நிலத்தை
மனிதன் வாங்குவதாகச் சொல்கிறான்
நிலம் தான் மனிதனை வாங்குகிறது
நிலத்தை வாங்கும்போது
மனிதன் ஏமாறுவதுபோல
மனிதனை வாங்கும்போது
சிலநேரம் நிலமும்
ஏமாந்துபோகிறது!
புகழ்பெற்று வாழ்வாங்கு
வாழந்தவரைச்
சுமக்கும் நிலம் பெருமிதம்
கொள்கிறது
அதன் முகம் பசுமை ஒளிவீசுகிறது!
புகழின்றி பத்தோடு பதினொன்றாய்
வாழ்ந்துதொலைத்தவரை வாங்கிய நிலம்
அழுது புலம்புகிறது.
அதன் முகம் வறட்சியாகவே உள்ளது.
வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா
யாக்கை பொறுத்த நிலம்
திருக்குறள் - 239
தொடர்புடைய இடுகை
சிலநேரம் நிலமும்
ReplyDeleteஏமாந்துபோகிறது!
உண்மை தோழரே..
வாசித்தேன்..வாக்கிட்டேன்..
சந்தேகம்
நன்றி கவிஞரே
Deleteஅருமை
ReplyDeleteநன்றி நண்பா
Deleteஅருமையான விளக்கம். தம்மை அகழ்வாரைத் தாங்கும் நிலமும் புகழில்லாரைத் தம்முள் தாங்கவியலாது விளையா நிலையை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளீர்கள். பகிர்வுக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteபுரிதலுக்கு நன்றி கீதா
Deleteஉன்னைச் சுமந்து என்ன பயன்
ReplyDeleteஊதாரியாய் திரிந்துவிட்டு மீண்டும் என் கருவறை புகுந்து
என்னை நீரற்றுப் போகச் செய்துவிட்டாயே...
சோம்பித் திரிந்து இறுதியில் யாருக்கும் பயனற்ற வாழ்க்கை வாழ்ந்து இடுகாடு செல்கையில் அவனை ஏற்க மறுக்கும் பூமித்தாயின் புலம்பல்.
அருமை அருமை
அருமையான படைப்பு முனைவரே.
அழகாகச் சொன்னீர்கள் நண்பரே நன்றி
Deleteஅருமையான விளக்கம்!
ReplyDeleteசா இராமாநுசம்
நன்றி புலவரே
DeleteArumai.
ReplyDeleteநன்றி நண்பா
Delete//நிலத்தை
ReplyDeleteமனிதன் வாங்குவதாகச் சொல்கிறான்
நிலம் தான் மனிதனை வாங்குகிறது//
மிக அருமையான வரிகள்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி இராம்வி
Deleteகவிதை வரிகளுக்குப் பிறகு உற்று யோசிக்கிறேன்.நிலம்தான் எம்மை வாங்குகிறது.சரியான உண்மை !
ReplyDeleteவருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி ஹேமா
Delete