிகமாகப் புகழ்வதைக் காக்கை பிடித்தல் என்று தான் இதுவரை நினைத்துவந்தேன்..
எனக்கு வந்த மின்னஞ்சல் இதன் உண்மையான பொருள் என்ன என்பதை எனக்குப் புரியவைப்பதாக இருந்தது..
அடுத்தவரின் கால், கையைப் பிடித்தலைத்தான் கால்+கையைப் பிடித்தலைத்தான் கால்கைபிடித்தல் என்று மாறி இன்று காக்கைபிடித்தல் என்று மாறியது என்பதைப் புரிந்துகொண்டேன்..

நம்மை ஒருவர் புகழும்போதும், இகழும்போதும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் நம்மைவெல்ல யாராலும் முடியாது!!

எனக்குக் காக்கை பிடிக்கத்தெரியாது....!!
உங்களுக்கு????

21 கருத்துகள்:

  1. எனக்கும் காக்கா பிடிக்கத் தெரியாது.... கடவுள் அருளால், தேவையும் வரவில்லை. :-)

    பதிலளிநீக்கு
  2. //உங்களுக்கு காக்கை பிடிக்கத் தெரியுமா..//

    தெரியுமே
    முதலில் வலையை விரிக்க வேண்டும். அதன் மீது சிறிதளவு சாதத்தினை தூவி விடவும். இப்பொழுது கா கா என கத்தவும். இப்பொழுது அந்த காகம் சாதத்தினை சாப்பிட வலையில் உட்கார்ந்தால் அந்த காகம் அந்த வலையில் வந்து மாட்டிகொள்ளும் அதை நாம் பிடித்து கொள்ளலாம்.
    இது கூட தெரியாதா முனைவரே உங்களுக்கு
    ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் தங்களின் உதவியால் ( http://www.paisalive.com/) முகவரியை நான் தெரிந்துக் கொண்டேன் .மிக்க நன்றி ...

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான். இதையும் படியுங்கள் நண்பரே....கடந்த டிசம்பரில் எழுதப்பட்ட என் பதிவு காக்கா பிடிக்க போறீங்களா? --ஒரு நிமிஷம்
    http://ragariz.blogspot.com/2010/12/blog-post_17.html

    பதிலளிநீக்கு
  5. காக்காவா...... கருப்பா கா கான்னு குலைக்குமே அதா....ஹா ஹா ஹா.....
    தகவலுக்கு நன்றி மக்கா இது எனக்கு புது தகவல்.....

    பதிலளிநீக்கு
  6. @Maiyalagan.k வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மெய்யழகன்

    பதிலளிநீக்கு
  7. @சசிகுமார் நீங்க நிறைய காக்க்க்கையப் பிடிச்சிருப்பிங்க போலருக்கே நண்பா..

    பதிலளிநீக்கு
  8. நீங்க சொல்லியிருக்கும் விஷயமும் மின்னஞ்சலில் வந்த விஷயமும் கிட்டத்தட்ட ஒன்றுதானே !

    பதிலளிநீக்கு
  9. காக்காய் வலிப்பு என்பது கூட "கால் கை வலிப்பு" என்பதில் இருந்து உருமாறி இருக்கலாம் ...

    காலப்போக்கில் ஒரு சொல் உருமாறி வேறொரு சொல்லாக மாறுவது எந்த இலக்கண வகையை சாரும் ?

    பதிலளிநீக்கு
  10. ஓ , இதுதான் காக்கை பிடித்தலா ?
    நானும் தெரிந்து கொண்டேன் ஐயா ..

    பதிலளிநீக்கு
  11. எனக்கும் காக்கா பிடிக்க தெரியாது அய்யா..!!! ஆனால் நீங்க சொன்ன தகவல் அருமை..!!!

    பதிலளிநீக்கு